Tuesday, April 13, 2010

பழங்குடியின மக்களுக்கு 1 சதவீத இடஒதுக்கீடு அரசாணை: புதுச்சேரி அரசுக்கு நன்றி!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 13.04.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

பழங்குடியின மக்களை ‘பிற்படுத்தப்பட்ட பழங்குடி’ என வகைப்படுத்தி கல்வி, வேலைவாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிட்டுள்ள புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மனதார பாராட்டுகிறோம்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்திய பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம், சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், பழங்குடியின மக்களுக்கு ‘அட்டவணை பழங்குடி’ (Scheduled Tribe - ST) என அங்கீகாரம் பெறுவதற்கு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி அம்மக்களுக்கு முழுமையான அங்கீகாரம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

 மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட 1989-ம் ஆண்டு முதல் பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் கிடைக்கப் தொடர்ந்துப் போராடியதை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

 பழங்குடியின மக்களுக்காக அர்ப்பணிப்போடு தொடர் போராட்டம் நடத்தி, வெற்றி கண்டுள்ள பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு தலைவர் திரு. ராம்குமார் அவர்களுக்கு எங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 இதேபோல், புதுச்சேரி அரசு முஸ்லிம்களுக்கும், மீனவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு அளித்து அரசாணையை காலதாமதம் செய்யாமல் உடனடியாக வெளியிட வேண்டும் என் வலியுறுத்துகிறோம். 

No comments: