Wednesday, December 24, 2008

அ.மார்க்ஸ் எழுதிய "கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்" நூல் வெளிவந்துவிட்டது!



பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ள "கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்" நூல் வெளிவந்துள்ளது. பக்கம்: 136. விலை: ரூ. 65/-

ஒரிசா, கர்நாடகா கிறிஸ்தவர்கள் மீது மதவெறி சக்திகள் நடத்திய தாக்குதல் குறித்த உண்மை அறியும் குழு அறிக்கைகள், நேரடியாக சென்று பார்த்த அனுபவங்கள், இந்திய கிறிஸ்துவம் அதை இந்துத்துவம் அதை எதிர்கொண்ட வரலாறு, மதமாற்ற தடைச் சட்டம் பற்றிய அலசல் என விரிவான ஆய்வு நூலாக அமைந்துள்ளது.

மதவாததிற்கு எதிராக சமரசமின்றி எழுதியும், போராடியும் வரும் அ.மார்க்ஸ் இந்நூலை எழுதியுள்ளார்.

புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்நூலை "புலம்" மிகச் சிறப்பாக தயாரித்து வடிவமைத்துக் கொடுத்துள்ளது. மேலும், "புலம்" மதவாதத்திற்கு எதிரான நடவடிக்கையாக இந்நூலை பரவலாக்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறது.

நூல் பெற விரும்புவோர் கீழ்காணும்
முகவரியில் தொடர்புக் கொள்ளவும்:

புலம்,
72, மதுர நாயக்கன் தெரு,
சின்ன மேட்டுக் குப்பம்,
மதுரவாயில்,
சென்னை - 600 095.
பேசி: 97907 52332, 98406 03499.
மின்னஞ்சல்: pulam2008@gmail.com.

கோ.சுகுமாரன்,
179-அ, மாடி, மகாத்மா காந்தி வீதி,
புதுச்சேரி -605 001.
பேச: 98940 54640.
மின்னஞ்சல்: peoples_rights@hotmail.com

4 comments:

Anonymous said...

Pakistan I.S.I சம்பள பட்டியலில் இருக்கும் எ.மார்க்ஸ் இப்போது போப்பிடமும் மொய் வாங்கிக்கொண்டு டபுள் கேம் விளையாடுகிறாரா?

Anonymous said...

அனானி,

நீயென்ன இந்து வெறி நாயா?

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டால் பேசுவது தவறா?

Anonymous said...

அ.மார்க்ஸ் எழுதியுள்ள புத்தகங்களின் பட்டியல் கிடைக்குமா?

சென்னையில் அவர் புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்று ஒரு பதிவு போடக்கூடாதா?

அவருக்கு வலைப்பூ இல்லை என்று நினைக்கிறேன்.

வித்யா, மயிலாப்பூர்.

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

அ.மார்க்ஸ் நூல்கள் சென்னையில் உள்ள முற்போக்கு நூல்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்.

இல்லையென்றால், அவரைத் தொடர்புக் கொள்ளவும்.

அவரது செல்: 9444120582.