Tuesday, October 23, 2007

புதுச்சேரியில் கொலையை மூடிமறைத்த போலீசைக் கண்டித்து சுவரொட்டி


புதுச்சேரி தேங்காய்த்திட்டு இளைஞர் பாலா (எ) தெய்வசிகாமணி கொலை செய்யப்பட்ட வழக்கை மூடிமறைத்து கொலையாளிகளைக் காப்பற்றிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரி நகரம், கிராமம் என அனைத்துப் பகுதிகளிலும் கண்டன சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளன.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, பெரியார் திராவிடர் கழகம், தமிழர் தேசிய இயக்கம், இராவணன் பகுத்தறிவு இயக்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ள செய்தியை தினகரன், மாலை மலர் ஆகிய பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

விரிவான தகவல்:

போலீஸ் மீது அளிக்கப்பட்ட புகார்

1 comment:

மாசிலா said...

மக்களின் துணிச்சல் பாராட்டுக்குரியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களால் ஆட்சி செய்ய பதவிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் சனநாயக அமைப்புகளில் இவ்வகை போராட்டங்களை உரிமை கோரல் எனவே அழைக்கலாம். மக்களுக்கு சரியான உண்மையுடன் கூடிய செய்திகளை அளிக்க வேண்டியது அனைத்து அமைப்புகளின் ஒரு சாதாரண அடிப்படை கடமையே. யார் என்ன தீர்ப்புகள் கூறினாலும், கடைசியில் மக்களின் தீர்ப்பே இறுதி தீர்ப்பு. மக்கள் என்றும் வெல்வர்.