Wednesday, June 30, 2010

புதுச்சேரி ஒப்பந்த ஆசிரியர் தேர்வில் மதிப்பெண் திருத்தி ஊழல் முறைகேடு: கண்டன ஆர்ப்பாட்டம்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வித் துறையில் ஒப்பந்த ஆசிரியர் தேர்வில் மதிப்பெண் திருத்தி நடந்த மோசடியில் தொடர்புடைய இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் 2-ந் தேதியன்று காலை 10 மணியளவில், பெருந்தலைவர் காமராசர் கல்வித் துறை வளாகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமையில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் சீ.சு.சாமிநாதன், பெற்றோர் ஆசிரியர் மாணவர் நலச் சங்கத் தலைவர் மு.நாராயணசாமி, புதுச்சேரி மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கப் பொதுச்செயலாளர் பா.சரவணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில் புதுச்சேரியின் பல்வேறு அரசியல் கட்சி மற்றும் இயக்கத் தலைவர்கள் கலந்துக் கொண்டு கண்டன உரையாற்றுகின்றனர்.

மதிப்பெண் திருத்தி ஊழல், மோசடி செய்த பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முறைகேடாக தேர்வுச் செய்யப்பட்ட ஆசிரியர் நியமனப் பட்டியலை ரத்து செய்து தற்போது அவர்களுக்கு நடந்து வரும் பயிற்சி வகுப்பையும் ரத்து செய்ய வேண்டும். புதிதாக ஆசிரியர்களை முறையாகவும், வெளிப்படையாகாவும் தேர்வுச் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

Wednesday, June 23, 2010

புதுச்சேரியில் 7 ஆண்டு சிறை முடித்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் - மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை

தமிழக அரசைப் பின்பற்றி புதுச்சேரி அரசும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

22.06.2010 அன்று, காலை 11 மணியளவில், புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் தமிழகத் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் புதுச்சேரி தலைவர் இர.அபிமன்னன், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேராசிரியர் அ. மார்க்ஸ் கூறியதாவது:

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி தமிழக அரசு 10 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பட்ட கைதிகள் 500 பேரை விடுதலை செய்யப் போவதாக அறிவித்துள்ளது. புதுச்சேரி அரசும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.

தமிழக அரசு அண்ணா பிறந்த நாளில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதிகள் 2006-ல் 472 பேரையும், 2007-ல் 190 பேரையும், 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதிகள் 1409 பேரையும், 2009-ல் 10 பேரையும் விடுதலை செய்துள்ளது.

புதுச்சேரி அரசு 1999 முதல் 2009 வரை 14 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதிகள் 11 பேரை மட்டுமே விடுதலை செய்துள்ளது. அதில் 8 பேர் புதுச்சேரி மத்திய சிறையிலும், 3 பேர் தமிழக சிறைகளிலும் இருந்தவர்கள். கடைசியாக ஒரு பெண் கொலை வழக்கில் தண்டனை அடைந்த, 2009-ல் 14 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதி செல்லிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவரை விடுதலை செய்துள்ளது.

புதுச்சேரியில் ஆயுள் தண்டனைக் கைதிகள் 78 பேர் உள்ளனர். இதில் 43 பேர் 7 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்கள் அனைவரையும் புதுச்சேரி அரசு விடுதலை செய்ய வேண்டும்.

இந்திய அரசியல் சட்டம் பிரிவு 161 மாநில ஆளுநர்களுக்கும், பிரிவு 72 குடியரசுத் தலைவருக்கும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 435 மாநில அரசுக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையைக் குறைத்து விடுதலை செய்யும் அதிகாரத்தை வழங்கியுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 1999, 2003 ஆகிய ஆண்டுகளில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வழிகாட்டுதல் ஒன்றை மாநில தலைமைச் செயலர்களுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகிகளுக்கும் அனுப்பியுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. புதுச்சேரி அரசு மத்திய அரசை அணுகி மேற்சொன்ன 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த 43 ஆயுள் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தியாளர்: புதுச்சேரி சிறையில் ஆயுள் கைதிகள் உள்ளிருந்தவாறே கொலைத் திட்டம் தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள், அவர்களை விடுதலை செய்தால் என்ன ஆவது?

புதுச்சேரி சிறையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகள் அனைவரும் கொலைக் குற்றத்தில் ஈடுபடுவதில்லை. ஒரு சிலர் மட்டுமே அவ்வாறு கொலை செய்ய தூண்டுதலாக உள்ளனர். புதுச்சேரி சிறையில் செல் போன்கள் இயங்க முடியாத வகையில் ஜாமர் கருவிப் பொறுத்த வேண்டுமென பல காலமாக கூறி வருகிறோம். அரசு அதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. புதுச்சேரி போலீசாருக்கும் ஜாமர் கருவி பொறுத்துவதில் சிக்கல் இருக்கிறது. தற்போது குற்றம் நடந்தால் சிறையில் உள்ள கைதிகளின் செல் போன்களைக் கண்காணித்து குற்றவாளிகளை அடையாளம் காணுகின்றனர். அதனால், ஜாமர் கருவிப் பொறுத்துவதைப் போலீசும் விரும்பவில்லை. போலீசார் உறுதியான நடவடிக்கை எடுத்தால் சிறையிலிருந்தே நடத்தப்படும் குற்றங்களைத் தடுக்க முடியும்.

ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்வதில் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக ஒருவருடைய நன்னடத்தை, உளவியல் ரீயான மாற்றம், குடும்பத்தினரோடு பழகும் விதம், கல்வியறிவு, மன மாற்றம், செய்த குற்றம் என பல்வற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் விடுதலை செய்கிறார்கள். வெறுமனே 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதிகள் அனைவரையும் எங்கும் விடுதலை செய்யப்படுவதில்லை.

தமிழகத்தில் அண்ணா நூற்றாண்டையொட்டி விடுதலை செய்ய்யப்பட்ட 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதிகள் 1405 பேரில் 7 மட்டுமே திரும்பவும் சிறிய குற்றங்களில் சிறைக்கு வந்துள்ளாதாக தமிழக சிறைத் துறை ஐ.ஜி. சியாம் சுந்தர் அளித்துள்ள புள்ளி விவரம் கூறுகிறது. எனவே, சிறையில் இருந்து வெளியே வந்த அனைவரும் குற்றம் செய்வார்கள் என்பது ஏற்புடையதல்ல.


செய்தியாளர்: போலியான மனித உரிமை அமைப்புகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? புதுச்சேரியில் மனித உரிமை அமைப்பு என்ற பெயரில் குழந்தைகளைக் கடத்திய பெண் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளார்களே?

மனித உரிமை என்ற பெயரில் சிலர் தவறு செய்வதை நாங்கள் அறிவோம். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஒரு சிலர் செய்வதை வைத்துக் கொண்டு தமிழக அரசு மனித உரிமை என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று சட்டம் போட்டுள்ளது தவறானது. உலகம் முழுவதும் மனித உரிமை 150 மேற்பட்ட அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

செய்தியாளர்: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை எதிர்த்து சுவரொட்டி ஒட்டியவர்களை தமிழகப் போலீஸ் கைது செய்துள்ளதே?

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை எதிர்த்து சுவரொட்டி ஒட்டியவர்களை தமிழகப் போலீஸ் கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. செம்மொழி மாநாட்டை ஆதரிக்க உரிமை உள்ள போது அதை எதிர்க்கும் உரிமையும் வேண்டும். சுவரொட்டி ஒட்டியவர்கள் மட்டுமல்ல திருநெல்வேலியில் எஸ்.எம்.எஸ். அனுப்பியவர்களையும் தமிழகப் போலீஸ் பிடித்துச் சென்று மிரட்டியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, June 22, 2010

விழுப்புரம் மாவட்டம் சித்தணியில் நடந்த தண்டவாளத் தகர்ப்பும் அதையொட்டிய காவல்துறைஅத்துமீறல்களும்!

சென்னை- திருச்சி அகல ரயில் பாதையில் பேரணி ரயில் நிலையத்திற்கும் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள சித்தணி கிராமத்தின் அருகில் ரயில் பாதையில் ஜூன்12ஆம் நாள் இரவு சுமார் 2 மணியளவில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் தண்டவாளம் தகர்ந்து மலைக்கோட்டை ஏக்ஸ்பிரஸ் ரயில் பெரும் விபத்திலிருந்து மயிரிழையில் தப்பிய செய்தி தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பெரும் உயிரிழப்பை எற்படுத்தக்கூடிய இத்தகைய செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. எத்தகைய நியாயமான நோக்கங்களுக்காக இத்தகைய நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் இதன மூலம் அந்த நியாயங்களைப் பெற்றுவிடவும் இயலாது.

இந்தத் தண்டவாளத் தகர்ப்பிற்குக் காரணமானவர்கள் யார் என்பது குறித்து இதுவரை புலனாய்வில் எந்த முக்கியத் தடயமும் கிடைக்காத நிலையில் இது குறித்த விசாரணை ஏன்ற பெயரில் விழுப்புரம் மற்றும் அதைச் சுற்றிலும் வாழ்கின்ற தமிழுணர்வுள்ள இளைஞர்கள் சிலர் காவல் துறையால் கடும் துன்பத்திற்கு ஆட்படுத்தப்படுவது குறித்து மனித உரிமை செயலாளிகளான எங்களுக்குத் தொடர்ந்து தகவல்கள் வந்ததையொட்டி இது குறித்த உண்மைகளை அறிய கீழ்க்கண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

1. பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், (PUHR) சென்னை.

2. கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, (FPR) புதுச்சேரி.

3. பேரா. சே.கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம், (PUCL) காரைக்குடி.

4. பி.வி.ரமேஷ், மனித உரிமைகள் கண்காணிப்புக் கழகம், விழுப்புரம்.

5. M. பரக்கத்துல்லா வழக்குரைஞர் , மனித உரிமை அமைப்புகளுக்கான தேசிய
கூட்டமைப்பு, (NCHRO) திண்டுக்கல்.

6. மு.சிவகுருநாதன், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், (PUHR) திருவாரூர்.

7. இரா. முருகப்பன், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம், திண்டிவனம்.

8. பாஸ்கர், வழக்குரைஞர், மக்கள் கண்காணிப்பகம், வேலூர்.

9. லூசியானா, வழக்குரைஞர், மனித உரிமை இயக்கம்,

11. ஆ.ராஜகணபதி, வழக்குரைஞர், திண்டிவனம்.

11. சு.காளிதாஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, (FPR) புதுச்சேரி.

12. ரஸ்கின்ஜோசப், வழக்குரைஞர், விழுப்புரம்.

13. ஜெயராமன், மக்கள் கண்காணிப்பகம், பண்ருட்டி.

இக்குழுவினர் நேற்று (ஜூன்-18) அதிகாலை முதல் க்யூ பிரிவு போலிசாரால் மூன்று நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட 11 தமிழுணர்வுள்ள இளைஞர்கள் மற்றும் விழுப்புரம், சித்தணி பகுதிகளிலுள்ள பொதுமக்கள், விழுப்புரத்திலுள்ள முக்கிய அரசியல் கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்தது. வீடு புகுந்து க்யூ பிரிவு போலீசாரால் சோதனையிடப்பட்ட தமிழுணர்வுள்ள 3 இளைஞர்களின் வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டது. சித்தணியில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கும், பேரணி ரயில் நிலையத்திற்கும் சென்று சம்பவ இடத்தையும், முக்கிய ஆவணங்களையும் பரிசீலித்தது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட விக்கிரவாண்டி காவல்நிலைய ஆய்வாளர் டி.விவேகானந்தன், விழுப்புரம் சரக டிஐஜி மாசானமுத்து ஐபிஏஸ்., சிறப்பு புலனாய்வுக்கு நியமிக்கப்பட்டுள்ள வேலூர் க்யூ பிரிவு ஆய்வாளர் சுந்தரம் ஆகியோருடன் நேரிலும் தொலைபேசியிலும் உரையாடியது. பேரணி ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் சங்கரவடிவேலுவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு சில அய்யங்களைத் தெளிவுப்படுத்திக் கொண்டது.

மேற்கண்ட விசாரணைகளின் ஊடாக அறிய வந்த உண்மைகள்:

1.ஜூன் 12இம் தேதி இரவு சரியாக 1:45 மணியளவில் கம்பன் ஏக்ஸ்பிரஸ் (வண்டி ஏண். 6173) சம்பவ இடத்தைக் கடந்து சென்றுள்ளது. இந்த ரயிலின் வருகையால் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சேலம் ஏக்ஸ்பிரஸ் (1064) சற்று பின் சம்பவ இடத்தைத் தாண்டிச் சென்றவுடன் சரியாக 2:08 மணியளவில் அவ்வண்டியின் கார்டு ராஜாராமன் வாக்கிடாக்கி மூலம் பேரணி நிலையத்திற்கு அனுப்பிய செய்தி பதிவேட்டில் (டிஏஸ்இர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. 145/10-2, கி.மீ தொலைவில் ரயில் கடக்கும்போது ஓரு பெரும் சத்தம் ஓன்றை உணர்ந்ததாக கார்டு கூறியதை யொட்டி அடுத்து வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் (6178) இரவு 2:23 மணியளவில் நிறுத்தப்பட்டதனால் பெரும் விபத்தொன்று தவிர்க்கப்பட்டது. அருகில் சென்று பார்த்த பொழுது 98செமீ நீளத்திற்கு ஓருபக்கத் தண்டவாளம் இல்லாதிருந்ததும் அவ்விடத்தில் உள்ள சரளைக் கற்கள் முற்றிலும் சிதறிப் பள்ளம் ஓன்று உருவாகி இருந்ததும் கண்டறியப்பட்டது.

அருகில் ஊள்ள கிணறு ஒன்றின் மின்சார இணைப்பைப் பயன்படுத்தி சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு ஒன்றின் மூலம் தண்டவாளப் பெயர்ப்பு நடத்தப்பட்டிருந்தது தெரிந்தது. சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் அவ்விடத்தைக் கடக்கும்முன்னர் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததா இல்லை கடந்த பின்னர் நடந்ததா என்பது குறித்து ஆதிகாரிகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சுமார் 1மீட்டர் நீளத்திற்கு ஒரு பக்கம் மட்டும் தண்டவாளம் இல்லாத நிலையில் அதிவேகமாகச் செல்லும் ஓரு ரயில் விபத்தின்றி கடந்துவிட வாய்ப்புண்டு எனச் சிலர் கூறுகின்றனர். இது குறித்து நுணுக்கத்திறன் உள்ள பொறியாளர்களே கருத்துக் கூற முடியும் என்றாலும் தானறிந்த வரையில் அவ்வாறு நடப்பது சாத்தியமில்லை எனவும், அவ்வாறு நடந்திருந்தால் அது ஓர் அதிசயம் (Miracle) எனவும் நிலைய ஆதிகாரி சங்கரவடிவேலு குறிப்பிட்டார். சித்தணியைச் சேர்ந்த ஜெயா என்கிற பெண்மணி முதலில் வெடிச்சத்தம் கேட்டதாகவும் அதன் பின்னர் ரயில் ஓன்று கடந்த சப்தம் கேட்டதாகவும் கூறினார். தண்டவாள பெயர்ப்புக்குப்பின்னும் சேலம் ஏக்ஸ்பிரஸ் விபத்தில்லாமல் கடந்துள்ளது என மக்கள் நம்புகிறார்கள் என்றாலும், இது குறித்த நுணுக்கத்திறன் பெற்ற பொறியாளர்கள் மற்றும் தடயவியல் வல்லுநர்கள் இறுதி முடிவு தெரிவிக்காதவரை ஏந்த முடிவுக்கும் வர முடியாது என்றார் டிஐஜி மாசானமுத்து. எப்படி irunthalum கவனமாக செயல்பட்டு விபத்தைத் தடுக்க ரயில்வே ஊழியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

சம்பவ இடத்தில் கைரேகை உள்ளிட்ட எந்தத் தடயங்களும் கிடைக்கவில்லை என்றார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த விக்கிரவாண்டி காவல் நிலைய ஆய்வாளர் விவேகானந்தன். எனினும் முதல் தகவல் அறிக்கையில் (குற்ற ஏண் 259/2010) கீழ்க்கண்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடிமருந்த பொருள் சட்டம் பிரிவு 3 மற்றும் ரயில்வே சட்டப் பிரிவுகள் 150(2) (b), 151 (1) (2), பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல் சட்டப்பிரிவு 4, சட்ட விரோத நடவடிக்ககள் தடுப்புச் சட்டப்பிரிவு 13, மற்றும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 307 ஆக இன்றுவரை யார் செய்தார்கள் என்பது குறித்து எந்தத் துல்லியமான தகவல்களும் புலன்விசாரிக்கும் காவல்துறைக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

2. தண்டவாளத் தகர்ப்பு நடந்த அடுத்தநாளே காவல்துறை இயக்குநர் லத்திகா சரண் ஓரு குறிப்பிட்ட இயக்கத்திர்ும் தரும் தொடர்பு இல்லை எனக் கூறினார். சம்பவ இடத்தில் கிடந்ததாகக் கூறப்படுகிற ஒரு துண்டறிக்கையை மையமாக வைத்து விடுதலைப்புலிகள் ஆதரவு - தமிழ் தேசிய சக்திகள் மட்டுமே இதைச் செய்திருக்க முடியும் ஏன்ற ஒரே கோணத்தில் மட்டும் காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. அந்த அடிப்படையில் புலன் விசாரணை ஜூன் 14 அன்று க்யூ பிரிவிற்கு மாற்றப்பட்டது. இதறதிடையில் ஜூன் 12இம் தேதி பகல் தொடங்கி தமிழ் தேசிய உணர்வுடைய கீழ்க்கண்ட 11 இளைஞர்கள் க்யூ பிரிவு காவலர் கார்த்திக் என்பவரின் அடையாளம் காட்டலில் பிடித்துச் செல்லப்பட்டனர்.

1. கா.பாலமுருகன் (ஏ) தமிழ்வேங்கை (24), த.பெ. காசிநாதன், விழுப்புரம்.
தமிழர் தேசிய இயக்கம், ஏல்ஒசி முகவர், பிடித்துச் செல்லப்பட்ட தேதி : ஜூன்-12.

2. ஏழில் ஈளங்கோ, (43), த.பெ. விழுப்பறையனார், விழுப்புரம்.
தமிழர் தேசிய இயக்கம்,ஜூன்-12.

3. ஜோதி நரசிம்மன் (36), த.பெ. பாண்டுரங்கன், விழுப்புரம்.
தொலைக்காட்சி நிருபர், தமிழர் தேசிய இயக்கம்,ஜூன்-12.காலை 9-20

4. ஐழுமலை (37), த.பெ. தேவராஜ், ப. வில்லியனூர்.
புத்தக விற்பனையாளர், தமிழர் கழகம்,ஜூன்:12, காலை 11-மணி.

5. பாபு (37), த.பெ. கோதண்டம், அச்சகம், விழுப்புரம்.
தமிழர் தேசிய இயக்கம், ஜூன்-12. பகல் 2-00

6. குமார் (37), த.பெ. கலியபெருமாள்,
தமிழர் தேசிய இயக்கம், ஊளுந்தூர்பேட்டை. ஜூன்-12. இரவு 10-30.

7. சக்திவேல் (40), த.பெ. அண்ணாமலை,
திமுக கிளை செயலாளர், செஞ்சி.

8. கணேசன் (43), த.பெ. கோதண்டபாணி,
தமிழர் தேசிய இயக்கம், விழுப்புரம்.. ஜூன்-12. காலை 11-00 மணி

9. ராஜநாயகம் (39), த.பெ. நாராயணசாமி,
ம.தி.மு.க. செஞ்சி.ஜூன் 13, இரவு 1 மணி.

10. சிவராமன் (41), த.பெ. பலராமன்,
தமிழர் தேசிய இயக்கம், விழுப்புரம்.ஜூன்-14. காலை 7-15

11. ஜெயராமன் (32), த.பெ. ஜானகிராமன்,
தமிழர் தேசிய இயக்கம், விழுப்புரம்.ஜூன்-12. இரவு 11-00

இவர்கள் அனைவரும் விழுப்புரத்தை ஒட்டியுள்ள காணை (3பேர்), கெடார் (2பேர்), கஞ்சனூர் (3பேர்) வளவனூர் (2பேர்) சத்தியமங்கலம் (ஒருவர்) ஏன மேற்கூறிய பல்வேறு காவல் நிலையங்களில் வைத்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டனர். வெறுந்தரையில் உட்காரச் சொல்லி தொடர்ச்சியாக 5 மணிநேரம் பின்னர் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் 5 மணிநேரம் என மாறி மாறி பல்வேறு காவல்துறைப் பிரிவினர், அதிகாரிகள் ஆகியோர் ஒரே மாதிரியான கேள்விகளைத் திருப்பித் திருப்பி கேட்டுள்ளனர். 1 முதல் 9 வரை மேலும் கீழுமாக எழுதுதல், ஆங்கில தமிழ் எழுத்துக்களை எழுதுதல் என்றவாறு விசாரணை தொடர்ந்துள்ளது. ஓரு சிலரை இரண்டாம் நாள் இரவு உறவினர் மற்றும் நண்பர்களிடம் ஜாமீன் கடிதம் வாங்கிக் கொண்டு அனுப்பி மீண்டும் அடுத்தநாள் வரவழைத்துள்ளனர். தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறனை ஊனக்கு எவ்வாறு தெரியும்? அவர் ஏன் முதல்வர் கருணாநிதியை துரோகி என்றெல்லாம் பேசுகிறார்? நீ விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறாயா? இந்த சம்பவத்தை ஏன் செய்தாய்? கடந்த 5 நாட்களில் யார் யாரை எல்லாம் சந்தித்தாய்? - முதலான கேள்விகள் திரும்பத் திரும்ப கேட்கப்பட்டன.

இதறகஈதிடையில் பிடித்துச் செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜூன் 15இம் நாள் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். இது தொலைகாட்சிகளில் அறிவிக்கப்பட்டவுடன் அன்று இரவு 11.00 மணியளவில் அனைவரும் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அது முன்னதாக ஒவ்வொருவரிடமும் தாங்கள் ஒவ்வொரு நாளும் மாலை வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதாக எழுதித்தருமாறு கேட்டனர். வற்புறுத்தப்பட்டதன் பேரில் ஒரு சிலர் அவ்வாறு எழுதியும் கொடுத்தனர். ஒருசிலர் அப்படி எழுதிக் கொடுக்க மறுத்தனர். இன்னும் ஒரு சிலரிடம் ஆஜர் முச்சரிப்பில் மேலே சிலவரிகள் இடைவெளிவிட்டு கையொப்பங்கள் பெறப்பட்டன. எல்லோரின் கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன, புகைப்படங்களும் எடுக்கப்பட்டன. வெளியே செல்லும் போது வீடியோக்களும் எடுக்கப்பட்டுள்ளன.

ஜூன் 15இம் தேதியன்று எழிலஇளங்கோ, ஜோதிநரசிம்மன் ஆகியோர் வீடுகளுக்குச் சென்று சுமார் 3மணிநேரம் அறைகளைக் கலைத்துச் சோதனையிடப்பட்டுள்ளது. தமிழ்வேங்கை இல்லத்தில் 16ம் தேதி இவ்வாறு சோதனையிடப்பட்டது. ஏழில்ஈளங்கோவின் வீட்டில் ஒருகதவின் பூட்டையும் உடைத்துள்ளனர். அனைவரின் வீடுகளிலும் புத்தகங்கள், குறுந்தகடுகள், செல்போன்கள் போன்றவற்றை கைப்பற்றிச் சென்றுள்ளனர். எழில் இளங்கோ வீட்டில் அவரை கைது செய்ய வந்தஅன்று யாரும் இல்லாத நிலையில் அவரது தந்தையின் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே இருந்த பொருட்களையும் கலைத்துள்ளனர். ஆண்கள் இல்லாத நேரத்தில் ஏழில் இளங்கோ வீட்டில் அவரது மனைவி கோதை, தமிழ்வேங்கை வீட்டில் அவரது மனைவி மங்கையர்கரசி ஆகியோர் தனியாக இருந்தபோது இச்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்வேங்கையின் மனைவி மங்கையர்கரசி அச்சத்தால் உள்ளிருந்த கதவை தாளிட்டிருந்த நிலையில் காவல்துறையினர் குறிப்பாக க்யூ பிரிவு கார்த்திக் கதவை திறக்கச்சொல்லி வற்புறுத்தியுள்ளார். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வரும்வரை கூட காத்திருக்க தயாராக இல்லை.

இங்கொன்றைச் சொல்வது முக்கியம். இவர்கள் அனைவரும் வெளிப்படையாகவும், ஜனநாயகப்பூர்வமாகவும் பலகாலமாக விழுப்புரத்தில் இயங்கி வருபவர்கள். இச்சம்பவம் காவல்துறைக்கு தொடர்பாக விசாரிக்க அவர்கள் தொடர்பு கொள்ளப்பட்டபோது அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பைத் தந்துள்ளனர். கூப்பிட்டபோதெல்லாம் எங்கு வரச்சொன்னாலும் அங்கு சென்று தங்களை ஒப்படைத்துள்ளனர். அனைத்து கேள்விகளுக்கும் முறையாகவும், சோர்வின்றியும் பதிலளித்துள்ளனர். எனினும் இவர்களை 4 நாட்கள் சட்டவிரோதமாக க்யூ பிரிவு காவல்துறையினர் அடைத்து வைத்து மனஅளவிலான சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளனர்.

3. நான்கு நாட்கள சட்டவிரோதக் காவலில் தடுத்துவைக்கப்பட்ட மேற்கண்ட 11 இளைஞர்களும், தமிழ் உணர்வாளர்கள், பழங்குடியினர், தலித்துகள் முஸ்லீம்கள் இகியோர்களின் உரிமைகளுக்காகவம் சுற்றுச்சூழல், ஈழத்தமிழர் உரிமை ஆகியவிாகவும், வெளிப்படையாகவும், ஜனநாயக பூர்வமாகவும் இயங்கி வந்தவர்கள். இவர்களைப் பற்றி விழுப்புரம் நகரத்தைச் சார்ந்த முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் எமது குழுவினரிடம் தெரிவித்த கருத்துக்களாவன:

(1) திரு. சக்கரை (திமுக முன்னாள் நகர செயலாளர்)

“இவர்களை நான் பலகாலமாக அறிவேன். ஜனநாயகமுறையில் செயல் படுபவர்கள். இவர்களால் மக்களுக்கு எந்த இடையூறும் ஏறபட்டதில்லை. மக்கள நலனுக்காக ரயிலை மறிக்கும் போராட்டம் வேண்டுமானால் நடத்துவார்களே தவிர எந்த நாளும் தண்டவாளத்தை தகர்க்கும் வேலையில் ஈடுபடமாட்டார்கள்”.

(2) மு.ய.முஸ்தாக்தீன் (தமுமுக மாவட்ட செயலாளர்)

“இவர் களோடு நான் நீண்ட நாட்களாக வேலை செய்திருக்கிறேன். தலித்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் அடித்தளப் பிரிவினரின் உரிமைகளுக்காக அனுமதிபெு சட்டப்பூர்வமான போராட்டங்களைத்தான் நடத்தி வந்தார்கள்”.

(3) சி.ஆப்பாவு (தி.க.)

“பகுத்தறிவு ஊணர்வு மிக்க இளைஞர்கள், நெடுமாறன் அமைப்பிலிருந்து தமிழ் உணர்வுடன் செயல்படக் கூடியவர்கள். ஜனநாயக விரோதமான வழியில் இவர்கள் செயல்பட்டது இல்லை”.

4) ஏ.வெற்றிசெல்வன், மாவட்ட செயலாளர் (வி.சி.)

“இவர்களில் 5,6பேரை எனக்குத் தெரியும். மனித உரிமை மீறல்களைக் கண்டால் ஜனநாயக முறையில் எதிர்த்து நிற்பார்கள்”.

(5) டாக்டர். இரா.மாசிலாமணி Ex.MLA மாநில பொருளாளர், மதிமுக.

“காவல்துறையினர் ஆரம்பம் முதலே முன் முடிவுகளுடன் இயங்கி வருகிறார்கள். எந்த விசாரணையையும் செய்யாமலேயே மாவோயிஸ்டுகளுக்கும், இதும் சம்பந்தம் இல்லை என்றார்கள். இந்த நிகழ்ச்சியுடன் இந்த இளைஞர்களைத் தொடர்பு படுத்தி ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்கள். தினமணி நாளிதழ் தலையங்கத்தில் எழுதியதுபோல் உளவுத்துறையினர் இந்த காரியத்தைச் செய்திருக்கலாமே தவிர இவர்கள் செய்திருக்க மாட்டார்கள்”.

(6) பாஸ்கர் (அஇஅதிமுக) நகர செயலாளர்

(எங்கள் கட்சியின் நிலைப்பாடு தெரியாமல் நான் எதையும் பேசமாட்டேன் ஏன்று ஏங்களுடன் பேச மறுத்தார். தண்டவாளத்தகர்ப்பு தவறு என்கிற கருத்துதான் எங்களுடைய கருத்தும் கூட, உள்ளூர்க்காரர் என்கிற முறையில் இந்த 11 பேரைப்பற்றிய உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோதும் கட்சி நிலைப்பாடு தெரியாமல் பேசமாட்டேன் எனப் பேச மறுத்துவிட்டார்).

(7) வே.அந்தோணி குரூசு (சாந்தி நிலையம், குழந்தைகள் உரிமை இயக்கம்)

“இந்த 11பேரையும் எனக்குத் தெரியும் இவர்கள் தமிழ் ஆதரவாளர்கள். பெரும்பாலோர் தமிழர் தேசிய இயக்கத்தைச் சார்ந்தவர்கள். காவல்துறை அனுமதியின்றி எந்தப் போராட்டத்தையும் இவர்கள் நடத்தியதில்லை. தமிழுணர்வாளர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அரசு இவர்களைப் பழிவாங்குகிறது”.

(8) தமிழேந்தி (வி.சி.)

“இந்த ஊருக்கு வந்த 17 இண்டுகளாக இவர்களில் பலரை எனக்குத் தெரியும். குறிப்பாக ஏழிலஇளங்கோ, ஜோதிநரசிம்மன், போன்றோர் எனது நெருங்கிய நண்பர்கள். மனித ஊரிமை மீறல்களைப் பொறுக்கமாட்டார்கள். இனால் அமைதி வழியிலேயே அவறறை ஏதிர்ப்பார்கள்”.

(9) ஸ்டாலின்மணி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

“தண்டவாளப் பெயர்ப்பு வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. இனால் இவர்கள் அதைச் செய்திருக்க மாட்டார்கள. இவர்கள் அப்படி செய்யக் கூடியவர்கள் இல்லை”.

(10) கோ.ப.அன்பு (பா.ம.க.)

“நல்ல தமிழ்ப்பற்றுள்ள இளைஞர்கள். தமிழில் பற்று வைப்பதை குற்றம் என்றா சொல்லமுடியும்? இவர்கள் வெளிப்படையாக இயங்கியவர்கள்.அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை. செம்மொழி என்றெல்லாம் சொல்லிக்கொண்டு தமிழுணர்வாளர்களை இப்படி கொடுமைப்படுத்தக் கூடாது”.

11) ஆனந்தன் (மா.கம்யூ.கட்சி)

“ஜனநாயக முறையில் தமிழ் ஆதரவு குறித்து செயல்பட்டு வந்தவர்கள். பாலமுருகன் உள்பட அனைவரையும் எனக்குத் தெரியும். இந்த மாதிரி தீவிர நடவடிக்கைகளில் எல்லாம் இவர்கள் இறங்கக் கூடியவர்கள் இல்லை”.

(12) த.பழமலய், மூத்த தமிழ்க் கவிஞர்.

“நெடுமாறன் ஐயா மற்றும் எங்களைப் போன்றவர்களின் கருத்துக்களாலும் பணிகளாலும் ஊக்குவிக்கப்பட்டு செயல்படும் இந்த இளைஞர்களை நான் அறிவேன். தமிழுணர்வுள்ள இவர்கள் தமிழ்நாட்டுக்குள் ஒடுகிற தமிழ் மக்களை ஏிச் செல்லும் வாகனம் ஒன்றை கவிழ்த்து தமிழர்களைக் கொல்ல முயற்சிக்க மாட்டார்கள் என உறுதியாகச் சொல்கிறேன். தவிரவும் இவர்கள் இத்தகைய தொழில் நுட்பங்கள் எல்லாம் தெரிந்தவர்களும் இல்லை”.


4.காவல்துறை அதிகாரிகளை நாங்கள் சந்தித்து இதுபோல சட்டவிரோதமாக நான்கு நாட்கள் வரை தடுத்து வைக்கப்பட்டது குறித்து கேட்டபொழுது அவர்களிடமிருந்து சரியான பதில் இல்லை. விசாரணை முழுக்க க்யூ பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதால் எதுவும் கருத்துச் சொல்ல முடியாது என டிஐஜி மாசானமுத்து கூறினார். நாங்கள் வற்புறுத்திக் கேட்டபொழுது, “நீங்கள் எனது நாற்காலியில் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்” என்றார். க்யூ பிரிவு ஆய்வாளர் சுந்தரத்திடம் பேசியபொழுது “அவர்கள் வெளிப்படையாகச் செயல்படுபவர்கள் என்று எங்களுக்கும் தெரியும். அதனால் தான் அவர்களை நாங்கள் கண்ணியமாக நடத்தினோம்” என்றார். சட்டவிரோதமாக 4 நாட்கள் தடுத்து வைத்திருந்தது ப்றறி கேட்டபொழுது அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தினம் அவர்களை வீட்டிற்குச் செல்வதற்கு அனுமதித்தோம் என்று முழுப்பொய்யுரைத்தார்.


5. நாங்கள் இந்த விசாரணையை மேற்கொண்டிருந்த நேற்று (ஜூன்-18) மதியம் மேற்படி ஜோதிநரசிம்மன், பாபு, ஏழுமலை, குமார் ஆகியோரும் இவர்களோடு தங்கராசு, முருகன் ஏனபவர்களும் க்யூ பிரிவு போலீசாரைக் கண்டித்துச் சுவரொட்டி ஒட்டியதாக கைது செய்யப்பட்டு கீழ்கண்ட பிரிவுகளின்படி வழக்கு தொடர்ந்து ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். நகர காவல் நிலைய குற்ற ஏண் 226/2010 குற்றப்பிரிவுகள் 147 மற்றும், 1959 சுவரொட்டி சட்டம் 4(1), 4(ஏ), மற்றும் 151 சிஇர்பிசி. ரிமாண்ட் செய்யப்பட்டவர்களில் முருகன் என்பவர் கூலிக்கு சுவரொட்டி ஒட்டும் ஒரு தொழிலாளி, எந்த இயக்கங்களிலும் தொடர்பில்லாதவர்.

சுவரொட்டி ஒட்டியதாக இத்தனை கடும்பிரிவுகளின் கீழ் ஏன் வழக்கு தொடர்ந்துள்ளீர்கள் என்று நாங்கள் கேட்டபோது, எனக்குத் தெரியாது. விசாரிக்கிறேன் என டிஐஜியும் க்யூ பிரிவு சுந்தரமும்
கூறினார்கள்.

எமது பார்வைகளும் கோரிக்கைகளும்


01. ரயில் தண்டவாளப் பெயர்ப்பு தொடர்பான புலனாய்வில் எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லாப்படும் ஓரு கையால் எழுதப்பட்ட தாளை வைத்து ஒரு கோணத்தில் மட்டுமே புலனாய்வு மேற்கொள்ளப்படுவது கண்டிக்கத்தக்கது. உளவுத்துறை கூட இதைச் செய்திருக்கலாம் என்கிற கருத்துக்கள் கூட மக்கள் மத்தியில் நிலவும் நிலையில் இப்படி அவசர கோலமாக ஒரு குறிப்பிட்ட அமைப்மைச் சேர்ந்தவர்கள் காவல்துறை தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழர் தேசிய இயக்கம் என்கிற ஒரு அமைப்பே இன்று இலக்காக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஈழத்தமிழர்கள் மற்றும் மனித ஊரிமைகளுக்காக போராடி வந்த ஈந்த இளைஞர்களை, அதிலும் குறிப்பாக தமிழ்வேங்கை, ஜோதிநரசிம்மன், ஏழிலஇளங்கோ ஆகியோரை எப்படியாவது இந்த வழக்கில் சிக்கவைத்துப் பழிதீர்க்க காவல்துறை முயல்வது வெளிப்படையாகத் தெரிகிறது.


02. தாங்கள் எந்த நேரமும் விசாரணைக்கு வருவதற்காக இந்த 11 இளைஞர்களும் தயாராக இருந்த நிலையில் அவர்களை வலுக்கட்டாயமாகக் கொண்டு சென்று 3 முதல் 4 நாட்கள் வரை சட்டவிரோதமாகக் காவலில் வைத்திருந்ததோடு அவர்களது உறவினர்கள் நீதிமன்றத்தை அணுகிய பின்னர் தினந்தோறும் அவர்கள் வீட்டிற்குச் செல்ல அனுமதியளிக்கப்பட்டது போல அவர்களை வற்புறுத்தி பொய் ஆவணங்கள் தயாரிக்க முற்பட்ட க்யூ பிரிவு காவல்துறையினர் சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தித் தண்டிக்கப்பட வேண்டும்.


03. தண்டவாளப் பெயர்ப்பு தொடர்பாக வல்லுனர் குழுவின் அறிக்கையொன்றை அரசு வெளியிடவேண்டும். இவ்வழக்கை க்யூ பிரிவிலிருந்து மாற்றி ஓரு டிஐஜி தலைமையிலான சிபிசிஐடி விசாரணைக்குட்படுத்த வேண்டும்.


04. வெறும் சுவரொட்டி ஒட்டிய ஒரு காரணத்திற்காக இந்த 11 பேரில் நால்வர் உள்ளிட்ட அறுவரை கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் காவலில் வைத்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்கள் மீதான வழக்குகள் திரும்பப்பெறப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும்.


05. விழுப்புரம் மாவட்ட மனித உரிமை ஆர்வலர்கள், காவல்துறை அத்துமீறல்களைத் தொடர்ந்து போராட்டங்கள், சிறு வெளியிடுகள், மாநாடுகள், பேரணிகள் ஆகியவின் ஊடாக வெளிக்கொணர்ந்து வருவது பாராட்டுக்குரியது. தண்டவாளப் பெயர்ப்பை ஓட்டி நடைபெற்ற காவல்துறை அத்துமீறல்களிலும் உடனடியாகத் தலையிட்டு சுவரொட்டிகள் முதலியவைகள் அச்சிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த விழுப்புரம் மாவட்ட மனித உரிமை அமைப்புகளையும் அவுடன் இணைந்து செயல்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்பினரையும் இக்குழு பாராட்டுகிறது.

ஜூன்-19-2010
விழுப்புரம்.

Thursday, June 17, 2010

ராஜகிரியில் மின்வெட்டை எதிர்த்துச் சாலை மறியல் - தடியடி பொய் வழக்குகள் - உண்மை அறியும் குழு அறிக்கை!

தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் தஞ்சையிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ராஜகிரி கிராமம். இச்சாலையோர கிராமத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலோனார் (சுமார் 85 சதவீதம்) முஸ்லிம்கள். சுமார் 10 சதவீதம் தலித்கள். கடைதெருவிலுள்ள கடைகளிலும் பெரும்பாலானவை முஸ்லிம்களுடையவை.

இன்று தமிழகம் முழுவதிலும் கடும் மின்வெட்டு உள்ளதை அறிவோம். நகரங்களில் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு சுமார் இரண்டு முதல் மூன்று மணிநேரமும், அவ்வப்போது அறிவிக்கப்படாத மின்வெட்டுக்களும் செயல்படுத்தப்படுகின்றன. கிராமப்புறங்களில் மேலும் அதிக அளவில் மின் வெட்டுக்கள் உள்ளன. கிராமப்புறங்களை பொறுத்தமட்டில் எந்த நேரத்தில்; மின் வெட்டு மேற்கொள்ளப்படும் எனத் தெரியாத அளவிற்கு நிலைமைகள் உள்ளன.

ராஜகிரி கிராமத்தில் சென்ற மாத இறுதி வாரத்தில் நாள்தோறும் கிட்டத்தட்ட 10மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பகல் முழுவதும், பல நேரங்களில், இரவுகளிங்கூட மின்வெட்டு இருந்துள்ளது. அருகிலுள்ள வங்காரம்பேட்டை முதலான கிராமங்களில் மின்சாரம் இருந்தபோதிலும்கூட ராஜகிரியில் மின்வெட்டு மேற்கொள்ளப்பட்ட நிலை அங்குள்ள மக்களுக்கு ஆத்திரத்தை வரவழைத்தது பலமுறை அவர்கள் மின்வாரிய அதிகாரிகளை உள்ளுர் அளவிலும் வட்ட, மாவட்ட அளவிலும் நேரிலும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு பேசிய போது யாரும் பொறுப்பாக பதில் சொல்லவில்லை. கிராமப்புறம் என்றால் அப்படித்தான் இருக்கும் “மேலதிகாரியிடம் வேண்டுமானால் சொல்லிப்பாருங்கள்” முதலான பதில்களையே தஞ்சையிலுள்ள உயர் அதிகாரி (ளுஊநு)வரை கூறியுள்ளார்கள். அருகிலுள்ள மற்ற கிராமங்களைக் காட்டிலும் தமது கிராமம் பெரிதும் பாதிக்கப்படுகிறது என ராஜகிரி மக்கள் கருதுவது குறித்து அவர்கள் யாரும் விளக்கம் அளிக்கவோ, அல்லது அது குறித்து கரிசனம் காட்டவோ, குறைகளை களையவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் சென்ற ஜுன் 2, புதன்கிழமை அன்று ராஜகிரி மக்கள் தன்னெழுச்சியாகச் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மின்வாரியம், வருவாய்துறை, மற்றும் காவல்துறையினர் எந்த உறுதிமொழியும் அளிக்காமல் தடியடி மேற்கொண்டு கூட்டத்தைக் கலைத்துள்ளதோடு கிராமத்தில் பலர் மீது பொய் வழக்குகளையும் போட்டுள்ளனர்.

இது இக்கிராமம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து, மனித உரிமை அமைப்புகளை அம்மக்கள் தொடர்பு கொண்டனர். உண்மைகளை அறிந்து வெளிப்படுத்தும் நோக்கில் கீழ்க்கண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

பேரா.அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR).

கோ.சுகுமாரன், மக்கள் உரிமை கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.

யு.சையத் அலி, தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), நாகரகோயில்.

மு.சிவகுருநாதன், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), திருவாரூர்.

சரவணன், வழக்குரைஞர், சோழபுரம், குடந்தை.

யு.சையது அப்துல் காதர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), மதுரை.

சு.காளிதாஸ் மக்கள் உரிமை கூட்டமைப்பு (FPR),புதுச்சேரி.

இக்குழுவினர் நேற்றும் (ஜூன் 14), இன்றும் (ஜுன் 15) பாதிக்கப்பட்ட மக்கள், ஊர் தலைவர்கள், ஜமாத் தலைவர் யூசுப் அலி, சட்டமன்ற உறுப்பினர் துரைக்கண்ணு, வருவாய் கோட்ட அலுவலர் எஸ்.அசோக்குமார், பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அ.அண்ணாதுரை ஆகியோரை சந்தித்து பேசினர்.

இக்குழுவினர் தமது ஆய்வில் கண்டறிந்த உண்மைகளாவன.

ராஜகிரி கிராமத்தி;ல் சென்ற மாத இறுதி வாரத்தில் தினம்தோறும் சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு இருந்துள்ளதும், இது குறித்த புகார்கள் அதிகாரிகளால் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளதும் உண்மை. சம்பவ நாளுக்கு முதல் நாள் (ஜுன் 1) காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இல்லை. மாலை 6 மணி அளவிலும் சிறிது நேரம் மின்சாரம் இல்லை. மீண்டும் இரவு சுமார் 10 மணி முதல் 11.30 வரை மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

சம்பவ நாளன்று காலை 5.45 மணிக்கே மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்குப்பின் பள்ளித் தொடங்கும் நாளில் இப்படியானதை ஒட்டி கசப்புற்ற மக்கள் ஆங்காங்கு கூடி நின்று பேசியுள்ளனர். தஞ்சையில் உள்ள உயர் மின்வாரிய அதிகாரிக்கு (SE) மின்வாரிய அதிகாரிக்கு தொடர்பு கொண்டு பேசியபோது, “ரூரல் - ன்னா அப்படித்தான் இருக்கும். வேண்டுமானால் இன்னும் பெரிய அதிகாரிகளிடம் சொல்லிக்கொள்ளுங்கள்” என அலட்சியமாக சொல்லி எந்த பெரிய அதிகாரியுடன் பேசுவது என்றெல்லாம் சொல்லாமல் தொடர்பை முறித்துக் கொண்டுள்ளார்.

இதனால் கோபமுற்ற மக்கள் ஆங்காங்கு கூடி பேசியுள்ளனர். முச்சந்திகளில் திரண்டுள்ளனர். சாலை மறியல் செய்யலாம் என்கிற கருத்து தன்னிச்சையாக உருவாகியுள்ளது. சலசலப்பை அறிந்த பாபநாசம் காவல்நிலைய ஏட்டு அங்கு வந்து “சாலை மறியல் செய்ய அனுமதியில்லை, கலையுங்கள்” என்றுள்ளார். எனினும் மக்கள் காலை சுமார் 10.30 மணியளவில் சாலையில் கூடி போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். சுமார் 1000 ஆண்களும், 300 பெண்களும் இருந்துள்ளனர். உயர் அதிகாரி வந்து தம்முடன் பேசி எழுத்துமூலம் வாக்குறுதி அளிக்கவேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.

இதனால் தஞ்சை – கும்பகோணம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் அடுத்த அரை மணிநேரத்தில் அய்யம்பேட்டை –கணபதி அக்ரஹாரம் - கபிஸ்தலம் - பாநாசம் என்கிற வழியில் பஸ் போக்குவரத்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தொடக்கத்தில் தாசில்தாரும் கிராம நிர்வாக அதிகாரி முருகையனும் அதன் பின்னர் கோட்டாட்சியர் எஸ்.அசோக்குமாரும் வந்து பேசிய பின்னும் எந்த முடிவும் ஏற்படவில்லை. லைலா புயலை ஒட்டி மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எழுத்து மூலம் எந்த உறுதியும் தர இயலாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அருகில் உள்ள வங்காரம்பேட்டை முதலான ஊர்களில் மின்சாரம் உள்ளபோது எங்களுக்கு மட்டும் ஏன் இல்லை என்று மக்கள் கேட்டுள்ளனர். அதிகாரிகள் எந்த முடிவும் சொல்லாமல் அருகில் உள்ள காசிமியா மேல்நிலைப்பள்ளியில் சென்று அமர்ந்துள்ளனர்.

சாலை மறியல் தொடங்கி மூன்று மணி நேரம் ஆகியும் அதிகாரிகள் சுமுகமாக பேசாததால் மக்கள் சேர்வுற்றுள்ளனர். சுமார் 2 மணியளவி;ல் சில அம்பாசிடர் கார்களில் கும்பகோணத்திலிந்து போலீஸார் வந்து இறங்கியுள்ளனர். பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அ.அண்ணாதுரை தலைமையில் முன்னறிவிப்பின்றி தடியடி நடத்தி கூட்டம் கலைக்கப்பட்டது. சற்று நேரத்திற்கு பின் தஞ்சையிலிருந்து காவல் துறை கண்காணிப்பாளர் டாக்டர் செந்தில் வேலன் வந்துள்ளார். மாலை 3½ மணிக்கெல்லாம் போக்குவரத்து சீராகியுள்ளது.

தடியடி அறிந்து ராஜகிரி ஜமாத் தலைவரும் தி.மு.க. ஒன்றிய செயற்குழு உறுப்பினருமான யூசுப்அலி, அருகில் உள்ள பண்டாரவாடை ஜமாத் தலைவர் இப்ரஹிம், ‘பாப்புலர் ஃப்ரண்ட்’ என்கிற அமைப்பின் மாவட்ட தலைவர் அய்யம்பேட்டை அப்துல் இஷாக் முதலானோர் சம்பவ இடத்திற்கு விரைந்து கண்காணிப்பாளரிடம்; பேச முயன்றபோது அவர்களிடம் எஸ்.பி. சுமூகமாக பேச மறுத்துள்ளார். கை குலுக்க வந்தவர்களிடம் கை குலுக்கவும் அவர் தயாராக இல்லை. பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.துரைக்கண்ணு (அ.இ.அ.தி.மு.க) அவர்கள் பேச முயன்றபோது அவரும் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளார்.

சலிப்புற்ற மக்கள் சாலைக்கு இடையூறு இல்லாமல் அமைதியாக உண்ணாவிரதம் மேற்கொள்ளலாம் என முடிவுக்கு வந்துள்ளனர். “உண்ணாவிரதத்திற்கு அனுமதி இல்லை கலையுங்கள”; என காவல்துறையினர் மிரட்டியுள்ளனர். அதே நேரத்தில் கண்காணிப்பாளர் போலீஸ் படையுடன் ஊருக்குள் நுழையவே மக்கள் கலைந்துள்ளனர். இதற்கிடையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் உள்ளுர் செயலர் ஜக்கரியா, தி.மு.க வைச் சேர்ந்த ரிக்ஷா ஷாஜகான் ஆகியோரை ரவுடி என்றெல்லாம் கடுமையாக பேசி அவமானப்படுத்தியுள்ளார். தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் முருகையனிடமிருந்து இரு புகார்களையும் மின்வாரிய இளநிலை பொறியாளர் செந்தில்வேல் என்பவரிடம் ஒரு புகாரைப் பெற்று 26 பேர்கள் மீது பெயர் குறிப்பிட்டும் மற்றும் 250 பேர்கள் மீது பெயர் குறிப்பிடாமலும் புகார் பெறப்பட்டு குற்றப்பிரிவுகள் 147, 294(டி), 188, 341, 342, 353, 506(i), பொதுச் சொத்து அழிப்பு குற்றப்பிரிவு பி.பி.டி.எல் 3(1) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் வழக்கில் 26 பேர்கள், 2-வதில் 8 பேர்கள், 3-வதில் 9 பேர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன் எல்லாவற்றிலும் முகமது ஜக்கரியா, அப்துல் இஷாக், முகமது பாரூக் ஆகியோர் முதல் மூன்று எதிரிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவருமே பாப்புலர் ஃபிரண்ட் மற்றும் எஸ்.டி.பி.ஐ ஆகிய அமைப்பை சேர்ந்தவர்கள்.

