Tuesday, October 09, 2007

பிரான்சில் இலங்கைத் தலித் முதலாவது மாநாடு




















மாநாட்டு அழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைக் "கிளிக்" செய்யவும்.


பிரான்சு இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் சார்பில் “முதலாவது தலித் மாநாடு” வரும் அக்டோபர் 20, 21 ஆகிய இரு நாள்கள் பிரான்சில் நடைபெற உள்ளது.

20-10-2007 முதல் நாளன்று காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 வரை நடைபெறும் கருத்தரங்கில், வரவேற்புரையும் அறிமுகமும் தேவதாசன்.

ஜோவே போல் அரங்கில் ‘தீண்டாமை ஒடுக்குமுறையும் எதிர்ப்புப் போராட்டங்களும்’ - யோகரட்ணம், பரராஜசிங்கம் (ஜெர்மனி), எம்.சி.சுப்பிரமணியம் அரங்கில் ‘தமிழ்த் தேசியமும் தலித்தியமும்’ – அருந்ததி, இராகவன் (இலண்டன்), ‘சர்வதேசப் பார்வையில் சாதியம்’ – அசுரா, புதிய மாதவி (இந்தியா), அரவிந்து, ‘இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் தலித்தியம்’ – கற்சுறா (கனடா), தேவா (ஜெர்மனி), புதுமைலோலன் (சுவிஸ்) ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

21-10-2007 இரண்டாம் நாளன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கி மதியம் 2.30 வரை நடைபெறும் கருத்தரங்கில் முதல் நாள் அமர்வுகள் பற்றிய விமர்சனங்கள், தலித் அரசியலின் எதிர்காலம் குறித்துக் கலந்துரையாடல். இவ்வரங்கை நெறிப்படுத்துதல் விஜி.

எஸ்.ரி.என். நாகரட்ணம் அரங்கில் ‘தலித்துகளின் பொருளாதார மேம்பாடு’ – பகவத்சிங் (ஜெர்மனி), சோமசுந்தரம் (ஜெர்மனி), நடராஜா (ஆஸ்திரேலியா), டேனியல் அரங்கு: இலங்கை அரசியல் தீர்வுத் திட்டமும் தலித்துகளும் – எம்.ஆர்.ஸ்டாலின், சிவகுருநாதன் (கனடா), பஷீர் (இலண்டன்) ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

மதியம் 2.00 மணிக்கு கலை நிகழ்ச்சி. முடிவில் சுந்தரலிங்கம் நன்றியுரையாற்ற மாநாடு நிறைவு பெறுகிறது.

உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இம்மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இம்மாநாட்டிற்கு பிரான்சில் செயல்பட்டு வரும்
அய்ரோப்பா பெரியார் விழிப்புணர்வு இயக்கம் தனது வாழ்த்துக்களையும், தார்மீக ஆதரவையும் தெரிவித்துள்ளது.

நிகழிடம்:
SALLE RENCONTRE, Rue Jean Froncois Chalgrin, 95140 Garges Les Gonesse, France.

தொடர்புகளுக்கு:
E-mail: vadu.world@hotmail.fr
Telephone: 0661803690, 0660368804.

18 comments:

Anonymous said...

அங்க தாலித்து கீலித்து எல்லாம் கிடையாது.

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

//அங்க தாலித்து கீலித்து எல்லாம் கிடையாது.//

அனானிக்கு...

உங்கள் கண்ணிற்குத் தென்படாத "தலித்துகள்" குறித்துதான் இந்த மாநாடு. மாநாட்டிற்குச் சென்று தலித் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.

வவ்வால் said...

வணக்கம் சுகுமாரன்,

நல்லப்பதிவு தான் , ஆனால் இது குறித்து தமிழ்மணத்தில் ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டுள்ளது,(புலிகளுக்கு எதிரானது அக்கூட்டம் என்றப்படி) எனினும் நீங்களும் பதிவில் போட்டுள்ளதால் அது ஒரு பொதுவான நிகழ்வென்று தெரிய வருகிறது.

இணையத்தில் தகவல்களை சரிப்பார்க்க வாய்ப்பில்லாத நிலையில் உங்கள் பதிவு உதவியுள்ளது.

sathiri said...

கனடா மற்றும் ஜரோப்பாவில் வெளியாகும் ஒரு பேப்பர் பத்திரிகைக்காக நான் எழுதிய கட்டுரை படித்து பார்த்து நிலைமைகளை புரிந்து கெர்ள்ளுங்கள் நண்பரே

புலம்பெயர் தேசத்தில் சிறீலங்கா புலனாய்வு பிரிவின் புதிய பொறிகள்


சிறீலங்கா அரசானது காலங்காலமாக தனது தமிழின அழிப்பு வேலைகளை தாயகத்தில் மேற்கொண்டுவரும் வேளைகளில் அதற்கு எதிராக புலம்பெயர் தேசமெங்கும் வாழும் தமிழர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைளையும் அடக்கிவிட தனது சகல வளங்களையும் பாவித்து சில நடவடிக்கைகளை மேற்டிகாள்வதும் பொதுவாக சகலரும் அறிந்ததே. அது போலத்தான் தற்சமயம் மகிந்த அரசும் புலம்பெயர் தேசங்களில் தமிழர்களின் தமிழ் தேசியத்திறகான ஆதரவை குலைப்பதில் முழுமூச்சாக முயன்று வருகிறார். ஆனால் கடந்த காலங்களில் சிறீலங்கா அரசபதவிகளில் இருந்தவர்கள் தமிழர்களின் எழுச்சியை ஒடுக்க யாராவது ஒரு தமிழரிற்கு பதவிகளை கொடுத்து அவர் மூலமாகவே சர்வதேசமெங்கும் தமிழ் தேசிய செயற்பாடுகளிற்கொதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டனர். மகிந்த அரசோ தன் சொந்த நலனை காக்ககூட ஒரு தமிழனிற்கு பெரும்பதவி ஒன்றினை குடுக்க விரும்பாமல் கொஞ்சம் மாறு பட்டு புலம்பெயர் தேசங்களில் இலகுவாய் விலை போக கூடிய சில தமிழர்களை தேடிப்பிடித்து அவர்கள் மூலமாக குறைந்த செலவில் நிறைந்த சேவையை எதிர்பாத்து சில செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளனர். இந்த புலம்பெயர் தமிழர்களும் வாங்கியதற்கு வஞ்சகமில்லாமல் உழைப்பதையே காணக்கூடியதாக உள்ளது. இது பேலத்தான் அண்மையில் பிரான்சிற்கு வந்து போன ஒரு தமிழ் அமைச்சர் மூலமாக இலங்கை புலனாய்வு துறை பிரான்சிலும் சில நடவடிக்கைகளை செய்து முடிக்க சில திட்டங்கள் தீட்டப்பட்டு அவற்றை சில தமிழர்களிடம் ஒப்படைத்து சென்று விட்டார்.அவர்கள் திட்டப்படி பிரான்ஸ் வாழ் தமிழர்கள் மத்தியில் பல்வேறு பெயர்களில் பல்வேறு தலைப்புக்களில் பல்வேறு பட்ட நோக்கங்களிற்காக நடாத்தபடுவது போன்ற ஒரு மாயையை காட்டி சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது. ஆனால் அந்த எல்லா நிகழ்வுகளிலுமே முதற்கட்டமாக மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் தேசிய மற்றும் தமிழர்களின் உரிமைபோரிற்கும் எதிரான கருத்துக்களை பரப்பி அவர்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடுவது. பின்னர் மீண்டும் தொடர்ச்சியான நிகழ்வுகள் மூலம் தொடர்ச்சியான பிரச்சாரத்தை மேற்கொண்டு தமிழர் உரிமை போரின் முதுகெலும்பாக இருக்கும் புலம்பெயர் தேசத்து தமிழர்களின் ஆதரவை மழுங்கடிப்பதே முக்கிய நோக்கமாகும். அதே போல இந்தியாவில் இலங்கையரசு ஆழும்கட்சிகளையும் சில அதிகாரிகளையும் தன் சூழ்ச்சியால் தன்வசம் இழுத்து வைத்திருந்தாலும் தமிழ் நாட்டின் சாதாரண மக்களிடம் ஈழத்தமிழரிற்கான ஆதரவை இன்றுவரை சிதைக்க முடியாமல் திண்டாடிவருவது அனைவரிற்கும் தெரிந்த விடயம்தான். அதற்காக இலங்கையரசும் இந்திய அதிகாரிகளும் சேர்ந்து ஆடிய நாடகங்களும் அதே நெரம் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை கிளைத்தூதரகமும் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டும் பெரிய அளவில் எவ்வித பயனையும் இலங்கையரசு பெறாததால். அடுத்த நடவடிக்கையாக புலம்பெயர் தேசத்து தமிழர்களை வைத்தே இந்த தமிழ்நாட்டு தமிழர்களின் ஆதரவை சிதைக்க திட்டம் தீட்டியுள்ளது. முக்கியமா தமிழ் நாட்டில் எத்தனை துன்பங்கள் வந்தபோதும் தமது தளராத ஆதரவை தந்தவர்கள் பெரியார் திராவிடஇயக்கங்களும் அரசியல் கட்சிகளும். தலித் இயக்கங்களும் அரசியல்கட்சிகளும் ஆகும்.எனவே இந்த அமைப்புக்களின் ஆதரவை தமிழ் நாட்டில் சிதைத்து விட்டால் மற்றைய ஆதரவு கரங்களையும் மடக்கி விடாலாமென்பது இலங்கையரசின் கனவு. இதன் ஆரம்ப கட்டமாக பிரான்சில் சிறீலங்கா அரசிற்கு சேவகம் செய்ய பறப்பட்டவர்களால் சில நிகழ்வுகள் எற்பாடு செய்யபபட்டுள்ளன. அவை சமாதானப்பறைவைகள் என்கிற பெயரில் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு என்கிற தலைப்பில் ஒரு எற்பாடு . இதை கேட்டதுமே சிரிப்புதான் வந்தது இதை படிக்கின்ற உங்களும் கட்டாயம் வரும். ஏனெனில் எங்கள் தேசத்தில் எவ்வித பிரச்னையும் இல்லாமல் அமைதி பூத்து குலுங்குகின்றது. எனவேதான் ஈராக்கை பற்றி கதைக்க போகினமாம். அடுத்த நிகழ்வு 26 புகலிட பெண்கள் சந்திப்பு இந்த புகலிட பெண்கள் சந்திப்பில் வருடா வருடம் வழைமை போல நடக்கின்ற புலியெதிர்ப்பு தான் இந்த வருடமும் நடக்க போகின்றது. எனவே இதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள தேவையில்லை. அனால் அடுத்ததாக நடக்க போகின்ற முதலாவது தலித்மகாநாடு என்கிற பெயரில்: நடக்க போகின்ற மகாநாடுதான் முக்கியமான ஆனால் மேசமான விளைவுகளை ஏற்படுத்த போகின்ற மகாநாடு. ஏனெனில் நான் முதலே குறிப்பிட்டது போல இது இந்தியாவில் தலித் அடைப்புகளிடையே ஈழத்தமிழரிற்கு இருக்கும் ஆதரவை சீர்குலைக்கும் ஒரு நிகழ்வு காரணம் இந்த நிகழ்வை ஒழுங்கு படுத்தியிருப்பவர்கள் இலங்கையரசின் எலும்புத்துண்டை எட்டிப்பிடித்தவர்கள். ஏற்கனவே இந்த மகாநாடு பற்றி நான் எதிர்பார்த்ததை போல இணைய தளங்களிலும் வலைப்பூக்களிலும் பல சர்ச்சையைகளை கிழப்பி விவாதங்களும் தொடங்கி விட்டது.இந்த மகாநாட்டிற்கு பிரான்சில் பெரியார் விழிப்பணர்வு இயக்கம் என்று தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் ஒரு பெண்மணியும் தெரிந்தோ தெரியாமலோ இந்த மகாநாட்டிற்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார் ஆனாலும் அவரிற்கு தலித் மகாநாட்டின்உள்நோக்கம் பற்றிய போதிய விளக்கம் கொடுத்தும் அவர் பெரியார் இயக்கத்தின் பெயரால் தொடர்ந்தும் தனது ஆதரவை நடக்கவிருக்கும் தலித் மகாநாட்டிற்கு ஆதரவு வழங்குவதால் இந்த பெண்மணியும் இலங்கையரசிடம் விலைபோயுள்ளார் என்று எண்ணவே தோன்றுகின்றது. எது எப்படியோ இலங்கை புலனாய்வு பிரிவினர்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இந்த நிகழ்வுகள் பற்றி பிரான்ஸ்வாழ் தமிழர்கள் விழிப்பாயிருக்க வேண்டிகால கட்டம் இது. ஆனால் இந்த ஏற்பாடுகள் இந்தியாவில் ஈழத்தமிழர்களின் ஆதரவுத்தளம் ஆட்டம்காணுமா??அல்லது இந்தச்சதிகள் தகர்க்கப்பட்டு மேலும் உறுதியாகுமா?? பொறுத்திருந்து பார்க்கலாம் நன்றி சாத்திரி

Anonymous said...

இது புலி எதிர்ப்பு மகா நாடு என்பது பரமரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
புலிகளின் போராட்டத்தை தலித்துகளுக்கு எதிரானது என மெல்ல மெல்ல‌
கதை புனைய முயலுகிறார்கள்.
இலங்கை அரசின் ஆசீர்வாதம் தாரளமாக உண்டு.

Anonymous said...

இது புலி எதிர்ப்பு மகா நாடு என்பது பரமரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
புலிகளின் போராட்டத்தை தலித்துகளுக்கு எதிரானது என மெல்ல மெல்ல‌
கதை புனைய முயலுகிறார்கள்.
இலங்கை அரசின் ஆசீர்வாதம் தாரளமாக உண்டு.

Anonymous said...

நெருப்பில்லாம புகையாது புள்ளைங்களா!

இந்த கொள்கை சார்பு குஞ்சுகள் கொக்கரிக்கிற மாதிரி தலித் மாநாடு நடத்தறவங்க, ஒரு ஆதிக்க சக்திக்கு எதிர்ப்பா ஏதோ செய்தாங்க இன்னு வெச்சிட்டா கூட, ஏன் அப்படி செய்றாங்க? எதுக்கு அப்படி செய்றாங்க? எந்த காரணத்தால அப்படி செய்றாங்க? இதன் ஆதி அந்தம் என்ன போன்ற கேள்விகளை கேக்கனுமா இல்லையா?

நீங்களே ஒருமுறை கேட்டுபாருங்கப்பா. எல்லாம் விளங்கும்.

சும்மா கட்டுக்கதை எல்லாம் விட்டு இம்சை கொடுக்காதீங்க.

என்னமோ, இந்த குஞ்சுகள் போராட்டம், மாநாடு, கலகம், புரட்சி போன்ற வார்த்தைகளை எல்லாத்தையும் காப்பி ரைட் உரிமை வாங்கிட்ட மாதிரியில்ல ரொம்பவும் அலட்டிக்கிறாங்க. கொஞ்சம் அடக்கி வாசிங்க கொழைந்தகளா.

தலித்துக்காக தலித்துகள் சிந்திக்கறதுக்கு கூட இவங்ககிட்ட உத்தரவு வாங்கனும் போல! இவங்களுக்கும் நம்ம அறுவா சுத்தி காரங்களுக்கு ரொம்ப வித்தியாசம் ஏதும் கிடையாது போங்க.

போய் சோமி பதிவை போயி படிங்க. அங்க உங்க வண்டவாலம் எல்லாம் தண்டவாலம் ஏறுதுங்கோய்!!!

வர்ட்டா!

Anonymous said...

/////இந்த மகாநாட்டிற்கு பிரான்சில் பெரியார் விழிப்பணர்வு இயக்கம் என்று தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் ஒரு பெண்மணியும் தெரிந்தோ தெரியாமலோ இந்த மகாநாட்டிற்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார் ஆனாலும் அவரிற்கு தலித் மகாநாட்டின்உள்நோக்கம் பற்றிய போதிய விளக்கம் கொடுத்தும் அவர் பெரியார் இயக்கத்தின் பெயரால் தொடர்ந்தும் தனது ஆதரவை நடக்கவிருக்கும் தலித் மகாநாட்டிற்கு ஆதரவு வழங்குவதால் இந்த பெண்மணியும் இலங்கையரசிடம் விலைபோயுள்ளார் என்று எண்ணவே தோன்றுகின்றது.//////

எங்க தமிழச்சி யாருக்கும் விலை போகாதவங்க. உங்க ஆளுங்க பெரியாரை வைத்தும், தமிழச்சியின் அரசியல் செல்வாக்கை வைத்தும் அய்ரோப்பாவில் அரசியல் நடத்த முயன்ற அம்பலத்தை வெளிப்படுத்தியவர். மகளிர் சந்திப்பிற்கும் சென்றது தேனீ இணையத்தில் அவரைப்பற்றி எழுதியதற்காக இயக்கத்தின் எதிராளிகளையும் எதிர்த்தவர். அவரைப் பற்றி பேச உனக்கு என்ன யோக்கியதை இருக்கு?

Anonymous said...

யாரோ பாரிஸிலிருந்து தவறான தகவல் தருகின்றார்களோ தெரியவில்லை.
இது ஈழத் தமிழர்கள் மத்தியில் பிளவை உருவாக்க நடைபெறும் எண்ணம் கொண்ட மகானாடு. இதில் இருப்பவர்கள் அனைவரும் தமிழ் ஈழத்திற்கு எதிரான கருத்துக்களை விதைத்துக்கொண்டிருப்பவர்கள்.

விமல்

Anonymous said...

யாரோ பாரிஸிலிருந்து தவறான தகவல் தருகின்றார்களோ தெரியவில்லை.
இது ஈழத் தமிழர்கள் மத்தியில் பிளவை உருவாக்க நடைபெறும் எண்ணம் கொண்ட மகானாடு. இதில் இருப்பவர்கள் அனைவரும் தமிழ் ஈழத்திற்கு எதிரான கருத்துக்களை விதைத்துக்கொண்டிருப்பவர்கள்.

விமல்

Anonymous said...

//ஈழத் தமிழர்கள் மத்தியில் பிளவை உருவாக்க நடைபெறும் எண்ணம் கொண்ட மகானாடு//
அப்படீன்னா, இவ்ளோ காலமும் சாதி பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் அனைவரும் சுமுகமாக ஒத்துமையுடன் தான் வாழ்ந்து வந்தீங்கன்னு சொல்ல வாரீங்களா?

பின் அதெப்படி இது திடீர்னு கெணறு வெட்ட பூதம் மாதிரி புதுசா கெளம்பி வந்திருக்குது. அப்படீன்னா, எல்லாமே சோடிப்பா? எல்லாமே கட்டுக்கதையா?

என்னைக்கு நீங்க உங்களுடைய அழுக்கு துணிகள் எல்லாவற்றையும் பொது மக்கள் மத்தியில் கொண்டுவந்து துவைக்க ஆரம்பிச்சீங்களோ, அன்னைக்கே உங்க சாயம் வெளுத்துப்போச்சீங்க.
எதுவுமே, நெருப்பு இல்லாம புகையாதுங்க.

Anonymous said...

திரு.கோ.சுகுமாரன் அவர்களே!

இந்த மகா நாட்டை ஏற்பாடு செய்தவர்கள் யாரேனும் ஈழ ஆதரவு நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்களா என்பதை தேடிப்பாருங்கள்.
இந்த மனிதர்களின் முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் உண்மை முகத்தைப் பார்க்கலாம்!!!!!!

விமல்

Anonymous said...

திரு.கோ.சுகுமாரன் அவர்களே!

இந்த மகா நாட்டை ஏற்பாடு செய்தவர்கள் யாரேனும் ஈழ ஆதரவு நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்களா என்பதை தேடிப்பாருங்கள்.
இந்த மனிதர்களின் முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் உண்மை முகத்தைப் பார்க்கலாம்!!!!!!

விமல்

Anonymous said...

மதிப்புக்குரிய சுகுமாரணுக்கு உங்கள் பதிவுகளை திடர்ந்து வாசிக்கும் வாசகன் நான், உங்களுக்கு தவரான தகவல் வழங்கப்பட்டிருக்கு என்றே நானும் நினைக்கிறேன், உண்மையை ஆராய்ந்து பார்க்கவும், அதுவும் இறுதியாக கூறிய அனானியின் வேண்டுகோள்படி இவர்கள் யாராவது தமிழருக்கு ஆதரவான் கூட்டங்களில் கலந்து கொண்டு இருகிறார்களா? என்று ஆராய்ந்து பார்த்து உண்மையை உய்தறிந்து கொள்ளவும்.
எனக்கு தெரிந்த வரைக்கும் லண்டன் பசீர் எர்பவர் ஜிகாத்தின் லண்டன்கிளையின் ஒரு ஏஜன் அதாரங்கள் தேவை எனில் தனிப்பட அனுப்பி வைக்கமுடியும்.பெயரை இடமுடியாமைக்காக வருந்துகிறேன். நான் ஒரு தனி ஆள், இக்கூட்டத்தின் பின் சிங்கள் இனவெறி அரசு இருக்கிறது.

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

அன்புத் தோழர்களுக்கு, வணக்கம்.

பிரான்சில் நடந்த இலங்கைத் தலித் மாநாடு குறித்து நடைபெறும் அனைத்து விவாதங்களும், சர்ச்சைகளும் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

இதுபற்றி ஒரிரு நாளில் விரிவான பதிவு ஒன்றை இடவுள்ளேன்.

மிக்க நன்றி!

Anonymous said...

அய்யா வணக்கம் தமிழச்சியை வம்புக்கு இழுத்த கூட்டம் இப்போது உங்களிடம் வந்திருக்கிறது. மனித உரிமைக்கு குரல் கொடுக்கும் நீங்கள் தலீதுக்கு ஆதரவு அளிக்க மாட்டீர்களா? உங்களுக்கு விபரங்கள் தெரிய வேண்டுமானால் தமிழச்சி அவர்களிடம் கேளுங்கள். அவர் தலீத் மாநாட்டு நிகழ்ச்சிகளை நேரில் பார்த்தவர்.

நன்றி

Anonymous said...

//இந்த மகா நாட்டை ஏற்பாடு செய்தவர்கள் யாரேனும் ஈழ ஆதரவு நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்களா என்பதை தேடிப்பாருங்கள்.//

ஆமாம்யா, இவ்வளவு காலமா அவங்கள பூச்சிமாதிரியான வாழ்க்கை வாழ வைத்துகொண்டு, வஞ்சித்து, நசுக்கி, கொடூரம் செய்து வந்தீங்க. இப்போது உங்களுக்கே டவுசர் கிழியிற நிலமை வந்ததும் அவங்கிகிட்டையே ஆதரவு கேக்கறீங்க.

நீங்க அவங்களுக்கு என்ன செய்தீங்களோ, கொடுத்தீங்களோ அதையேதான் அவங்களுக்கும் உங்களுக்கும் திரும்பி செய்வாங்க.

நீங்க நினைத்தால் அடிப்பீர்கள், பிறகு ஆபத்து என்கிற போது ஆதரவுக்கு துணை கேட்பீர்களா?

அவங்க கிட்ட போய் ஆதரவு கேக்கறீங்களே! உங்களுக்கு வெட்கமாக இல்லையா? இதற்கு அவங்க காலில விழுந்து முதலில் மன்னிப்பு கேளுங்கள். அப்பவாவது உங்களுக்கு புத்தி வருகிறதா என பார்ப்போம்.

தலித்தியம் காப்போம்!

கயவர்களின் நயவஞ்சக சூழ்ச்சிகளுக்கு இரையான எங்கள் முன்னோர்கள் இம்மண்ணில் சிந்திய ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் கணக்கு தீர்க்க வேண்டிய தருணம் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது.

தலித்தியத்தை எந்த கொம்பன் வந்தாலும் எதையும் அசைக்க முடியாது.

உன்னால் முடிந்ததை நீ பார்த்துக்கொள்!

சிவா சின்னப்பொடி said...

சாதியம் உடன் பிறந்தே கொல்லும் வியாதி
சாதியம் உடன் பிறந்தே கொல்லும் வியாதி



தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டத்தின் வீரவரலாறு 18 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களின் உயிராலும் இரத்தத்தாலும் எழுதப் பட்டுக் கொண்டி ருக்கின்ற இந்த நேரத்தில் தமிழனத்தின் சாபக்கேடும் உடன் பிறந்தே கொல்லும் வியாதியுமான சாதியத்தை பற்றி இங்கே புலம் பெயர்ந்த நாட்டில் இருந்து பேச வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நாங்கள் இருக்கிறோம்.

இன்று புலம் பெயர்ந்த நாடுகளிலுள்ள புலி எதிர்ப்பாளர்களுடைய பிழைப்புக்கான மூலதனமாக சாதியம் திகழ்கிறது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை குறுகிய சாதிய வட்டத்தக்குள் அடக்கி கொச்சைப்படுத்தி மக்களை பிளவு படுத்த முனையும் வேலைகளும் திட்ட மிட்டு செய்யப்பட்டு வருகின்றன.

மறுபுறத்திலே ஒருவன் தான் இருக்கும் ஊரை மாற்றலாம் தனது பெயரை மாற்றலாம் தனது தொழிலை மாற்றலாம் தனது மதத்தை மாற்றலாம் ஆனால் தனது தாய் தந்தையரையும் தனது பிறப்பையும் அதனால் வரும் சாதிய அடையானத்தையும் மாற்ற முடியாது என்று சொல்கின்ற ஒரு கூட்டமும் ‘சாதியா அது எங்கே இருக்கிறது என்று சிங்களப்பார்வை பார்வை பார்த்து பம்மாத்து விடுகிற ஒரு கூட்டமும் இங்கே புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கிறது.( சிங்களப் பார்வை என்றால் தமிழர்களுக்கு இனப் பிரச்சனை என்ற ஒன்று இருகக்pறதா என்று முழுப் புசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்ப்பது.தமிழர் எல்லாம் பொரிய உத்தியோகத்தில் இருக்கிறார்கள்.வியாபாரம் அவர்கள் கையில் தான் இருக்கிறது. கொழும்பில் இலட்சக்கணக்கான தமிழர்கள் வசதியாக வாழ்கிறார்கள் என்று உதாரணம் காட்டுவது)

2000 வருட காலமாக நமது கருத்தியல் தளத்திலே ஆளமாக வேரூன்றி நமது சிந்தனைத் தளத்தை ஆக்கிரமித்திருக்கிற சாதியத்தை நாங்கள் ஒரு 30 வருடப் போராட்டத்தில் முற்று முழுதாக அழித்துவிட முடியாது என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும்.

சாதியம் என்பது மாறவில்லை அது அன்று இருந்த வடிவத்தில் இன்றும் அப்படியே இருக்கிறது என்று கூறமுடியாது.இன்று அடிமை குடிமை முறை கிடையாது. தீண்டாமை அன்றிருந்த நிலையில் இன்று இல்லை.ஆனால் அது முற்றாக ஒழிந்துவிட்டது என்று சொல்ல முடியாது.

சாதியம் என்பது என்ன? இது எப்போது தோன்றியது? இன்று எங்கள் மத்தியிலே இருக்கக் கூடிய சாதியம் தமிழ் சமூக உருவாக்கத்துடன் தோற்றம் பெற்றதா அல்லது அந்நிய ஆக்கிரமிப்பாளர்களால் திணிக்கப்பட்டதா என்கின்ற வினாக்களுக்கு விடை தெரியாத நிலையில் அல்லது அதை தெரிந்து கொள்ள விரும்பாத நிலையிலேயே எல்லோரும் சாதியைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் வர்க்க அடிப்படையிலான சாதியத்துக்கும் வர்ணக்கோட்பாட்டின் அடிப்படையிலான சாதியத்துக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நம்மவர்கள் புரிந்துகொள்வதே இல்லை.

வர்க்க அடிப்படையிலான சாதி அமைப்பு என்பது அதாவது ஆண்டான் அடிமை- முறையும் மூலதனத்தை அல்லது சொத்தை அடிப்படையாகக் கொண்ட ஏற்றத் தாழ்வுகளும் ஐரோப்பிய சமூகத்தில் கூட இருந்தன. சர்வ வல்லமை பொருந்திய மத குருமார்கள் அரச பரம்பரையினர் பிரபுக்கள் அல்லது பூர்சுவாக்கள் வணிகர்கள் குடியானவர்கள் அல்லது அடிமைகள் என்று ஐரோப்பிய சமூகத்திலும் எற்றத் தாழ்வுகள் இருந்தன.

தமிழ் சமுகத்திலும் குறுஞ்சி முல்லை நெய்தல் மருதம் பாலை என்ற ஐவகை நிலப் பிரிவினை அடிப்படையிலான சமூக அமைப்பும் வலிமை மற்றும் சொத்தின் அடிப்படையிலான ஆண்டான் அடிமை முறையும் மற்ற சமூங்களைப் போலவே இருந்தது.செய்யும் தொழிலை அடிப்படையாக வைத்து மனிதர்களை இழிவுபடுத்தும் முறை தமிழ் சமூகத்தில் ஒரு பொது வழக்கமாக இருந்ததாகத் தெரியவில்லை.அடிமை குடிமை முறை சில தொழில்களை அடிமட்ட மக்கள் தான் செய்யவேண்டும் என்று கட்டாயப் படுத்தி இருந்தது. ஆண்டைகளுக்கும் அடிமைகளுக்கும் இடையிலான ஏற்றத் தாழ்வு என்பது ஏனைய சமூகங்களில் இருந்தததைப் போலவே தமிழ் சமூகத்திலும் இருந்தது.ஆனாலும் பண்டைய தமிழ் சமூகம் காதல் மணத்தையும் களவு மணத்தை ஏற்கொண்ட சமூகமாக இருந்தால் சாதியக் கலப்பு தடுக்கப்படவில்லை என்பதையும் அறிய முடிகிறது.

ஆனால் இன்று தமிழ் சமூகத்துடன் பின்னிப் பிணைந்திருக்கும் சாதிய அமைப்பென்பது அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இது தனக்குத் தானே வேலிபோட்டு தன்னை தானே அடைத்துக்கொன்டுவிட்ட ஒரு சமூக அலகாகாகும். தமிழ் சமுகத்தை தனித்தனி அலகுகளாக்கி எந்த ஒரு அலகும் மற்ற எந்த ஒரு அலகுடனும் இணைவதை ‘புனிதம் தீட்டு அகமணமுறை’ என்பவற்றின் முலம் தந்திரமாகத் தடுப்பதே இன்றைய இந்த சாதி அமைப்பின் அடிப்படையாகும். ‘நான் கடவுளின் படைப்பால் புனிதமானவன். என்னுடைய சாதி புனிதமானது.நான் என்னுடைய சாதி அலகுக்குள் அல்லாத அடுத்த சாதியினனை என்னுடன் சேர்த்துக்கொண்டால் அல்லது என்னுடைய வீட்டுக்குள் கோவிலுக்கள் அனுமதித்தால் ஒன்றாக உண்டு குடித்து உறங்கினால் தீட்டுப்பட்டுவிடும் என்பதே இந்த சாதி அமைப்பு போதித்து வைத்திருக்கும் நீதியாகும்.எனவே இந்தப் புனிதத்தை காப்பாற்றுவதற்கு அகமணமுறை அதாவது தங்களது உறவு வட்டத்துக்குள் திருமணம் செய்வது வலியுறுத்தப்படுகிறது. காதல் திருமணமும் கலப்புத் திருமணமும் பாவச் செயலாகவும் எற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் பிரகடனப்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு சாதிய அலகும் தன்னை தானே தன்னளவில் புனிதர்கள் என்ற நினைப்போடு மற்ற சாதிய அலகுகளில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வதால் ஏனைய சமூகங்களிலும் இனங்கள் மத்தியிலும் (இந்தியா இலங்கை தவிர்ந்த) ஏற்பட்ட தொழில் புரட்சி பொருளாதார மாற்றம் மற்றும் அரசில் புரட்சிகளால் வர்க்க அடிப்படையிலான காரணங்களின் அiடிப்படையில் இருந்த சாதி அமைப்பு தகர்ந்தது போல எங்கள் மத்தியல் இருக்கும் சாதி அமைப்பு தகரவில்லை.

என்னளவில் எங்கள் அளவில் நாங்கள் மேலானவர்கள் புனிதர்கள் என்று எங்கள் சிந்தனைத் தளத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் கருத்தியலே பௌத்த சிங்கள பேரின வாதிகள் குண்டு வீசி எங்கள் இனத்தையே அழிக்கும் போது சாதியையும் தூக்கிக் கொண்டு ஓடுவதும் புலம் பெயரும் போது அதையும் விமானமேற்றி கூடவே அழைத்துவருவதும் தொடர்கிறது. இந்த கருத்தியல் தான் காட்டிக் கொடுப்புக்களுக்கும் துரோகத்தனத்துக்கும் பிழைப்பு வாதத்துக்கும் கூட அடிப்படையாக இருக்கிறது.

ஈழத் தமிழ் மக்களான நாங்கள் யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு என்ற மூன்று வாழ்வியல் தளங்களை கொண்டவர்கள். இதில் யாழ்ப்பான சமூகமும் அதன் வாழ்வியல் தளமும் மட்டுமே இறுக்கமான சாதியக் கட்டமைப்பை கொண்டதாக இருந்தது. சாதி என்பது தமிழர்களுடைய அடையாளம் என்று இந்த சமூகம் நம்பியது.

யாழ்ப்பாண சமூகத்தின் சாதி அமைப்பு கட்டுள்ள சாதிகள், கட்டற்ற சாதிகள், கட்டுள்ள கலப்புச் சாதிகள், கட்டற்ற கலப்புச் சாதிகள் என்ற நான்கு வரையறைகளைக் கொண்டவையாக இருந்தது.

வெள்ளாளர், பிராமணர், கோவியர். நளவர், பள்ளர், பறையர், வண்ணார், அம்பட்டர், ஆகிய சாதிகள் கட்டுள்ள சாதிகளாக இருந்தன. இதில் வெள்ளாளரும் பிராமணர்களும் அதிகார வர்க்க சாதியினராகவும் ஏனையோர் அடிமைச் சாதியினராகவும் இருந்தனர்.

இந்தியாவை பொறுத்தவரை பிராமணர்கள் முதன்மைச் சாதியினராக இருந்த போதிலும் யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர்களுக்கு அடுத்த இடத்திலேயே அவர்களது நிலை இருந்தது.

இந்துத்துவ வர்ணக் கோட்பாட்டின்படி வெள்ளாரர்கள் சூத்திரர்கள் என்ற அடிமட்ட சாதிப் படிநிலைக்குள் அடக்கப்பட்ட போதிலும் ஆறுமுக நாவலர் அதை மறுதலித்து வெள்ளாளர்களை சற்சூத்திரர்கள் அதாவது பிராமணர்களுக்கு நிகரானவர்கள் என்று நிறுவியதும் நிலமும் கோவில்களும் வெள்ளாளர்களுடைய ஆதிக்கத்திலேயே இருந்ததும் பிராமணர்கள் அவர்களது கோவில்களில் ஊழியம் செய்பவர்களாக இருந்ததுமே அவர்களது சாதிப் படி நிலையை பின் தள்ளிவிட்டது.

இந்த கட்டுள்ள சாதி அமைப்பில் கோவியரும் பஞ்சமர்கள் எனப்படும் நளவர், பள்ளர், பறையர், வண்ணார், அம்பட்டர் ஆகியோரும் வெள்ளாளர்களுடைய குடிமைகளாக கருதப்பட்டார்கள்.1920 ம் ஆண்டு இந்த குடிமைமுறை சட்டரீதியாக ஓழிக்கப்பட்டாலும் 1970ம் ஆண்டு வரை அது தேசவழமை என்ற பேரில் கட்டாயப் படுத்தப்பட்டிருந்து. கோவியர்கள் வெள்ளாளர்களுடைய வீட்டு வேலைகளை செய்வதும் அவர்களது உடமைகளாக இருந்த கோவில்களுக்கு ஊழியம் செய்வதும் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது.

ஏனைய பஞ்சமர் சாதிகள் வெள்ளாளர்களின் விளை நிலங்களில் கூலியின்றி வேலை செய்து கொடுப்பது, அவர்களது வீட்டு திருமண ஊர்வலங்களில் “கா” காவிச் செல்வது. அதாவது ஒரு தடியில் ஒரு முனையில் வாழைக்குலை பலாப்பழம்; முதலான பழ வகைகளையும் மறு முனையில் அரிசி முதாலான உணவுப் பண்டங்கள் மற்றும் பாத்திங்கள் முதலான சீர் வரிசைகளையும் கட்டித் தொங்க விட்டு அந்தத் தடியை தோழில் வைத்து அந்த ஊர்வலம் முடியும் வரை காவிக் கொண்டு செல்வதே “கா” காவுதலாகும். மரச்சடங்கில் பாடை கட்டுவது (பெண்கள்) குடக் குரவை வைப்பது மயானத்தில் பிணத்தை எரியூட்டுவது என்று இந்தக் குடிமை முறை நீண்டு கொண்டு செல்லும் .

யாழ்ப்பாணக் குடாநாட்டின் கட்டற்ற சாதிகளாக முக்குவர் திமிலர் தட்டார் செட்டிகள் முதலானவை இருந்தன. இந்தச்சாதிகள் தங்களுக்குள் இறுக்கமான கட்டுக் கோப்பையும் அகமணமுறையையும் கொண்டவையாக இருந்த போதிலும் கட்டுள்ள சாதிகளைப் போல அடிமை குடிமைகளை கொண்டவையாக இருக்கவில்லை.

கட்டுள்ள கலப்புச்சாதிகள் என்ற வரையறைக்குள் நட்டுவர்கள் பண்டாரிகள்; முதலானோர் அடக்கப்பட்டனர். தங்களுக்குள் தங்களுக்கு இணையான சாதியனருடன் உறவுகளை பேணிவந்த இவர்கள் அடிமை குடிமைகளை ஒடுக்கும் விடயத்தில் வெள்ளார்களுக்கு இணையானவர்களாகவே இருந்தார்கள்.

கட்டற்ற கலப்புச்சாதிகளாக கரையார் தச்சர் கொல்லர் குயவர் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர்.அதிகளவுக்கு நெகிழ்வுத் தன்மையைக் கொண்ட இந்தச் சாதியினரிடையே தீண்டாமையும் மற்றவர்களை அடக்கி ஒடுக்கும் மனோபாவமும் ஏனைய மேல்தட்டு மற்றும் இடைநிலை சாதியினரைவிடக் குறைவாகவே இருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் எனையபகுதிகளை விட கரையார சாதியினரை அதிகமாகக் கொண்ட வடமராட்சி கிழக்கு பகுதிகள் சாதிய ஒடுக்குமுறை மிகக் குறைந்த பகுதிகளாக இருந்ததும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

1697ம் ஆண்டு ஒல்லாந்தருடைய ஆட்சிக்காலத்தில் 40 சாதிகள் இருந்ததாக குறிக்கப்பட்டிருக்கிறது.தற்போது 15 முதல் 20 சாதிகளே வழக்கில் இருப்பதாகவும் அதிலும் சில சாதிகள் மறைந்துவிடும் நிலையில் இருப்பதாகவும் 2000ம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழர்கள் தங்கள் வரலாற்றை தொலைத்தற்கும்; தங்கள் தேசத்தை தொலைத்ததற்கும் அடிப்படையான இந்தச் சாதியத்துக்கு அடிப்படையாக இருப்பது வைதீக இந்து மதம் என்பதில் யாரும் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம்.கி.மு.1 ம் நூற்றாண்டில் வட இந்தியாவிலே ஆட்சியல் இருந்து சுங்க வம்சப் பிரிவைச் சேர்ந்த(பார்ப்பணிய பிரிவு) புஷ்யமித்திரன் என்பவனின் ஆட்சிக்காலத்தில் சுமதி பார்கவா என்ற பிராமணனால் உருவாக்கப்பட்ட மனு தர்மம் என்றே நூலின் மூலமே சாதியம் சட்டமாக்கப்பட்டது. இந்த இந்துத்துவ சட்ட நூலில் வகுக்கப்பட்ட வர்ணக் கோட்பாட்டின் மூலமே குலத் தொழிலும் தீண்டாமையும் அகமணமுறையும் மக்கள் மீது திணிக்கப்பட்டன.

நம்மிலே பலர் வைதீக இந்து மதத்துக்கும் தமிழர் மதத்துக்குள் வேறுபாடுகாண முடியாத நிலையிலேயே இருக்கி;றார்கள். அன்பேசிவம் என்பதும் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்; என்பதும் தான் தமிழர் மதமாகும்.சிவலிங்கம் என்பது ஆண்பெண் உறுப்புக்கள் சேர்ந்த வடிவம் என்பதும் கி.பி முதலாம் நூற்றாண்டு வரை ஆரிய வைதீக பிராமணர்கள் இந்த வழிபாட்டுமுறையை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.திராவிடர்களை போரில் வெல்ல முடியாத ஆரியர்கள் தங்களது வர்ணக் கோட்பாட்டை தமிழர்கள் மத்தியல் புகுத்தி தந்திரமாக அவர்களை அடிமை கொள்வாற்காக பிச்சாண்டியான சிவனை மஹாதேவனாகவும் முருகனை ஸ்கந்தனாவும் கண்ணனை மகா விஸ்னுவாகவும் காளியையும் ஏனைய பெண் தெய்வங்களையும் சக்தியின் அம்சங்களாகவும் மாற்றிய வரலாற்றை இந்தக் கட்டுரையின் நீட்சி கருதி இங்கே குறிப்பிடவில்லை.

18 ம் நூற்றாண்டில் (1790 என்று நினைக்கிறேன்) தமிழகத்தின் பாண்டிச் சேரி காரைக்கால் பகுதிகளை கொலனிகளாக வைத்திருந்த பிரெஞ்சு அரசின் ஆளுனராக இருந்த தளபதி துப்ளக்ஸ் என்பவர் தமிழ் சமூகம் பற்றி ஒரு ஆய்வை செய்திருக்கிறார்.

இந்த ஆய்வில் முக்கியமான அம்சம் சோழரைப் பற்றியது.ஐரோப்பியர்களான தாங்கள் கடல்கடந்து சென்று நாடுகளைப் பிடித்து கொலனிகளாக வைத்திருப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தச் சோழர்கள் அதாவது தமிழர்கள் கிழககு மற்றும் தெற்காசியாவிலுள்ள பல நாடுகளை பிடித்து தங்கள் ஆட்சியின் கிழ்; வைத்திருந்திருக்கிறார்கள். அந்த நாடுகளில் அவர்கள் திரட்டிய செல்வம்; எல்லாவற்றையும் அவர்கள் தொழில் துறைகளில் முதலீடு செய்திருந்தால் இன்றைக்கு அவர்களுடைய நாடு பிரான்சை விட பலம் கொண்ட நாடாகவும் வளாச்சியடைந்த நாடாகவும் இருந்திருக்கும். ஆனால் அவர்களுக்கு ஆலோசகர்களாக இருந்த பிராமணர்கள் நீங்கள் சென்ற இடங்களில் எல்லாம் கொலையும் கொள்ளையும் செய்து பாவம் சம்பாதித்துவிட்டீர்கள்.இந்த கொடிய பாவம் உங்கள் சந்ததியை அழித்துவிடும் அதற்கு பிராயச்சித்தம் தேடுவதற்கு கோவில்களை கட்டுங்கள் யாகங்கள் நடத்துவதற்கும் வேத பாராயணம் செய்வதற்கும் பிராமணர்களுக்கு தானங்களை வழங்குங்கள் எற்று கூறி அந்த செல்வம் எல்லாவற்றையும் கோவில் கட்டுவதற்கும் சதுர்வேதி மங்கலங்கள் என்ற யாக சாலைகளை அழைப்பதற்கும் செலவழிக்க வைத்துவிட்டார்கள். இன்று சோழர்களும் இல்லை.அவர்களது இராட்சியமும் இல்லை. அவர்களது குடி மக்களான தமிழர்கள் தங்களது முன்னோர்கள் செய்த பாவம் தீர இன்னமும் கோவில்களில் பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கிறார்கள். சோழர்களை போரில் வெல்ல முடியாத அவர்களது எதிரிகள் மதம் என்ற அவர்களது பலவினத்தை வைத்து அழித்ததை பிரான்ஸ் அரசாங்கம் உதாரணமாகக் கொள்ளவேண்டும் என்று துப்ளக்ஸ் தனது ஆய்வில் தெரிவித்திருக்கிறார்.

சாதி என்பது தமிழ் சமூகம் ஒன்றுபடுவதற்கும் விடுதலை இலக்கை விரைந்து அடைவதற்கும் முக்கயமான தடைக்கல்லாக இருக்கிறது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.

தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் சாதியத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் என்பதிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குள் சாதியம் என்பது நுளைய முடியாது என்பதிலும் சந்தேகமேயில்லை.இதற்கு ஏராளமான நடைமுறை சார்ந்த உதாரணங்கள் இருக்க்pன்றன.அவை பற்றி இங்கு பேச வேண்டிய தேவையும் இல்லை.

இப்போது பிரச்சனை என்னவென்றால் புலம் பெயர்ந்த சமூகத்தை சீரழிப்பதற்கு சாதியத்தை கையில் எடுப்பதாகும்.

புலம் பெயாந்த நாடுகளில் சாதி பார்க்கப்படுகிறதா? அது எந்த வகையில் பார்க்கப்படுகிறது? ஏன் பார்க்கப்படுகிறது? என்பது விரிவாக ஆராயப்பட வேண்டிய விடயமாகும். ‘நான் திருமணம் செய்யும் போது சாதி பார்ப்பது எனது தனிப்பட்ட உரிமை’ என்று கூறுவது தொழில் நிறுவனங்களில் சுவரை வெட்டி கண்னாடி பொருத்தியும் அறைக்கு அறை கமெராக்கள் பொருத்தியும் வேலை செய்பவர்களை எஜமான் பண்ணையார் ஸ்டைல்களில் கண்காணித்து பழைய அடிமை குடிமை முறைக்கு புத்துயிர் அளிப்பது. அதை நிர்வாகச் செயற்பாடாக நியாயப்படுத்துவது. ஒரு மனிதனுக்கு தான் கண்காணிக்கப்படுகிறேன் என்ற உணர்வு ஏற்படும் போது அவனால் சுதந்திரமாகவும் அர்ப்பணிப்புடனும் வேலை செய்முடியாது என்ற அடிப்படை உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பது. நடுத் தெருவில் ஆட்களை நிறுத்தி அவர்கள் மீது தமது அதிகாரங்களை செலுத்தி தங்கள் மேலாண்மையை நிலை நிறுத்துவது.ஐரோப்பிய சமூகத்தில் கோட்சூட் போட்டு வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்றும் ரை கட்டுவது என்பது பரம்பரையாக வரவேண்டும் என்று சொல்வது. சாதி பார்ப்பவர்களை மறைமகமாக தட்டிக்கொடுத்து அவர்களது செயல்களை ஊக்கவித்துவிட்டு மறு புறத்தில் நமது சமூகம் இன்னும் திருந்தவில்லை என்ற பம்மாத்து விடுவது இப்படி எராளமான விடயங்கள் புலம்பெயாந்த சமூகத்தில் நடக்கின்றன. இவற்றுக்கான அடிப்படைகள் எவை. இந்த போக்குகள் எப்படி புலம்பெயாந்த இளைய சமூகத்தை அந்நியப்பட வைக்கின்றன. இவை எப்படி தமிழ் தேசித்துக்கு துரோகம் செய்கின்றன என்பதை அடுத்த கட்டுரையில் விரிவாக எழுதுகிறேன்.

யாழ் இணையத்துக்காக எழுதியது

Publié par siva sinnapodi à 12:54 AM 1 commentaires



தலித்தியமும் தமிழ் தேசியமும்

தலித்தியமும் தமிழ் தேசியமும்

தலித்தியம் என்ற ஒரு சொல்லை இப்போது ஈழத் தமிழ்பரப்பில் அறிமுகப் படுத்தும் ஒரு முயற்சி நடக்கிறது. அதை அறிமுகப்படுத்துபவர்கள் புலி எதிர்ப்பையும் அதோடு இணைப்பதால் பலருக்கு அந்தச் சொல்லைக் கேட்டதும் இயல்பான ஒரு கோபமும் எரிச்சலும் வருகிறது. இந்தக் கோபத்தையும் எரிச்சலையும் வெளிப்படுத்துபவர்கள் தலித்தியம் என்ற அந்தச் சொல் குறிக்கும் அர்த்தத்தை புரிந்து கொண்டு அதை வெளிப்படுத்த வில்லை.அந்தச் சொல்லை தங்களது புலி எதிர்ப்புச் செயற்பாட்டுக்கு பயன்படுத்துவோரை வைத்தே இந்தக் கோபமும் எரிச்சலும் வருகிறது.
தலித் என்பது இந்திய பெருநிலப்பரப்பில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான ஒரு பொது அடையாளமாக வைத்துக்கொண்ட பெயராகும்;. இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்த மக்களை ‘ஹரிஜனம்’ (ஹரி என்பது விஷ்ணு) என்று மகாத்மா காந்தி பெயர் சூட்டி அழைத்தார்.அதாவது கடவுளின் குழந்தைகள் என்பது இதன் பொருளாகும்.ஆனால் இந்து மதத்திலுள்ள வர்ணக் கோட்பாடே சாதியத்துக்கு அடிப்படையாக இருக்கிறது என்ற கருதிய இந்த மக்களுடைய அமைப்புக்கள் இந்த மதக்குறியீPட்டுச் சொல்லால் தாங்கள் அழைக்கப்பட்டவதை மறுத்து தலித்துக்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டார்கள்.

தெற்கே கன்னியாகுமரி கடற்கரையோரத்திலிருந்து வடக்கே இமயமலைக் சாரலிலுள்ள குக்கிராமங்கள் வரை இந்திய பெரு நிலப்பரப்பெங்கும் பரந்து வாழும் அனைத்து ஒடுக்கப்பட்டமக்களும் (சாதியத்தால்)தங்களை தலித்தக்கள் என்று அழைக்கிறார்கள். அவர்களுக்குரிய அரசியல் கோட்பாடு தலித்தியம் எனப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தவரை அங்குள்ள மக்களுக்குரிய பிரதான முரண்பாடாக சாதிய முரண்பாடே இருக்கிறது. இந்திய தேசியம் என்பது இந்த முரண் பாட்டை கட்டிக் காக்கின்ற அமைப்பாகவே இருக்கிறது. இன்றைக்கும் சாதி குறைந்தவரை மலம் உண்ண வைப்பதும் உயிரோடு எரிப்பதும் உணவகங்களில் தனித் தட்டு தனிக் குவளை வைத்து தனிமைப்படுத்துவதும் தமிழகக் கிராமங்களில் இன்று வரை தொடர்கிறது.
இந்த நிமிடம் வரையில் தமிழகம் மட்டும் அல்லாமல் இந்திய சமூகம் முழுவதுமே சாதியச் சமூகமாக பிளவு பட்டுப்போய்கிடக்கிறது. தீண்டாமை என்பது வெளிப்படையாகவே இருக்கிறது. இன்று வரை சாதியக் கலப்பு எற்பட்டுவிடும் என்பதற்காக காதல் திருமணங்களை ஏற்றுக்கொள்ளாத மனப்பான்மையும் காதல் என்றால் தீண்டத் தகாத ஒன்று என்ற சிந்தனையும் மக்கள் மத்தியிலே இருக்கிறது.கட்சி அரசியலுக்காகவும் அதிகாரவர்க்க நலன்களுக்காவும் சாதியம் கட்டிக்காக்கப்படுவதோடு ஒடுக்கு முறையும் சாதிக்கலவரங்களும் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. அதிகாரத்தை கையில் வைத்துள்ள மேல்தட்டு வர்க்கம் அடித்தட்டு மக்கள் மீது திணிக்கும் அடக்குமுறைக்கு எதிராக அந்த மக்கள் சாதி அமைப்புக்களின் கீழ் அணி திரள்வது அங்கு தவிர்க்க முடியாததாகிறது. இல்லையென்றால் தஞ்சாவூர் மாவட்டம் கீழ் வெண்மணியில் நிகழ்ந்து போல அவர்கள் குடும்பம் குடும்பமாக எரித்துக் கெல்லப்பட்டுவிடுவார்கள்.இது இந்திய தழிழக நிலப்பரப்பக்குரிய முரண்பாட்டின் தன்மையும் கள நிலமையும ஆகும்.

இதை நாங்கள் அப்படியே கொப்பியடித்துக்கொண்டு வந்த எங்களுடைய நாட்டிலே பொருத்த முடியாது..ஈழத் தமிழர்களான எங்களைப் பொறுத்தவரை சாதிய முரண்பாடு என்பது அடிப்படை முரண்பாடாகும் அது இப்போது பிரதான முரண்பாடாக இல்லை.இப்போது சிறீலங்கா விமானப்படை எமது தாயகத்தின் மீது குண்டுபோடும் போது சாதி பார்த்துக் குண்டு போடுவதில்லை.சிறீலங்கா படையினர் எறிகணைத்தாக்குதல் நடத்தும் போது இது உயர்சாதிக்காரர் வாழும் இடம். இது சாதி குறைந்த வர்கள் வாழும் இடம் என்றெல்லாம் பார்த்து தாக்குதல் நடத்து வதில்லை. சிறீலங்கா அரசினதும்; அதை இயக்குகின்ற பௌத்த சிங்கள பேரின வாதி களினதும் இலக்கு ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழித்து அல்லது அடக்கி தமது மேலாண்மை நிலைநாட்டுவதாகும்.ஈழத் தமிழ் மக்களான எங்களைப் பொறுத்தவரை இன்று பிரதான முரண்பாடாக இருப்பது இன முரண்பாடாகும்.

தலித்தியத்தை எமது தளத்தக்கு இறக்குமதி செய்ய நினைப்பவர்கள் தங்களது செயலை நியாயப்படுத்துவதற்காக ஈழப் போராட்டம் என்பதே மேட்டுக் குடியினரின் போராட்டம் என்று சித்தரிக்க முனைகிறார்கள்.தமிழீழ தேசியத் தலைவரையும் விடுதலைப்புலிகளையும் மேட்டுக்குடியினரின் நலன்களை பாதுகாப்பவர்களாக சித்தரிக்க விளைகிறார்கள்.
தமிழ் தேசியவாதத்தக்கு சிந்தைனைக்கு வடிவம் கொடுத்தவர்; ஆறுமுக நாவலர் என்றும் சிறீலங்கா அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் யாழ்ப்பாண மேட்டுக்குடி இளைஞர்களே என்றும் நிறுவி அதன் மூலம் தமிழிழ விடுதலைப்போராட்டம் அடித்தட்டு மக்களுக்கு எதிரானது அது அதிகாரவர்க்கத்தின் மேலாண்மையை நிலை நிறுத்தவே நடக்கிறது.அதனால் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லாம் தலித்துக்கள் என்று அடையாளத்துக்குள் ஒன்றிணைய வேண்டும் என்ற இவர்கள் வாதிடுகின்றனர்.

முதலாவதாக இலங்கையில் இருந்த சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் ‘ஹரிஜன்கள்’ என்ற பொது இந்துத்துவ அடையாளத்தால் அழைக்கப்படவும் இல்லை அவ்வாறு அவர்கள் ஒரு மத அடையாளத்தின் கீழ் ஒருபோதும் ஒன்றுபட்டுப்போராடவும் இல்லை.யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் பஞ்சமர்கள் என்று குறிப்பிடப்பட்டாலும் பொது அரசியல் வழக்காக சிறுபான்மைத் தமிழர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள்.தீண்;டாமையின் விச்சு 1970 களுக்கு முன்னர் இருந்ததைப் போல இப்போது இல்லை.அதேபோல அடிமை குடிமை முறையும் இப்போது இல்லை.ஓடுக்குபவனை திருப்பி அடிக்க திராணியற்று அல்லது உரிமையற்று எல்லாம் தலைவிதி என்று சொல்லிக்கொண்டிருந்த சமூகம் இப்போது தாயகத்தில் இல்லை.இந்தியவில் தலத் தலித்தியம் என்ற சொல்லுருவாக்கத்துக்கு அடிப்படையாக இருக்கும் களயதார்த்தம் ஈழத்தில் இல்லை. ஈழத் தமிழர்களான எங்களைப் பொறுத்த வரை நாங்கள் தமிழர்கள் என்ற பொது அடையாளத்துக்குள் நின்று எங்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கம் எதிராகப் போராடுவதே இன்றைய தேவையாகும்.

ஆறுமுகநாவலர் தமிழ்தேசியவாதத்துக்கு அடித்தளம் இட்டவர் என்று கூறுவதன் மூலம் அவர் சாதிய மேலான்மையை நிலை நிறுத்தியவர் என்று நிறுவி அதனால் தமிழ் தேசியம் என்பதே அதை நிலை நிறுத்துவதை அடிப்படையாகக் கொண்டது எனறு காட்ட முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய சிந்தனை என்பது ஒரு சமூகத்துக்குள் இருக்கும் அனைத்து முரண்பாடுகளையும் களைந்து அந்த சமூகத்தை ஒரே இனம் என்ற அடிப்படையில் ஒன்றுபட வைப்பதாகும். ஆனால் ஆறுமுக நாவலரோ சாதி பார்த்ததன் மூலம் தமிழினத்தை பிளவுபடவைத்தார். ஐரோப்பியர்களின் வருகையால் பிடி தளர்ந்து போன சாதிகட்டமைப்பை சற்சூத்திரக் கோட்பாடு என்ற ஒன்றைக் கொண்டு வந்து இறுக்கமாக்கினார்.ஆங்கிலக் கல்வி கற்று பைபிளை அனைவரும் படித்துப் புரிந்தகொள்ளக் கூடிய இலகு தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்து கிறீஸ்தவ மதமாற்றத்துக்குஆரம்பத்தில் மறைமுகமாக துணைபோன அவர் அடுத்தட்டு மக்கள் மதம்மாறி ஆங்கிலக் கல்வி கற்று வளர்ச்சியடைவது தனது சமூகமேலாண்மையை பாதிக்கும் என்று உணர்ந்துகொண்டதும் கிறீஸ்தவமத எதிர்ப்பை முதன்மைப்படுத்தினார்.(அந்தக்காலகட்டத்தில் பைபளை ஆறுமுகநாவலரைப் போல எழிமையான தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் படி எவரும் மொழி பெயர்க்கவில்லை.)சைவ மேன்மையை வலியுறுத்திய அவர் கிறிஸ்த்தவ மதமாற்றத்தை தடுத்து நிறுத்தி தமிழ் மக்கள் அனைவனையும் ஒரே இனம் ஒரே மதத்தவர் என்ற அடிப்படையில் ஒன்றிணைக்கும் தேசியச் சிந்தனை உடையவராக இருந்திருந்தால் அவர் தான் உருவாக்க்pய சைவப்பிரகாச வித்தியா சாலைகளில் தமிழர்கள் என்ற அடிப்படையில் எந்தவித வித வேறுபாடுமின்றி அனைவருக்கும் கல்வி கற்கும்வாய்ப்பை கொடுத்திருப்பார். ஆனால் தான் எழுதி வெளயிட்ட சைவசமயப் பாடப்பத்தகங்களில் எல்லாம் சாதியை வலியுறுத்தி தமிழ் மக்களை பிளவு படுத்தினார்.ஒரு சமூகத்தின் உயிர்நாடியாகவும் தேசிய அடையாளமாகவும் இருப்பது கிராமியக் கலைகளாகும். அந்தக் கலைகளின் நிகழ்களங்களாக ஆலயங்களே இருப்பது வழக்கமாகும் .ஆனால் ஆறுமுக நாவலரோ இழிசனர்களர்கள் என்று தான் கருதிய ஒடுக்கப்பட்ட மக்களால் நடத்தப்படும் இந்தக் கலைகள் ஆலயங்களின் புனிதத்தை கெடுப்பதாக கூறி அவற்றை ஆலங்களில் நிகழ்த்தக்கூடாதென்று தடை செய்ததன் மூலம் இன்னொரு விதத்திலும் தமிழ் தேசிய உருவாக்கத்துக்கு இடையூறு செய்தார்.ஆறுமுக நாவலர் சிறந்த தமிழ் அறிஞர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.அவர் தமிழுக்கு செய்த நன்மை 30 வீதம் என்றால் தமிழ் சமூகத்துக்கு செய்த தீமை 70 வீதமாகும். எனவே ஆறுமுக நாவலரில் இருந்தே தமிழ் தேசியவாதம் தோற்றம் பெற்றது என்று கூறுவது எற்புடையதல்ல.அவ்வாறே தமிழர்களுடைய உரிமைப்போர் யாழ்ப்பாண மேல்தட்டு பிரிவினரால் அவர்களுடைய வர்க்க நலன்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது என்று கூறுவதும் வரலாற்றை திரிக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு முன்வைக்கப்படும்ஒரு கூற்றாகும்.

குடாநாட்டில் சாதி ரீதியாக ஓடுக்ப்பட்ட மக்கள் தாங்கள் குடியிருந்த நிலைத்தை தங்களுக்கு சொந்தமாக்குவதற்கும் சொந்தமாக புதிய நிலங்களை வாங்கும் உரிமையை பெறுவதற்குமாக 1892ம் ஆண்டும் 1904 ம் ஆண்டும் நடந்திய நில உரிமைப் போராட்டங்களும் (மண்ணுக்கான போராட்டங்கள்;1910 ம் ஆண்டும் 1920 ம்ஆண்டும் நடத்திய கற்வி கற்கும் உரிமை மற்றும் மேலாடை அணியும் உரிமை கல்வீடு கட்டும் உரிமை என்பவற்றுக்காக நடத்திய போராட்டங்களும் 1935 மற்றும் 1960 களில் நடந்த தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களுமே தமிழ் தேசிய சிந்தனையின் உருவாக்கத்திற்கான அடிப்படைகளாகும்.ஒரு சமுகம் எதிர்கொள்ளும் அக-புற முரண்பாடகளின் ஐக்கியமும் போராட்டமும் தான் அந்த சமூகத்தை அடுத்த கட்டத்தை நோக்கி தள்ளுகிறது என்பது இயங்கியல்விதியாகும் .இந்த வகையிலேயே தமிழ் சமூகம் முதலில் தனக்குள் இருந்த அகமுரண்பாட்டுகளுக்கு எதிராக போராடி அதன் அடுத்த கட்டமாக தன் மீது புற நிலையில் இருந்து திணிக்கப்பட்ட பௌத்த சிங்கள பேரினவாதத்தக்கு எதிராக தற்போது போராடுகிறது.

சிறீலங்கா அரசு தமிழ் மக்களுடைய விடுதலை உணர்வை சிதைப்பதற்கும் தமிழ்தேசிய ஒருமைப்பாட்டை குலைப்பதற்கும் பிரதேசவாதம் சாதியம் ஆகிய நட்பு முரண்பாடுகளை பகை முரண்பாடுகளாக மாற்றும் முயற்சியில் திட்டமிட்ட ஈடுபட்டு வருகிறது.இதற்காக ஒரு பெரிய கருத்தில் போரையே அது தொடுத்திருக்கிறது. அதன் ஒரு அங்கம் தான் விடுதலைப்புலிகள் ஒரு குறிப்ப்pட்ட வர்கக்த்தினரின் நலன்களுக்காக மட்டும்தான் போராடுகிறார்கள் என்று சித்தரிக்க முயல்வதாகும்.புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் போராட்டத்தின் ஆதார சக்தியாக ஒன்ற திரள்வவதை தடுப்பதற்கான வேலைத் திட்டத்தையும் சிறீலங்கா அரசு செய்துவருகிறது.

இந்த யாழ் களத்திலே அண்மைக்காலமாக இந்துத்துவத்தை நியாயப்படுத்தவது பெரியாரை தூற்றுவது ஆகிய இரண்டு விடயங்கள் நடந்து வருகின்றன. தலித்தியம் பேசபவர்கள் புலி எதிர்ப்பை அதனுடன் இணைப்பதைப் போல இந்துத்துவத்தை நியாயப்படுத்தம் பெரியாரை தூற்றும் பிரிவினர் தமிழ் தேசிய ஆதரவு என்ற விடயத்தையும் தங்களது கருத்தியலுடன் இணைக்கின்றார்கள்.தலித்தியத்தை தாயகத்துக்கு இறக்குமதி செய்யும் நினைக்கும் பிரிவினர் தமிழ் தேசியம் என்பதே மேல்தட்டுப்பிரிவினரின் நலன்களுக்காக அடித்தட்டு மக்களை ஓடுக்குவது என்று கூறிவருவதற்கு சாட்சி செல்வதைப் போலவே இந்துத்துவ ஆதரவு மற்றும் பெரியார் எதிர்ப்பு என்பவற்றை முதன்மைப்படுத்துபவர்களுடைய எழுத்துக்கள் இருக்கின்றன.

