புதுச்சேரியில் போலீசார் நடத்திய தடியடி சம்பவம் தொடர்பாக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று போராட்டக் குழுவினர் வலியுறுத்தினர்.
போராட்டக் குழுவின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் க.லட்சுமிநாராயணன் செய்தியாளர்களிடம் 13-04-2007 வெள்ளிக்கிழமை கூறியது:
துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து இதுவரை அமைதியான முறையில்தான் போராட்டம் நடந்து வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தின்போது அரசு திட்டமிட்டு தடியடி நடத்தியுள்ளது. இப்போராட்ட இடத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை, 3 போலீஸ் கண்காணிப்பாளர்கள் உள்பட அதிக அளவில் போலசார் குவிக்கப்பட்டதே இதற்கு ஆதாரம். போலீஸ் அதிகாரிகள் தகாத வார்த்தைகளைக் கூறியது அவமானமாக இருந்தது.
இத்தாக்குதலை நடத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும்.
போராட்டம் நடத்தும் தேங்காய்த்திட்டு மக்களை ஒடுக்கிவிடலாம் என்று அரசு நினைப்பது தவறு.
தடியடி சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். துறைமுக விரிவாக்கத் திட்டத்தை அரசு முழுமையாக கைவிட வேண்டும். இப் பிரச்சினையில் மேற்கொண்டு என்ன நடவடிக்கையில் இறங்குவது என்பது தொடர்பாக 14-04-2007 சனிக்கிழமை முடிவு செய்யப்படும் என்றனர்.
போலீஸ் தாக்குதலில் காயபட்டவர்கள் செய்தியாளர்களிடம் போலீஸ் அத்துமீறல் குறித்து விளக்கினர். தங்கள் உடம்பில் பட்ட காயங்களைக் காட்டினர்.
இப் பேட்டியின்போது போராட்டக் குழு அமைப்பாளர் பாலமோகனன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, மக்கள் உரிமைக் கூட்டமைப்பைச் செயலாளர் கோ.சுகுமாரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Monday, April 16, 2007
போலீசார் அத்துமீறல் : நீதி விசாரணை நடத்த வேண்டும்
அமைச்சரின் உருவ பொம்மை எரிப்பு : போலீஸ் அத்துமீறல்




புதுச்சேரியில் துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சரின் உருவ பொம்மையுடன் 13-04-2007 வெள்ளிக்கிழமை சவப்பாடை ஊர்வலம் நடைபெற்றது. இதில் போலீசாருக்கும் போராட்டக் குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க போலசார் தடியடி நடத்தினர்.
இதில் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் காயம் அடைந்தனர். அரசு பேருந்து கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டதுடன், போலீஸ் ஜீப்பின் முகப்பு விளக்கும் உடைக்கப்பட்டது.
புதுச்சேரியில் தனியார் பங்கேற்புடன் ரூ. 2700 கோடி மதிப்பில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை அமல் செய்ய புதுச்சேரி அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இத் திட்டத்துக்கு தேங்காய்த்திட்டு பகுதி மக்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேங்காய்த்திட்டு மக்கள் 13-04-2007 வெள்ளிக்கிழமை அப்பகுதியில் ஒன்றாகத் திரண்டனர். சுகாதாரம் மற்றும் துறைமுகத் துறை அமைச்சர் இ.வல்சராஜின் உருவ பொம்மையைத் தயார் செய்தனர். அதை தென்னை ஓலையில் பின்னப்பட்ட பாடையில் வைத்து அலங்கரித்து, சவ ஊர்வலம் போன்று பொரி வீசிக் கொண்டு ஆட்டம்-பாட்டம் மேளதாளத்துடன் கடலூர் சாலையை நோக்கி புறப்பட்டனர். பெண்கள் ஒப்பாரி வைத்தனர். பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
இப்போராட்டத்திற்கு போராட்டக் குழு அமைப்பாளர் எஸ்.காளியப்பன், கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், தந்தை பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதையறிந்த போலீசார், வசந்த நகர் அருகே போராட்டக் குழுவினரை தடுத்து நிறுத்தினர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு பெண், இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் போலீசார் பாடையைப் பிடுங்கினர். ஆனால், உருவப்பொம்மை போராட்டக் குழுவினரின் கையில் இருந்தது. போலீசாரின் வளையத்தைத் தாண்டி அதை எடுத்துச் சென்று மரப்பாலம் சந்திப்பு அருகே எரித்தனர். இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்ய போலீசார் முயற்சித்தனர்.
அப்போது திரண்டிருந்த மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த அரசு பஸ்சின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது.
இந்நிலையில் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட போலீசார் தடியடி நடத்தினர். அப்போது போராட்டக் குழுவினர் சிதறி ஓடினர். இதில் கவுன்சிலர் பாஸ்கரன் உள்ளிட்ட 12 பேர் பலத்தக் காயம் அடைந்தனர். 10-க்கும் மேற்பட்ட பெண்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் ஜிப்பர் மருத்துவமனையில் சி்கிச்சைப் பெற்றனர்.

போலீஸ் தாக்குதலில் இருந்து தப்பி ஓடியவர்கள் போலீசார் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், புதுச்சேரியில் செயல்படும் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படையைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் சக்திவேல், புஷ்பதியாகு, இளஞ்செழியன் ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, அப் பகுதியில் பதற்றம் நிலவுவதால் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே அடையாளம் கண்டறியப்பட்டுள்ள 20 பேர் உள்பட 250 பேர் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Friday, April 13, 2007
பொடா வழக்கு தள்ளுபடி : த.தே.இயக்கத் தடை நீக்கப்படுமா?
பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் மீது போடப்பட்டிருந்த பொடா வழக்கிலிருந்து அவர்களை விடுதலை செய்து பொடா சிறப்பு நீதீமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இத்தீர்ப்பின் மூலம், இவர்களுக்கு பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கு இருந்த தடையும், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இருந்த தடையும் நீங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2002-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பை ஒட்டி 2002, ஏப்ரல் 13-ஆம் நாள், சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காக பழ. நெடுமாறன், சுப.வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் மீது பொடா வழக்கு போடப்பட்டது.
அதன் அடிப்படையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலம் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் பிணையில் வெளிவந்த பிறகும், பொதுக் கூட்டங்களில் பேசக் கூடாது, ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கக் கூடாது, தடை செய்யப்பட்ட இயக்கங்களை பற்றி பேசக் கூடாது, வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என பல விதத் தடைகள் அவர்கள் மீது போடப்பட்டிருந்தன.
இந்த நிலையில், பொடா மறு ஆய்வுக் குழு இந்த வழக்கு செல்லாது என்று தீர்ப்பளித்ததன் அடிப்படையில், தமிழக அரசு, பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை திரும்பப் பெறும் மனுவை அளித்தது.
அம்மனுவை ஏற்றுக் கொள்ள மறுத்த பொடா சிறப்பு நீதிமன்றம், அவர்கள் மீதான வழக்கில் சான்றுகள் உள்ளன என்ற அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், இந்த நிலையில் வழக்கை திரும்பப் பெற இயலாதெனக் கூறியது.
பின்னர், தமிழக அரசின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பொடா மறு ஆய்வுக் குழு இவ்வழக்கு அடிப்படை ஆதாரமற்றது என தீர்ப்பளித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அந்த அடிப்படையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் வழக்கை அரசு திரும்பப் பெறலாம் என வாதிட்டார்.
அவரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட பொடா சிறப்பு நீதிமன்றம், 03-4-2007 அன்று, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகிய அனைவரையும் இவ்வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், இவ்வழக்கைக் காரணம் காட்டி முந்தைய அதிமுக அரசு தமிழர் தேசிய இயக்கத்தைத் தடை செய்தது. தற்போதிய திமுக அரசும் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில் இத்தடையை நீட்டிக்கச் செய்வது தவறான போக்காகும். எனவே, தமிழக அரசு உடனடியாக தமிழர் தேசிய இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும். அனைவரும் இதற்கு குரல் கொடுக்க வேண்டும்.
இத்தீர்ப்பின் மூலம், இவர்களுக்கு பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கு இருந்த தடையும், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இருந்த தடையும் நீங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2002-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பை ஒட்டி 2002, ஏப்ரல் 13-ஆம் நாள், சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காக பழ. நெடுமாறன், சுப.வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் மீது பொடா வழக்கு போடப்பட்டது.
அதன் அடிப்படையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலம் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் பிணையில் வெளிவந்த பிறகும், பொதுக் கூட்டங்களில் பேசக் கூடாது, ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கக் கூடாது, தடை செய்யப்பட்ட இயக்கங்களை பற்றி பேசக் கூடாது, வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என பல விதத் தடைகள் அவர்கள் மீது போடப்பட்டிருந்தன.
இந்த நிலையில், பொடா மறு ஆய்வுக் குழு இந்த வழக்கு செல்லாது என்று தீர்ப்பளித்ததன் அடிப்படையில், தமிழக அரசு, பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை திரும்பப் பெறும் மனுவை அளித்தது.
அம்மனுவை ஏற்றுக் கொள்ள மறுத்த பொடா சிறப்பு நீதிமன்றம், அவர்கள் மீதான வழக்கில் சான்றுகள் உள்ளன என்ற அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், இந்த நிலையில் வழக்கை திரும்பப் பெற இயலாதெனக் கூறியது.
பின்னர், தமிழக அரசின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பொடா மறு ஆய்வுக் குழு இவ்வழக்கு அடிப்படை ஆதாரமற்றது என தீர்ப்பளித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அந்த அடிப்படையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் வழக்கை அரசு திரும்பப் பெறலாம் என வாதிட்டார்.
அவரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட பொடா சிறப்பு நீதிமன்றம், 03-4-2007 அன்று, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகிய அனைவரையும் இவ்வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், இவ்வழக்கைக் காரணம் காட்டி முந்தைய அதிமுக அரசு தமிழர் தேசிய இயக்கத்தைத் தடை செய்தது. தற்போதிய திமுக அரசும் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில் இத்தடையை நீட்டிக்கச் செய்வது தவறான போக்காகும். எனவே, தமிழக அரசு உடனடியாக தமிழர் தேசிய இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும். அனைவரும் இதற்கு குரல் கொடுக்க வேண்டும்.
Thursday, April 12, 2007
செண்டூர் வெடி விபத்து : அரசு அதிகாரி பரூக்கி விசாரணை

திண்டிவனத்தை அடுத்த செண்டூரில் கடந்த 7-4-2007 அன்று வெடிமருந்து ஏற்றி சென்ற வாகனம் வெடித்துச் சிதறியது. இதில் 16 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் இந்த விபத்தில் ஏராளமான வீடுகள், கடைகள் சேதமடைந்தன. இந்த வெடிவிபத்து தொடர்பாக தமிழக அரசு, விசாரணை அதிகாரியாக வருவாய் நிர்வாக இயக்குநர் எஸ்.எம்.பரூக்கி இ.ஆ.ப.வை நியமித்தது்.
அவர் தனது விசாரணையை 11-04-2007 மதியம் திண்டிவனத்தில் தொடங்கினார். வெடிவிபத்தில் சிக்கி திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் உள்ளிருப்பு நோயாளிகளாக இருக்கும் 8 பேர்களிடம் அவர் விசாரணை நடத்தினார். பின்னர் தலைமை மருத்துவ அலுவலர் தர்மலிங்கத்திடம், ‘சம்பவம் நடந்த அன்று எவ்வளவு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்‘ என்பது போன்ற விபரங்களைக் கேட்டறிந்தார்.
இதற்கிடையே மருத்துவமனைக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பிரஜேந்திர நவ்நீத் வந்தார். அவரிடமும் பரூக்கி தனது விசாரணையை மேற்கொண்டார். பின்னர் அங்கு வந்த விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. பெரியய்யாவிடமும் இந்த வெடி விபத்து சம்பந்தமான விவரங்களை பரூக்கி கேட்டறிந்தார்.
இதையடுத்து விபத்து நடந்த இடமான செண்டூருக்கு சென்று விபத்து நடந்த இடத்தை அதிகாரி பார்வையிட்டார். பின்னர் விபத்தில் காயமடைந்த பாண்டுரங்கனின் உறவினர் வள்ளியிடம் விபத்து பற்றிக் கேட்டார். பின்னர் விபத்தில் இறந்த அண்ணன்-தம்பிகளான முத்து (ரெட்டியார்), சுந்தரராமன் (ரெட்டியார்) ஆகியோர் வீட்டுக்கு அதிகாரி பரூக்கி சென்றார். அதிகாரி தனது விசாரணையின் போது அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வெடி விபத்தில் கட்டிடங்களில் விரிசல் அடைந்து இருப்பது பற்றியும், சேதமடைந்த கட்டிடங்கள் பற்றியும் கேட்டறிந்தார். இதை தொடர்ந்து அதிகாரி அங்கிருந்து புறப்பட்டு செல்லும் போது 20க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர்.
பாதிராபுலியூரில் மணலிப்பட்டு சேகருக்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கையும் அதிகாரி பரூக்கி பார்வையிட்டார்.
பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களையும் பார்த்து விபத்து நடந்தது குறித்து விசாரணை மேற்கொண்டார்.
திண்டிவனத்தில் அதிகாரி பரூக்கி செய்தியாளர்களிடம் கூறியதாவது: செண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொருவர் மீதும் தனிக்கவனம் செலுத்தி அவர்கள் வாழ்க்கை முன்னேற அரசு உதவியாக இருக்கும். மேலும் வெடி விபத்து சம்பந்தமாக உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள், அரசின் சார்பில் அளிக்கப்பட்ட உதவிகள் போன்றவற்றை விசாரணை மேற்கொண்டு ஒரு மாதத்தில் இது சம்பந்தமான அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்வேன் என்றார்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை முடிந்தது

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை 10-04-2007 செவ்வாய்க்கிழமை முடிந்தது. தீர்ப்பை தனி நீதிமன்ற நீதிபதி கே.ருத்ராபதி நாள் குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார். இதையடுத்து, கோவை குண்டு வெடிப்பு நடந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு, வழக்கு தீர்ப்பை நெருங்கியுள்ளது.
கோவை மாநகரில் 1998 பிப்.14 அன்று 12 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. அடுத்த, ஐந்து நாள்களில் 19-ஆம் நாள் வரை மேலும் 7 குண்டு வெடிப்புகள் நடந்தன.
இது தொடர்பாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதவிர, நகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குண்டு வெடிப்பு மற்றும் தொடர் சம்பவங்கள் தொடர்பாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதில், 181 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். 167 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் தஸ்தகீர் என்பவர் இறந்து விட்டார். போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். யசூர் ரகுமான் என்பவர் அப்ரூவராக மாறிவிட்டார். 5 பேர் தலைமறைவாக உள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 2001 செப். 23 அன்று குற்றப்பத்திரிகை நகல் கொடுக்கப்பட்டது. சாட்சிகள் விசாரணை 2002 மார்ச் 7 அன்று தொடங்கியது.
வழக்கின் சாட்சிகளான 1330 பேரிடம் 2006 ஜூன் 27-இல் அரசு தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணையை முடித்தனர். இதையடுத்து, 2006 ஜூலை 7 அன்று அரசுத் தரப்பு வாதம் தொடங்கியது.
ஆயிரத்து 731 ஆவணங்கள் தாக்கல்:
அரசுத் தரப்பில் 1300 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. ஆயிரத்து 731 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 480 சான்று பொருள்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அரசுத் தரப்பின் 1300 சாட்சிகளில் முக்கிய சாட்சிகள் 210. குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தோர் மற்றும் சொத்துகள் பாதிக்கப்பட்டோர் என 423 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.