ஜமாத்தினர் அமைச்சர் உபயதுல்லா அவர்களை தொலைபேசியிலும் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரிலும் (ஜுன் 4) சந்தித்து முறையிட்டுள்ளனர். மேல்நடவடிக்கை ஏதும் இராது என அவர்கள் சொன்னதாக தெரிகிறது.

சென்ற 11ந்தேதியன்று குடந்தையில் இதைக் கண்டித்து ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பினர் திட்டமிட்டு குடந்தை மேற்கு காவல்நிலையத்தில் அனுமதி விண்ணப்பம் ஒன்றை 8ந் தேதியன்று அளித்துள்ளனர் ஆய்வாளர் குமரன் அதை ஏற்க மறுத்துள்ளார். பின்னர் விண்ணப்பத்தை பதிவு தபாலில் அமைத்துள்ளனர். 11ந் தேதி மாலை வரை அனுமதி மறுப்புக் கடிதம் ஏதும் வராததால் அன்று மாலை அமைதியாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் குடந்தை காவல்துறை துணை கண்காணிப்பாளர் அங்கு வந்து அனுமதியில்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக மிரட்டியுள்ளார். பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பின் மீது இதற்கென மேலும் ஒரு வழக்கு தொடர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜுன் 3 அன்று இரவு 3 மணியளவில் அய்யம்பேட்டையில் அப்துல் இஷாக் வீட்டிற்கு சென்று அவர் இல்லாத நேரத்தில் பெண்களை காவல்துறையினர் மிரட்டியுள்ளனர். மொத்தத்தில் ராஜகிரி பகுதி மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவுகிறது.

இது குறித்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரைக்கண்ணு அவர்கள் மிக்க நடுநிலையுடன் பேசினார். ஒரே ஒரு கல் வேன் ஒன்றின் மீது வீசப்பட்டது தவிர வேறு எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக சாலை மறியல் நடைபெற்றது எனவும், அதிகாரிகள் பேச தயாராக இருந்தபோதும் வாக்குறுதி ஏதும் அளிக்காததால் போராட்டம் தொடர்ந்தது எனவும், இப்பகுதியில் உள்ள மின்வெட்டுப்பற்றி தாம் சட்டமன்றத்தில் பேசியுள்ளதையும் குறிப்பிட்டார்.

கோட்டாட்சியர் எஸ்.அசோக்குமார் தடியடி ஏதும் நடக்கவி;ல்லை என்று மறுத்தார். அமைதியாகவும் பொதுச் சொத்திற்கு சேதமி;ல்லாமலும் போராட்டம் நடந்ததை ஏற்றுக் கொண்ட அவர், லைலா புயலால் மின்சார உற்பத்தி குறைந்துள்ள நேரத்தில் மக்கள் அதை புரிந்துக் கொள்ளாமல் பிடிவாதமாக போராட்டம் நடத்தியதை கண்டித்தார். பொது சொத்திற்கு சேதமில்லாத போது ஏன் அந்த பிரிவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது எனவும், சம்பவத்தன்று ஊரில் இல்லாதவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்தும் நாங்கள் கேட்டபோது தமக்கு தெரியாது என்றார்.

பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அ.அண்ணாதுரை அவர்களிடம் இது குறித்து கேட்டபோது மக்களுக்;கு கஷ்டம் ஏற்படுத்துவதே பொது சொத்திற்கு சேதம் இழைப்பதுதான் என்றார். பொதுவாக இது போன்ற போராட்டங்களில் 151 பிரிவின் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்யும் வழக்கம் உள்ள நிலையில் இத்தனை கடுமையான வழக்குகள் ஏன் என்று கேட்டபோது இனி இப்படி அவர்கள் போராடக்கூடாது என்பதை உணர்த்துவதற்காகத்தான் என்றார். அவரும் தடியடி நடக்கவில்லை என்றார். வீடியோவில் இல்லாதவர்கள் யார் மீதும் நடவடிக்கை இராது மேலதிகாரிகளிடம் பேசுங்கள் என்றார். காவல்துறை கண்காணிப்பாளர் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் இருந்ததால் அவரை இன்று சந்திக்க இயலவில்லை.

பலரிடமும் நாங்கள் பேசியதில் இருந்து ஒரு சிலர் மட்டும் குறிப்பாக பழிவாங்கப்படக்கூடிய சூழல் நிலவுவது புரிந்தது.

எமது பார்வைகளும் கோரிக்கைகளும்

1. மின் உற்பத்தியை போதிய அளவிற்கு அதிகரிக்காமலேயே பெரும் கார்பரேட் நிறுவனங்களுக்;கு ஏராளமாக மின்சாரம் அளிப்பது முதலான அரசின் தவறான கொள்கைகளின் விளைவாக தமிழகம் எங்கும் பெரும் மின்வெட்டு உள்ளது. நகர்புறங்களில் குறைவாகவும் (சென்னையில் மின்வெட்டே கிடையாது), கிராமப்புறங்களில் அதிக அளவிலும் மின்வெட்டை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புற விவசாயம், வணிகம், சிறு தொழில்கள் முதலியன பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இது குறித்து அரசு பொறுப்பாக நடந்துக் கொள்வதில்லை. தஞ்சை பகுதியில் நிலைமை மோசமாக உள்ளது. கிராமப்புறங்களுக்கு மின்சாரம் இல்லாமல் செய்வதை அரசு ஒரு கொள்கையாகவே அறிவிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

2. அமைதியான வழியில் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து தீர்வுகள் கிடைக்காதபோது மக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இது தமிழகம் எங்கும் உள்ள ஒரு வழக்கம். இது அடித்தள மக்களின் ஒரு போராட்ட வடிவமாக உள்ளது. இப்படியான சந்தர்ப்பங்களில் உரிய அதிகாரிகள் மக்களை சந்தித்து பேசி அமைதி;க்குழு முதலியானவற்றை அமைத்து உடனடியாக போக்குவரத்தை சீர் செய்வதே வழக்கம். ராஜகிரியிலும் கூட சென்ற ஆண்டு இப்படி ஒரு போராட்டம் தீர்க்கப்பட்டுள்ளது. எனினும் இம்முறை எந்த உறுதிமொழியும் தரமுடியாது கலைந்து செல்லுங்கள் என மிரட்டியுள்ளனர். மக்கள் மறுத்த போது எந்த எச்சரிக்கையும் இன்றி தடியடி நடத்தப்பட்டுள்ளது. பொய் வழக்குகளும் போடப்பட்டுள்ளது.

திருவையாறு அருகே அம்மன்பேட்டையில் சென்ற ஜுன் 8 அன்று மின்வெட்டை எதிர்த்து விவசாயிகள் சாலை மறியல் செய்த போதும் 500 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதை ஊடகங்கள் கண்டித்துள்ளன. பொதுவாக இத்தகைய போராட்டங்களில் 151 பிரிவின் கீழ் கைது செய்து விடுதலை செய்வதே வழக்கம் இப்போது இது மீறப்படுகிறது. மின்வெட்டு தொடரும் இது எங்களால் சரிசெய்ய முடியாது. போராடினால் கடும் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என ஒரு செயல்பாட்டை அரசு மேற்கொண்டுள்ளது வருந்தத்தக்கது.

3. ராஜகிரியில் சென்ற 2ந் தேதி நடைபெற்ற சாலை மறியல் முற்றுலும் தன்னிச்சையானது. இதன்பின் எந்த அரசியல் கட்சி, ஜமாத்தார், தனிநபர்கள் ஆகியோரின் தூண்டுதல் கிடையாது என்பதை எமது குழு உறுதி செய்துக் கொண்டது.

