Saturday, January 19, 2013

மாணவர்களுக்குத் தாராளமாக உதவ வேண்டுகோள்!


அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குப் புதுச்சேரி அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாகவே செயல்படுத்தி வருகிறது. இருந்தாலும் இவை மாணவர்களுக்கு முழுமையானதாக இல்லை. இதனைக் கணக்கில் கொண்டு கிராமப்புற மாணவர்களுக்கு உதவ 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் சில முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். அந்த வகையில் ஒரு கிராமப்புற பள்ளிக்கு முதலில் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய முடிவு செய்துள்ளோம். அந்தப் பள்ளிக்குத் தேவைகள் என்ன என்பது குறித்து ஆய்வு செய்தோம். அவை: 1.) ஒரு எல்.சி.டி. புரொஜெக்டர், 2) 150 மாணவர்களுக்கு (6, 7, 8ஆம் வகுப்பு) காலணி (சேன்டக்ஸ்) 3) 800 மாணவர்களுக்கு முழுநிளச் சுவடி.

இதற்கு முகநூல் நண்பர்களின் உதவியை பெரிதும் எதிர்ப் பார்க்கின்றோம். தங்களால் முடிந்த நிதி உதவியினை காலத்தே அளித்து உதவ வேண்டுகிறோம். நிதி அளிப்பவர்களுக்கு முறையே வரவு செலவு கணக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கென தனிக் குழு ஒன்றை அமைத்துள்ளோம். 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' எங்கும் நிதியுதவி பெற்று செயல்படும் அமைப்பு அல்ல என்பதும், முழுக்க முழுக்க மக்களின் உதவிகளை மட்டுமே நம்பி செயல்படுகிற அமைப்பு என்பதைக் குறிப்பிட விரும்புகிறோம்.

நிதி உதவி அளிக்க விரும்புவோர் தொடர்புக் கொள்ள:

கோ. சுகுமாரன், செயலாளர்,
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.

பேச: 98940 54640
மின்னஞ்சல்: sugumaran.ko@gmail.com

No comments: