Thursday, December 04, 2008

திருக்கோணமலையில் கவிஞர் சு.வில்வரெத்தினம் - நினைவு நிகழ்வு!

எதிர்வரும் 09-12-2008 (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணிக்கு திருக்கோணமலை நகரசபை மண்டபத்தில் கவிஞர் சு.வில்வரெத்தினத்தின் இரண்டாமாண்டு நினைவு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

சு.வி-யின் வருகையும் வசிப்பும் திருக்கோணமலை நகரின் அக்காலகட்டத்து சமூக - வாசிப்பு - எழுத்து - நாடகத் துறையில் கணிசமானளவு பங்களிப்பினையும் அதிர்வினையும் ஏற்படுத்தியது.

அதையும் தாண்டி ஈழத்து எழுத்துத்துறையில் அன்னாரது பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து, அத்துறையில் பரிச்சயம் கொண்டவர்கள் கருதுவதை கண்டும் கேட்டும் வாசித்தும் நாம் அறியக்கூடியதாயிருக்கும்.

தனிப்பட, அவரது ஆளுமையும், பழகும் முறையும், திறந்த மனதும் அதிகமதிகம் கவர, அவரது கனிவின் இசை லயத்தில் கட்டுண்டு கிடந்தவர்களாக நம்மில் சிலர் இருந்திருப்போம்.

ஆற்றலும், ஆளுமையும், கவிதையும், தமிழும், கலையும், கனிவும், ஆன்மீகமுமாய் இன்னும் பலவுமாய் வாழ்ந்து பின் நம்மையெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கி நடுவழியில் பிரிந்து சென்ற அந்தக் கவிஞனை நினைத்து திருக்கோணமலை நண்பர்கள் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இந்நிகழ்வில் கலந்துகொள்ள இணையவாசிகள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்...

மேலதிக தகவல்களுக்கு இதைச் சொடுக்கவும்

1 comment:

Anonymous said...

கவிஞர் சு.வில்வரெத்தினத்தை நினைவுக் கொள்வது, ஈழத் தமிழர் உரிமைப் போராட்டத்திற்கு ஆதராவான போக்கை உருவாக்கும்!