tag:blogger.com,1999:blog-22484943.post2668834123010881543..comments2023-09-04T21:21:34.790+05:30Comments on புதுவை கோ.சுகுமாரன்: ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் காங்கிரசார் ரகளை: கட்சி, இயக்கத் தலைவர்கள் கண்டனம்!கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttp://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-22484943.post-90880621905433933482008-11-12T02:25:00.000+05:302008-11-12T02:25:00.000+05:30இலங்கைத் தமிழருக்கான ஒரு நிம்மதியான, நீடித்த தீர்வ...இலங்கைத் தமிழருக்கான ஒரு நிம்மதியான, நீடித்த தீர்வு பின்வரும் முறையில்தான் அமைய முடியும் என்பதை நீங்கள் முதலில் விளங்கிக் கொள்வது அவசியம். அதாவது, இலங்கையில் முயற்சிக்கப்பட்ட எல்லாத் தீர்வு முயற்சிகளுக்கும் தடையாகவும், இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைக்கு ஒரு அச்சுறுத்தலாகவும், விளங்குகின்ற புலிகளிடமிருந்து தமிழ்மக்கள் முதலில் விடுவிக்கப்பட வேண்டும். அந்த விடுதலையை இன்றுள்ள நிலையில் மாற்றுத்தமிழ் இயக்கங்களோ, இலங்கையிலுள்ள இடதுசாரிகளோ பெற்றுத்தரக்கூடிய நிலையில் இல்லை. இலங்கை அரசாங்கத்தால், அதாவது இலங்கை அரச படையால் மட்டுமே, புலிகளிடமிருந்து தமிழ்மக்களை விடுவித்தல் என்பது சாத்தியமாகும். இதனைத்தான் கிழக்கு மாகாணத்தில் இலங்கை அரசாங்கம் செய்தது. (இலங்கை அரசாங்கம் எப்பொழுதும் தமிழ்மக்களுக்கு எதிராகவே செயல்படுகிறது என்று நீங்கள் கருதினால், கிழக்குமாகாணத்தில் இராணுவ நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டபோது, கிழக்கு மாகாண தமிழ்மக்களுக்காக குரலெழுப்பாமல் நீங்கள் எல்லாம் எங்கு ஒழிந்து கொண்டீர்களோ தெரியவில்லை. அதனால்தான் தறபோதைய உங்கள் ஈழத்தமிழர் ஆதரவுக்கு பின்னால், தமிழ் அல்லது மனிதாபிமான உணர்வைவிட, புலிகளின் பணப்பட்டுவாடா விடயம்முக்கிய பங்கு வகிக்கிறதோ என்ற நியாயமான சந்தேகம் எமக்கெல்லாம் ஏற்படுகிறது!) அதைத்தான் இப்போது வடக்கிலும் இலங்கை அரசாங்கம் இப்பொழுது செய்கிறது. கிழக்கு மாகாணத்தில் புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையின்போது புலிகளின் பிடியிலுள்ள தமிழ்மக்கள் இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டை நோக்கியே ஓடிவந்தார்கள். வடக்கு மாகாணத்திலும் (மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி) புலிகளின் பிடியிலுள்ள தமிழ்மக்கள் இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டை நோக்கியே ஓடிவருகின்றார்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். புலிகளை அப்புறப்படுத்திய பின்னர், இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வு காணவேண்டியது இலங்கை அரசின் தட்டிக்கழிக்க முடியாத கடமையாகும். புலிகளை அழித்த பின்னர், இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வினை இலங்கை அரசு முன்மொழியுமென யாராலும் அறுதியிட்டும் கூறமுடியாது. எனவே புலிகளைத் தோற்கடித்துவிட்டு, இலங்கை தமிழர் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைக்காணும்படி இலங்கை அரசைக் கோருவதையே, தமிழக இடதுசாரி சக்திகள் செய்ய வேண்டும். அதுவே சர்வதேச இடதுசாரிகளின் சரியான நிலைப்பாடாக இருக்கமுடியும். அதைவிடுத்து, ஒவ்வொரு முறையும் புலிகள் அழிவை நெருங்கும்போது, ஏதாவதொருவெளிநாட்டு சக்தி புலிகளை பாதுகாத்து விடுவிப்பதின் மூலம், ஈழத்தமிழர்களின்; பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்படாமல் இழுபட்டுச் செல்வதற்கு உதவுவதாகவே முடியும். இதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்வது அவசியம். <BR/><BR/>http://www.thenee.com/html/111008-4.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-57389196697828825302008-11-12T01:40:00.000+05:302008-11-12T01:40:00.000+05:30இவனுங்க ரொம்ப யோக்கியனுங்க. அதான் அவங்க கட்சி நகரச...இவனுங்க ரொம்ப யோக்கியனுங்க. அதான் அவங்க கட்சி நகரசபை துணைத்தலைவி மகன் பண்ண அராஜகம்தான் ஊர் பூரா சிரிக்கும்படி ரிப்போர்டரில் வந்ததே. அதாங்க அந்த அப்பாவி பெண்களை விபசாரியாக்கிய கொடுமைகள். அதைக்கூட அழகா ’செட்டில்’ பண்ணாங்களே. இவங்களா ஈழத்தமிழச்சிகளை பார்த்து கவலைப்பட போறானுங்க! <BR/><BR/>நாசமா போகப்போறானுங்க பாருங்க.புதிய கோணங்கி !https://www.blogger.com/profile/15642430864760374585noreply@blogger.com