நான்கு கட்டங்களாக நடந்த வாதம்:
வழக்கின் முதல் கட்ட வாதத்தை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தொடங்கினர். குண்டு வெடிப்புக்கான நோக்கம், கூட்டுச் சதி, சதித் திட்டம் தயாரிப்பு, திட்டம் நிறைவேற்றம் என நான்கு கட்டங்களாக வாதங்களை முன் வைத்தனர்.
எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் 2006 ஆகஸ்ட் 21 அன்று வாதத்தைத் தொடங்கினர். 2007 மார்ச் 30 அன்று வாதத்தை முடித்தனர்.
எதிர்த்தரப்பு வாதங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் 100 தீர்ப்புகளை ஆதாரம் காட்டி அரசுத் தரப்பு பதிலுரை அளித்தது.பதிலுரை அளிக்க அரசுத்தரப்பு நான்கு நாள்கள் எடுத்துக் கொண்டது.
இதையடுத்து, அரசுத் தரப்பு கூறும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆதாரங்கள் இந்த வழக்குக்கு பொருந்தாது என எதிர்த் தரப்பு வாதத்தைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை 10-04-2007 செவ்வாய்க்கிழமை முடிந்தது.
நாள் குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதி கே.ருத்ராபதி ஒத்திவைத்தார்.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான், பி.திருமலைராஜன், ப.பா.மோகன் உள்ளிட்ட 23 வழக்கறி்ஞர்கள் வாதிட்டனர். மதானி உள்ளிட்ட கேரளத்தைச் சேர்ந்தவர்களுக்காக மூத்த வழக்கறிஞர் விருத்தாசலம் (ரெட்டியார்) ஆஜராகி வாதிட்டார்.
Wednesday, April 11, 2007
சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்த்து முழுஅடைப்பு

புதுச்சேரியில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேதராப்பட்டு, கரசூர் கிராம மக்கள் புதுச்சேரி-மயிலம் சாலையில் 10-04-2007 செவ்வாய் மதியம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்த அனுமதி அளித்தது. இதையட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்த புதுச்சேரி அரசு அனுமதியளித்தது. புதுச்சேரி அரசு சேதராப்பட்டு, கரசூர் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்த முடிவு செய்தது. அதற்காக 800 ஏக்கர் நிலத்தினை கையகப்படுத்த திட்டமிட்டு அரசு புறப்போக்கு நிலம், ஏரி, குளம் மற்றும் சேதராப்பட்டு, கரசூர் பகுதி விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டது. இதற்கு சேதராப்பட்டு, கரசூர் பகுதி மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் அம்மக்கள் 09-04-2997 திங்களன்று புதுச்சேரி-மயிலம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் சேதராப்பட்டு, கரசூர் மக்களிடம் குறைகளை கேட்டறிவார் என்று அறிவித்ததையட்டி சாலை மறியலை கைவிட்டனர். இந்நிலையில் 10-04-2007 செவ்வாயன்று மதியம் மாவட்ட ஆட்சியர் வருவதாக கூறியதைத் தொடர்ந்து, அவருக்காக பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால், துணை ஆட்சியர் வின்சென்ட்ராயர், வட்டாட்சியர் சுப்ரமணியன், காவல் ஆய்வாளர் வீரவல்லன் மற்றும் வருவாய் துறை, பொதுப்பணித் துறை, நீர் பாசனத் துறை அதிகாரிகள் மட்டும் வந்தனர்.

மாவட்ட ஆட்சியர் வராததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்றுதிரண்டு புதுச்சேரி-மயிலம் சாலையில் உள்ள கடைகளை அடைத்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது நீர் நிலைகளைக் கையகப்படுத்தி நிலத்தடி நீருக்குப் பாதிப்பு ஏற்படுத்தாதே, சுற்றுச் சுவர் கட்டி மக்களை சிறைப்படுத்தாதே என்று முழக்கங்கள் எழுப்பினர். புதுச்சேரி அரசுக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினர். பின்னர் சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்த்து 11-04-2007 புதனன்று, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழுஅடைப்புப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்து கலைந்து சென்றனர்.
