Tuesday, November 23, 2010

சென்னையில் ‘அயோத்தி தீர்ப்பும் மதசார்பின்மையும்’ – கருத்தரங்கம்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் வரும் நவம்பர் 25 அன்று சென்னையில் “அயோத்தி தீர்ப்பும் மதசார்பின்மையும் – கருத்தரங்கம்” நடைபெற உள்ளது.

இக்கருத்தரங்கம் சென்னை தியாகராயர் நகரில் உள்ள பி.டி.தியாகராயர் அரங்கில் (கண்ணதாசன் சிலை அருகில்) 25.11.2010 வியாழனன்று, மாலை 6.00 மணியளவில் நடைபெறுகிறது.

தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் தலைமைத் தாங்குகிறார். தமுமுக தென் சென்னை மாவட்டத் தலைவர் ஜனாப் ஜெ.சீனி முகமது வரவேற்புரை ஆற்றுகிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கோ.முத்துக்கிருஷ்ணன், கிறிஸ்துவர் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் அருட்திரு ஜேவியர் அருள்ராஜ், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

தமுமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜனாப் முகமது அபுபக்கர் (எ) கோரி நன்றியுரை கூறுகிறார்.

இக்கருத்தரங்கத்தை தென் சென்னை மாவட்ட தமுமுக ஏற்பாடு செய்துள்ளது.

தொடர்புக்கு: 9710391138, 9841632184.

No comments: