Tuesday, March 06, 2007

தமிழக மீனவர்கள் சுட்டுக் கொலை: பழ.நெடுமாறன் கண்டனம்


தமிழக மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக் கொல்லும் இலங்கை கடற்படையின் செயலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்தார்.

புதுச்சேரி மீனவர் விடுதலை வேங்கைகள் சார்பில் சிங்காரவேலர் பிறந்தநாள் விழா, இலங்கைத் தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் வழங்கும் விழா ஆகியவை புதுச்சேரியில் 4-3-2007 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிக்கு மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பேசியது:

ஆசிய கண்டத்தில் முதல் கம்யூனிஸ்டாகத் திகழ்ந்தவர் சிங்காரவேலர். இவர் உலகத் தொழிலாளர் தினத்தை இந்தியாவில் முதன் முதலில் கொண்டாடினார்.

அவரது பிறந்த நாள் விழாவை மீனவர் விடுதலை வேங்கைகள் இயக்கம் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இயக்கம் ஒரு சமுதாய இயக்கமாக மட்டுமல்லாமல், தமிழ்த் தேசிய உணர்வுப் படைத்த இயக்கமாகத் திகழ்வதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஈழத்தில் வாழும் மக்கள் இலங்கை இராணுவத்தின் இனவெறியால் பலியாகி வருகின்றனர். அவர்களுடன் சகோதர உணர்வு கொண்டவர்கள் என்பதால் தமிழக மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக் கொல்லும் கொடுமையும் நடந்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பழ.நெடுமாறன்.

இவ்விழாவில் அமைப்புச் செயலர் விசுவநாதன், தமிழக மீனவ மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கில்பர்ட் ரோட்ரிகோ, மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் கோ.சுகுமாரன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் சஞ்சீவி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, செந்தமிழர் இயக்கத் தலைவர் ந.மு.தமிழ்மணி, மக்கள் சிவில் உரிமைக் கழக மு.முத்துக்கண்ணு, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

2 comments:

Anonymous said...

OUR GOVT NEVER TRY TO STOP KILLING in MID SEA. THEY DONT WORRY ABOUT OUR TAMIL FISHERMEN. THEY USE OUR NAVY TO ARREST CEYLON TAMILS AND LTTE. BUT THEY NEVER USE NAVY TO PROTECT OUR FISHERMEN FROM CEYLON NAVY.

Anonymous said...

பதிவுக்கு நன்றி