இந்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சனாதன மதம் என்பது வேறு தமிழர் மதம் என்பது வேறு என்பதை முதலில் நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.ஒவ்வொரு சமூகமும் தனக்கென்று ஒரு மெய்யியலை கொண்டிருப்பதைப் போலவே தமிழ் சமூகமும் தனக்கென்று தனித்துவமான மெய்யியலை கொண்டிருக்கிறது. தமிழர் மெய்யியல் எப்படி பார்ப்பணிய மெய்யியலால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பதை ஆராயுங்கள்.தமிழ் சமூகத்தில் இருந்த ஓதுவார்கள் அல்லது அந்தணர்களும் வர்ணக் கோட்பாட்டையும் அதன் சாராம்சமான புனிதம் தீட்டு என்பவற்றiயும் தங்களது சடங்காசாரங்களாக் கொண்டுள்ள பார்ப்பணியர்களும் ஒன்றல்ல என்பதை உணருங்கள்.சிவன் கந்தன் கண்ணன் காளி ஐயனார் முதலான தமிழ் கடவுள்கள் எப்படி பார்பணியக் கடவுள்களாக மாற்ப்பட்டார்கள் என்பதை ஆராயுங்கள். தமிழ்நாட்டிலுள்ள தமிழ் கோவிலான சிதம்பரத்தில் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றஅந்தக்கோவில் தீட்சதர்களுடைய மனோபாவம் என்ன என்பதை விவாதியுங்கள். இந்து மதத்தின் மேன்மை சிறப்பு என்பதைபற்றி எல்லாம் மதம் என்ற ஒரு தனியான தலைப்பின் கீழ் ஆராயுங்கள்.இந்து மதத்தில் உள்ள வர்ணக் கோட்பாடு சரியா தவறா என்பதை விவாதியுங்கள். தயவு செய்து அதை விடுத்து தமிழ் தேசியம் என்பது இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டது என்று அதனுடன் இணைத்து பேசுவதற்கு முற்படாதீர்கள்.இந்துமத மேன்மைக்காவே விடுதலைப் போராட்டம் நடக்கிறது என்ற எதிரிகளின் பிரச்சாரத்துக்கு துணைபோகாதீர்கள்.தமிழ் தேசியம் என்பது அனைத்து தமிழ் மக்களுக்கும் பொதுவானது பாரபட்சம் காட்டாதது.பிறப்பால் தொழிலால் மக்களை இழிவுபடுத்தாதது என்பதை உங்கள் பேச்சிலும் எழுத்திலும் செயலிலும் காட்டுங்கள்.
அடுத்து பெரியார் பற்றி எழுதுகின்றவர்கள் உங்களுடைய நோக்கம் என்ன என்பதை தயவு செய்து வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள்.பெரியார் என்ன செய்தார்? அவர் சரியா பிழையா என்று விவாதிப்பதற்கு செலவழிக்கும் நேரத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை தமிழ்தேசியத்தின் பால் ஒன்றிணை ப்பதற்கு என்ன செய்யலாம். அடையாளம் இழந்து தெருவுக்கு வரும் இளைஞர் கூட்டத்தை நெறிப்படுத்துவதற்கு என்ன செய்யலாம். என்றெல்லாம் ஏன் சிந்திக்கக் கூடாது.தமிழகத்திலே 1982 ல் இருந்து இன்று வரை தழிழிழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்மையை பௌத்த சிங்கள பேரினவாதிகள் தமிழ் மக்களுக்கு இழைக்கும் அநீதிகளை பட்டி தொட்டிக் கிராமங்கள் எல்லாம் எடுத்துச் சென்று பிரச்சாரம் செய்தவர்கள்-இன்றும் செய்து வருபவர்கள் பெரியாரின் திராவிடர் இயக்கத்தினராகும்.தேசியத் தலைவருக்கு தோள் கொடுத்ததில் இருந்து தமிழகத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கான பரப்புரையை தங்கள் சொந்தப் பரப்புரையாக வீடுவீடாக எடுத்துச் சென்று செய்ததில் இருந்து அனைத்து விடயங்களிலும் முன்னணியில் இருந்தவர்கள் திராவிடர் கழகத்தினர்.இன்று வரை தமிழகம் முழுவதும் குறைந்தது திராவிடர் கழகத்தின்; இலட்சக் கணக்கான தொண்டர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கும் தடைகளுக்கும் மத்தியிலும் உண்மையான தமிழ்தேசிய ஆதரவை கட்டிக்காத்து வருகிறார்கள்.
இன்றைக்கு தமிழகத்திலும் சரி இந்தியாவிலும் சரி தமிழ்தேசியத்துக்கு எதிராக இருப்பவர்கள் யார் ?அதை நசுக்குவதற்கு முனைபவர்கள் யார் என்று பார்த்தீர்கள் என்றால் அத்தனைபேருமே பார்ப்பணியர்கள் என்பதை கண்டு கௌ;வீர்கள.; ‘சோ’ இராமசாமியில் இருந்து ‘இந்து’ ராம் சுப்பிரமணியம் சுவாமி மற்றும் ரோவையும் - சவுத் பிளாக் எனப்படும் வெளியுறவுத்துறை கொள்கை வகுப்பு பிரிவையும் ஆக்கிரமித்திருக்கும் பார்ப்பணர்கள் தான் என்பதை கண்டு கொள்வீர்கள்.

1982 ல் இருந்து 1987 வரை தமிழகத்தில் தங்கியிருந்த நான் தமிழகத்தின் பட்டி தொட்டி கிராமமெங்கும் பரப்புரைக்காக சென்றபோது அங்கு பெரியார் என்ற அந்த மனிதர் ஏற்படுத்திய தாக்கத்தை நேரில் கண்டிருக்கிறேன்.பெரியார் என்ற மனிதர் இல்லை என்றால் தமிழகத்தின் குப்பனும் சுப்பனும் கட்டியுள்ள கோவணத்தையம் பறிகொடுத்த நிலையில் அம்மணமாகத்தான் இன்றும் இருந்திருப்பார்கள்.இது தான் அங்குள் கிராமங்களின் கள யதார்த்தம்.அது கேரள எல்லையிலுள்ள களியக்காவலையாக இருந்தாலும் சரி கர்நாடக எல்லையிலுள்ள சத்திய மங்கலமாக இருந்தாலும் சரி ஆந்திர எல்லைக்க அண்மையிலுள்ள கும்மிடிப்புண்டியாக இருந்தாலும் சரி நிலைமை என்பது இதுதான்.எங்களுடைய தளத்தில் இருந்துகொண்டு பெரியாரை தூற்றுவதற்கும் விமர்சிப்பதற்கும் இப்போது என்ன தேவை வந்தது என்று எனக்குத் தெரியவில்லை.பெரியாரும் அவரது திராவிடர் கழகத்தினரும் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது தீங்கிளைத்திருக்கிறார்களா? பெரியாரோ அல்லது அவர் வழி நடப்பதாகச் சொல்லும் திராவிட இயகக்த்தினரே சிறீலங்கா அரசுக்கும் பௌத்த சிங்கள பேரின வாதிகளுக்கும் துணை போயிருக்கிறார்களா?பெரியார் மீது உங்களுக்கு எற்படும் இந்தளவு காழ்ப்புணர்வு தமிழ் தேசித்தை ஒடுக்குவதற்கு அல்லும் பகலும் அயாராது உழைக்கும் -சிறிலங்கா அரசுக்கு நிபுணத்துவ ஆலோசனைகளையும் மறைமுக ஆயுத உதவிகளையும் வழங்கும் பார்ப்பணிய கொள்கை வகுப்பாளர்கள் மீது உங்களுக்கு ஏன் வரவில்லை.?

ஆனால் இந்த பெரியார் எதிர்ப்பு என்பது புலம் பெயர்ந்த தலித்தியவாதிகள் தங்கள் செயல்களை நியாயப் படுத்துவதற்கும் தமிழனத்துரோகிகள் தமிழகத்திலுள்ள தமிழ் தேசிய ஆதரவுதத் தளத்தை சிதைப்பதற்கும் தான் பயன்படும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அடுத்து இன்றைக்கு புலம் பெயர்ந்த நாடுகளிலே 90வீதமான தமிழ் மக்கள் சாதியத்தை கட்டிக்காக்கிறார்கள்.தங்கள் பிள்ளைகளுக்கு சாதிப் பெருமைகளை வீட்டிலேயே சொல்லிக் கொடுக்கிறார்கள்.தங்கள் பிள்ளகைள் சாதி விட்டு சாதி திருமணம் செய்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.புலம் பெயர்ந்த தமிழ் இளையோரில் ஒரு குறிப்பிட்ட சத விகிதத்தினர் நன்றாகப் படிக்கிறார்கள் என்றால் அதை விட ஒரு மடங்கு அதிகமான பகுதியினர் சீரழிந்து போகிறார்கள்.இதுதான் யதார்த்தம்.என்று செல்கின்ற போது இல்லை அப்படிக் கிடையாது என்று சொல்வதன் மூலம்; நாங்கள் யாரை காப்பாற்ற நினைக்கிறோம்? யாரை ஏமாற்ற நினைக்கிறோம்?

சீரழிந்த போகிற இந்த இளைஞர் கூட்டத்தை பார்த்து ஊத்தையங்கள்.காவாலியள் பொறுக்கிகள் என்று சர்வ சாதாரணமாகச் சொல்லகிறோம். ஆனால் அவர்கள் இவ்வாறு தெருவுக்கு வருவதற்கு என்ன காரணம் என்று நாங்கள் ஆராயத் தயாரில்லை. அவர்களை சமூகப் பொறுப்புள்ளவர்களாக மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்றும் யாரும் சிந்திப்பதில்லை. எங்களைப் பொறுத்தவரை அவர்கள் திருந்தாத கேசுகள் என்று கூறி ஓதுக்கிவிடுகிறோம்.ஏங்களுடைய நோகக்ம் என்ன ஒரு கறிப்பிட்ட பகுதியினர் டொக்கடர் எஞ்சினியர் எகக்வுண்டன் என்று சொல்லிக் கொண்டு ஊரில் போய் இறங்க இன்னொரு பகுதியினர் காவாலிகள் தெருச்சண்டியர்கள் என்று போய் இறங்கும் நிலையை வளர்த்துவிடுவதா?

1998 ம் அண்டு பாரிஸ் நகரத்தில் நான் நேரடியாக இறங்கி தகவல் திரட்டியதில் 116 இளைஞர்கள் சாதியத்தால் பாதிக்கப்பட்டு படிப்பை கைவிட்டு பெற்றோரை பிரிந்து தெருவுக்கு வந்ததை கணக்கெடுத்திருக்கிறேன். புலம்பெயர்ந்த நாடுகளில் குறிப்பாக பாரிஸ் போன்ற பெரு நகரங்களில் பெற்றோருக்கம் பிள்ளைகளுக்கமான முரண்பாடு அதிகரிப்பதற்கும் அவர்கள் அடையாளம் இழந்து போவதற்கும் சாதியம் முக்கியமான காரமாக இருக்க்pறது.இதற்கு நூற்றுக் கணக்கான உதாரணங்களை என்னால் கூறமுடியும்.அடுத்து தமிழ் சமூகத்திடம் உள்ள ஒரு பொதுவான குணாம்சம் என்னவென்றால் ‘நான் பிடித்த முயலுக்க மூன்று கால்’ என்று பிடிவாதம் பிடிப்பது.யதார்த்ததை புரிந்த கொள்ள மறப்பது.அல்லது புரிந்தும் பரியாத மாதிரி நடிப்பது.

தயவு செய்து இந்தப் பிரச்சனையை ஆக்க பூர்வமாக விமர்சிப்பதற்கு முன்வாருங்கள்.நிறைய தேடல்களை செய்யுங்கள். நிறைய நூல்களை படியுங்கள்.ஆகக்பூர்வமான கருத்துக்களை முன் வையுங்கள். தயவு செய்து இந்தப் பிரச்சனையில் விதண்டாவாதம் செய்ய முற்படடாதீர்கள்.


யாழ் இணையத்திற்காக எழுதியது

http://sivasinnapodi1955.blogspot.com/2007_03_01_archive.html