Saturday, February 03, 2007

புதுவையில் நில அபகரிப்பு : வழக்குப் பதி்வு

புதுவையில் நடந்த நில அபகரிப்பு குறித்து லாசுப்பேட்டை போலீ்சார் வழக்குப் பதிவு செய்தனர். நில அபகரிப்பில் ஈடுபட்ட செல்வராஜுலு செட்டி அறக்கட்டளையின் தலைவர் எச்.பி.என். ஷெட்டி, சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் எம்.எஸ். மருதுபாண்டியன், அரசம்மாள், அய்யப்பன் உள்ளிட்டோர் குற்றவாளிகளாக வழக்கில் குறிப்பிட்டுள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் 471 (போலியான ஆவணத்தை உண்மையெனக் கூறி ஏமாற்றுதல்), 511 (அதற்குண்டான தண்டனை) மற்றும் 34 (கூட்டுச் சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

வழக்குப் பதியப்பட்டதைத் தொடர்ந்து, 23-01-2007 அன்று, பாண்டிச்சேரி வழக்கறி்ஞர்கள் சங்கப் போதுக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், வழக்கறிஞர் மருதுபாண்டியன் மீது போடப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெற வேண்டும், சிவில் வழக்குகளில் போலீசு தலையிடக் கூடாது, வழக்குப் போட்ட போலீசு அதிகாரிகள் சங்கத்திற்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும், வழக்கறிஞர் மீது புகார் அளித்தவர் மேல் வழக்குப் போட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் போடப்பட்டன.

இக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பு செய்வது எனவும் முடிவு செய்தனர்.

No comments: