tag:blogger.com,1999:blog-22484943.post8965619317715354264..comments2023-09-04T21:21:34.790+05:30Comments on புதுவை கோ.சுகுமாரன்: அது ஒரு பொடா காலம் (பகுதி-4) சுப.வீரபாண்டியன்கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttp://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-22484943.post-13322708454767997012007-05-06T17:50:00.000+05:302007-05-06T17:50:00.000+05:30என் மேல் இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ள அனானி நண்பரே!...என் மேல் இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ள அனானி நண்பரே! மிக்க நன்றி.<BR/><BR/>பொடா சட்டம், அது சட்ட முன்வரைவாக இருந்த போதே, யாரும் எதிர்த்து ஒன்றும் செய்யாத அக்கால கட்டத்திலேயே, அதை எதிர்த்து புதுச்சேரியில் மிகப் பெரும் பேரணி-மாநாடு நடத்தியவன் என்ற முறையில் பொடா குறித்து எந்த செய்தி வந்தாலும், அதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவது என் கடமை என்று நினைக்கிறேன்.<BR/><BR/>சுபவீ-யின் வலை தளத்தைப் பார்ப்பவர்கள் அனைவரும் என் தளத்தையும் பார்ப்பார்கள் என்பதும், என் தளத்தைப் பார்ப்பவர்கள் சுபவீ-யின் தளத்தைப் பார்ப்பார்கள் என்பதும் தவறானது. உங்களைப் போன்ற வலை தளத்தில் உட்புகுந்து வருபவர்களுக்கு திரும்ப திரும்ப படிப்பது ஒரு வேலை ’போர்’ அடிக்கலாம். ஆனால், குறிப்பிட்ட தளங்களை மட்டுமே பார்ப்பவர்களுக்குச் சென்றடைய வேண்டுமென்பதால் அவ்வாறு மறுபதிப்பு செய்கிறேன்.<BR/><BR/>’தான் படித்ததை பிறரும் படிக்கத் தருவது குற்றமல்ல..’ - அனானி.<BR/><BR/>இன்னொன்றையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நான் களப்பணிக்கு முன்னுரிமைக் கொடுப்பவன். இதனால் பல சந்தர்ப்பங்களில் எழுத நிறைய இருந்தும் எழுத முடியாமல் போய்விடுவது உண்மைதான்.<BR/><BR/>நான் முன்னெடுக்கும் சிக்கல்கள், அது தொடர்பாக விடுக்கும் அறிக்கைகள், போராட்ட செய்திகள், கருத்துகள், புகைப்படங்கள்... என ஒரு பன்முகப்பட்ட கருத்துப் பெட்டகமாகத்தான் என் தளத்தை உருவாக்கி வருகிறேன். இதில் குறைந்த அளவே மற்றவர்களின் செய்திகளைப் பதிகிறேன். இதற்கே இப்படியா? <BR/> <BR/>எனினும் தங்கள் கருத்துகளுக்கு மதிப்பளிகிறேன். மீணடும் நன்றி.கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttps://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-41834899189894918772007-05-06T15:26:00.000+05:302007-05-06T15:26:00.000+05:30சுபவீ-யின் பொடா காலம் சுகுமாரன் பக்கத்தில் ஏன்? s...சுபவீ-யின் பொடா காலம் சுகுமாரன் பக்கத்தில் ஏன்? subavee.blogspot.com இருக்கிறதே.. சுகுமாரன் ஒரு சாதாரண வலை மேய்பவராக இருந்து.. தான் படித்ததை பிறரும் படிக்கத் தருவது குற்றமல்ல.. ஆனால்.. சுகுமாரனையும் ஒரு களப்பணியாளராக பார்க்கும் என்னைப் போன்றவர்கள்.. அவரிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்.. அவருடைய நேரடியான அனுபவங்களையும் கருத்துக்களையும் இன்னும் நிறைய அறிந்து கொள்ள ஆசைப்படுகிறோம்.. இம்மாதிரி ஏற்கெனவே இதழ்களில் அல்லது பிற வலைப் பக்கங்களில் வெளி வந்த செய்திகளை அல்ல.. இதே பாணியில் உங்கள் பக்கம் தொடர்ந்தால்.. வெகு விரைவில் அதற்கு வரவேற்பு குறைந்துவிடும்.. அதனால் நண்பர் சுகுமாரன் அவர்களே.. குற்றம் சாட்டுவதாக எண்ணாது.. புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். விரைவில் புதிய பொலிவோடு உங்கள் தளத்தை காண விரும்புகிறேன்.Anonymousnoreply@blogger.com