4. தாசில்தார், ஆர்.டி.ஓ, காவல்துறை அதிகாரிகள் மக்களிடம் சுமூகமாக பேசியிருந்தால் அந்த பிரச்சனை தீர்ந்திருக்கும். பிரச்சனையை தீர்க்க முயலாமல் தடியடி, பொய் வழக்குகள் என்கிற நிலை ஏற்பட்டதற்கு அதிகாரிகளே பொறுப்பு.

5. பொதுச் சொத்து எதற்கும் தீங்குகள் விளைவிக்கப்படவில்லை என்பதையும், வன்முறை ஏதும் இல்லை என்பதையும் எமது குழு உறுதிப்படுத்திக்கொண்டது. சட்டமன்ற உறுப்பினரும், கோட்டாட்சியாளரும் இதனை ஏற்றுக் கொண்டனர். எனினும் பொதுச் சொத்திற்கு அழிவு ஏற்படுத்தியது தொடர்பான பிரிவிலும் இதர கடுமையான பிரிவுகளிலும் வழக்குகள் போடப்பட்டுள்ளதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிகாரிகள் அமர்ந்திருந்த பள்ளிக்கூடத்தை வெளியில் இருந்து பூட்டியதாக வழக்கு தொடரப்பட்டிருப்பதும் பொய்யானது. பள்ளி நிர்வாகிகளே பாதுகாப்பு கருதி வாயிலை மூடியுள்ளனர்.

6. சம்பவ இடத்தில் இல்லாத பலரும் வேண்டுமென்றே வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். எடுத்துக்காட்டாக மூன்று முதல் தகவல் அறிக்கைகளிலும் 3-வது எதிரியாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள (SDPI பொறுப்பாளர்) முகமது பாரூக் அன்று ஊரிலேயே இல்லை. அவர் மதுரையில் இருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. அதே போல் ஜமாத் தலைவரும் தி.மு.க. ஒன்றிய செயற்குழு உறுப்பினரான ய+சுப் அலி ஆளுங்கட்சியை சேரந்தவர் என்பதால் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். தடியடிக்கு பிறகே ஜமாத் தலைவர் என்ற முறையில் அதிகாரிகளை சந்தித்துள்ளார். அவரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

7. சென்ற ஆண்டு சுதந்திர நாளன்று பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பு குடந்தையில் நடத்தி விடுதலை பேரணிக்கு காவல்துறை முதலில் அனுமதி மறுத்தது. எனினும் அவ்வமைப்பினர் விடாமல் போராடி பேரணியை நடத்தினர். இதனால் காவல்துறையினருக்கு, குறிப்பாக காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.செந்தில்வேலனுக்கு இவ்வமைப்பினர் மீது கடும்கோபம் இருந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவ்வமைப்பில் முன்னணியில் இருந்து செயல்படுகிற ஜக்கரியா, இஷாக், பாரூக் முதலானவர்களை வழக்கில் சிக்கவைக்க காவல்துறை முயல்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

8. எந்த முன்னறிவிப்புமின்றி தடியடி நடத்தியது குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும்.

9. மூன்று முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் தொடரப்பட்டுள்ள எல்லா வழக்குகளும் உடனடியாக திரும்ப பெறப்பட்டு ராஜகிரி பகுதியில் சூழ்ந்துள்ள அச்சம் நீக்கப்படவேண்டும்;. அம்மன்பேட்டை சாலைமறியலில் கலந்துக் கொண்டவர்கள் மீதான வழக்குகளும் திரும்ப பெறவேண்டும்.

10. ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் முதலியவற்றிற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிப்பது குடிமக்களின் அடிப்படை உரிமை. விண்ணப்பத்தை வாங்க மறுத்த செயல் சட்டவிரோதமானது. மறுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். பதிவு தபாலில் அனுப்பிய பின்பு அனுமதி அளித்தோ, மறுத்தோ காவல்துறையினர் பதிலளித்திருக்க வேண்டும். கடைசிவரை எந்த பதிலையும் அளிக்காமல் இருந்துவிட்டு இன்று அவர்களை மிரட்டுவது, வழக்குகள் தொடர முயற்சிப்பது முதலியன கண்டனத்திற்கு உரியவை. காவல்துறையினர் இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும்.

11. மின்வெட்டு தொடர்பாக மக்கள் புகார் செய்யும்போது பொறுப்பாக பதிலளிப்பது மின்வாரிய அதிகாரிகளின் கடமை. இதை அவர்கள் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

12. இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் மின்வெட்டை குறைத்து நிலைமையை சீரமைக்க அரசு உடனடி முயற்சிகள் மேற்க்கொள்ளவேண்டும். கிராமப்புறங்களில் மின்வெட்டு மேற்கொள்வதை ஒரு கொள்கையாகவே அரசு மேற்கொண்டுள்ளது வருந்தத்தக்கது. தமிழக அரசு இதை மாற்றி கொள்ள வேண்டும்.

15.06.2010.

மதிப்பெண்களைத் திருத்தி ஆசிரியர் நியமனத்தில் ஊழல், மோசடி: பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 16.06.2010 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறையில் தற்போது நடந்து முடிந்த ஒப்பந்த ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வில் மதிபெண்களைத் திருத்தி ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வற்புறுத்துகிறோம்.

புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை சார்பில் 131 ஒப்பந்த ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 25.05.2010 அன்று இணையத் தளத்தில் வெளியிடப்பட்டன. இதன்படி பழனியம்மாள் என்பவர் பெற்ற மதிப்பெண் சதவிகிதம் 44.6203 ஆகும். காத்திருப்போர் பட்டியலில் உள்ள குமுதம் என்பவரது மதிப்பெண் சதவிகிதம் 43.7817 ஆகும். ஆனால், இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த பட்டியலுக்கு மாறாக கல்வித் துறை அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருந்த பட்டியலில் பலரது மதிப்பெண்கள் திருத்தப்பட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதாவது, மேலே கூறப்பட்டுள்ள பட்டியலின்படி பழனியம்மாள் பெற்ற மதிப்பெண் 44.6203 என்பதை 44.1203 என குறைக்கப்பட்டு திருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குமுதம் பெற்ற மதிப்பெண் 43.7817 என்பதை 44.1817 என மதிப்பெண் கூடுதலாக்கப்பட்டு திருத்தப்பட்டுள்ளது. இதனால், நியாயப்படி பழனியம்மாளுக்கு கிடைக்க வேண்டிய ஆசிரியர் பதவி மதிப்பெண் திருத்தப்பட்டதால் தன்னைவிட குறைந்த மதிப்பெண் பெற்ற குமுதம் என்பவருக்கு கிடைத்துள்ளது. இதேபோல், பலருடைய மதிப்பெண்கள் திருத்தப்பட்டு வேண்டியவர்களுக்குப் பதவி அளிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பழனியம்மாள் 26.06.2010 மதியம் 2.00 மணிக்குப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரிடம் நேரில் சென்று புகார் கூறியுள்ளார். ஆனால், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கல்வித் துறை இயக்குநர் இணையதளத்தில் வெளியிட்டதில் தவறு ஏற்பட்டதாக கூறி, அவசரம் அவசரமாக இணையதளத்தில் இருந்த பட்டியலை மாற்றி மதிப்பெண் திருத்தப்பட்ட புதிய பட்டியலை மதியம் 4.00 மணியளவில் வெளியிட்டுள்ளார். அதுவரையில், ஏற்கனவே முடிவு வெளியிடப்பட்ட இணையதளப் பக்கத்தை கல்வித் துறை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர்.

மேலும், இந்த மதிப்பெண் திருத்தியது குறித்து மாணவர் மற்றும் சமூக நல அமைப்புகள் கல்வித் துறை இயக்குநரிடம் எடுத்துக் கூறி ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை கோரியுள்ளனர். ஆனால், நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக தேர்வுச் செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணையை உடனடியாக வழங்கியுள்ளார். இதனால், ஆசிரியர் நியமனத்தில் ஊழல், முறைகேடு நடந்துள்ளது உறுதியாகியுள்ளது.

எனவே, புதுச்சேரி அரசு உண்மை நிலையை மக்களுக்குத் தெளிவுப்படுத்த இதுகுறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டுள்ள கல்வித் துறை இயக்குநர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதிப்பெண்களைத் திருத்தி வழங்கப்பட்ட ஆசிரியர் நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும். வெளிப்படையான, ஊழலற்ற முறையில் மீண்டும் தேர்வு நடத்தி ஒப்பந்த ஆசிரியர் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையேல், ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மக்களைத் திரட்டி போரட்டத்தில் ஈடுபட நேரிடும் என அரசை எச்சரிக்கிறோம்.