இதையொட்டி, 11-04-2007 புதனன்று சேதராப்பட்டு, கரசூர் பகுதியில் முழுஅடைப்புப் போராட்டம் நடைப்பெற்றது. 10-ஆம் வகுப்புக்கான கடைசி தேர்வு என்பதால் மாணவ மாணவியர்களுக்கு மட்டும் பேருந்து மற்றும் வாகனங்களில செல்ல அனுமதி அளித்தனர். கடைகள் திறக்கப்படவில்லை. பேருந்துகள் பிற வாகனங்கள் இயங்கவில்லை. தொழிற்பேட்டைப் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால், இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
Tuesday, April 10, 2007
சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்த்து சாலை மறியல் - கைது

புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக புதுச்சேரி அரசு 800 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இப்பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பொதுமக்கள் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக பெரிய சுற்றுச்சுவர் எழுப்பப்பட உள்ளது. இதனால் எங்கள் கிராமங்கள் அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் வயல்வெளிகளில் இருந்து துண்டிக்கப்படும் என்று கூறுகின்றனர். மேலும், ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் அழிக்கப்பட உள்ளது. ஊருக்குள் வாழும் பொதுமக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதனால் ஒட்டுமொத்த எங்கள் கிராமமே அழியும் ஆபத்துள்ளது என்று கூறுகின்றனர்.
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுவதைக் கண்டித்து புதுச்சேரி, சேதராப்பட்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 09-04-2007 அன்று, புதுச்சேரி - மயிலம் சாலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டு மணி நேரம் இச்சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பின்னர் போலீசார் அவர்களிடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர். அதனை அவர்கள் ஏற்கவில்லை. இதனையடுத்து நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் வருவாய்துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்கள் கோரிக்கையை எங்களிடம் கூறுங்கள். இது குறித்து முறையாக அரசுக்கு தெரிவிக்கிறோம் என்றனர். பின்னர் பொதுமக்களின் கருத்துக் கேட்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதனையொட்டி 10-04-2007 அன்று மாலை 3 மணியளவில் சேதராப்பட்டு கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.
அப்போது சேதராப்பட்டு பகுதியில் உள்ள வீடுகளில் மக்கள் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்க உள்ளனர்.
Monday, April 09, 2007
செண்டூர் வெடிவிபத்து குறித்து நீதி விசாரணை : பழ.நெடுமாறன்
திண்டிவனம் வெடிவிபத்து தொடர்பாக முழுமையான நீதி விசராணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் திண்டிவனம் வெடி விபத்தில் காயமடைந்தவர்களை 08-04-2007 ஞாயிற்றுக்கிழமை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.எவ்வாறு சம்பவம் நடைபெற்றது என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தார். ஜிப்மர் மருத்துவர்களிடம் சிகிச்சை அளிக்கப்படுவது குறித்துக் கேட்டறிந்தார். மேலும் உரிய சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திண்டிவனம் அருகே செண்டூரில் நடந்த வெடி விபத்து மிகவும் துயரமானது. இதில் 16-பேருக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பல வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.
உயிரிழந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். வெடிபொருள்களை கொண்டு செல்பவர்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கையாளாமல் கொண்டு சென்றுள்ளனர். இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முழுமையான நீதிவிசாரணை நடத்தி உண்மைச் சம்பவங்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றார்.
அவருடன் புதுச்சேரி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, விழுப்புரம் மாவட்டத் தலைவர் கா.பாலமுருகன், செந்தமிழர் இயக்கத் தலைவர் ந.மு.தமிழ்மணி, தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி இரா.சுகுமாரன் உட்பட பலர் இருந்தனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் திண்டிவனம் வெடி விபத்தில் காயமடைந்தவர்களை 08-04-2007 ஞாயிற்றுக்கிழமை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.எவ்வாறு சம்பவம் நடைபெற்றது என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தார். ஜிப்மர் மருத்துவர்களிடம் சிகிச்சை அளிக்கப்படுவது குறித்துக் கேட்டறிந்தார். மேலும் உரிய சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திண்டிவனம் அருகே செண்டூரில் நடந்த வெடி விபத்து மிகவும் துயரமானது. இதில் 16-பேருக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பல வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.
உயிரிழந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். வெடிபொருள்களை கொண்டு செல்பவர்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கையாளாமல் கொண்டு சென்றுள்ளனர். இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முழுமையான நீதிவிசாரணை நடத்தி உண்மைச் சம்பவங்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றார்.
அவருடன் புதுச்சேரி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, விழுப்புரம் மாவட்டத் தலைவர் கா.பாலமுருகன், செந்தமிழர் இயக்கத் தலைவர் ந.மு.தமிழ்மணி, தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி இரா.சுகுமாரன் உட்பட பலர் இருந்தனர்.
துறைமுகத் திட்டம் : சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்கை
புதுச்சேரி, தேங்காய்த்திட்டு வீடு, மனை, நிலம் ஆர்ஜீத எதிர்ப்புக் குழு சார்பில் கட்சிகள், இயக்கங்கள் ஆலோசனைக் கூட்டம் 6-4-2007 அன்று மாலை 6 மணியளவில் தேங்காய்த்திட்டு ஜெயராம் நாயக்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைப்பாளர் எஸ்.காளியப்பன், கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் விஸ்வேஸ்வரன், பாரதிய ஜனதா கட்சி, மா.இளங்கோ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அபிசேகம், சலீம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சு.பாவாணன், விடுதலைச் சிறுத்தைகள், குமாரவேல், தேமுதிக., கணேசன், மதசார்பற்ற ஜனதாதளம், சடகோபன், மறுமலர்ச்சி தி.மு.க., சி.எச். பாலமோகனன், அமைப்பாளர், மக்கள் பாதுகாப்புக் குழு, கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, லோகு.அய்யப்பன், பெரியார் திராவிடர் கழகம்,ஆனந்தராஜ், அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம், இரா. அழகிரி, தமிழர் தேசிய இயக்கம், பா.சக்திவேல், கவுன்சிலர், வீராம்பட்டினம், விஸ்வநாதன், மீனவர் விடுதலை வேங்கைகள்,இருதயராசு, பகுஜன் சமாஜ் கட்சி, ஜெகநாதன், கிராம பஞ்சாயத்து ஒருங்கிணைப்பு ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :
1. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசியபோது, `துறைமுகம் வேண்டுமா? வேண்டாமா? என்பது பற்றி வல்லுநர் குழு அமைத்து, மக்கள் பாதிக்கப்படுவதாக இருந்தால் நல்ல முடிவு எடுக்கப்படும்' எனக் கூறியுள்ளார். இதனை இக்கூட்டம் நிராகரிக்கிறது.
கடந்த 23-03-2007 அன்று வணிக வரித்துறை வளாகத்தில் முதல்வர் அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் வல்லுநர் குழு அமைத்து முடிவு எடுக்கப்படும் என முதல்வர் கூறியபோதே அதை போராட்டக் குழுவினர் ஒப்புக்கொள்ளவில்லை. மீண்டும் அதையே சட்டமன்றத்தில் கூறியுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.
ஏற்கனவே, துறைமுக விரிவாக்கம் குறித்து டில்லியுள்ள தேசிய துறைமுக மேலாண்மைக் கழகம் (சூயவiடியேட ஐளேவவைரவந டிக ஞடிசவ ஆயயேபநஅநவே (சூஐஞஆ)) அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில் புதுச்சேரிக்கு இந்த துறைமுக விரிவாக்கம் தேவையற்றது, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது.
துறைமுக விரிவாக்கத் திட்டத்தை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் அரசுக்கு தாக்கல் செய்துள்ள சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தினால் கடுமையான பாதிப்புகள் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளது.
உண்மைநிலை இப்படியிருக்க, மீண்டும் வல்லுநர் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்வது போராட்டத்தை திசை திருப்பி மழுங்கடிக்கும் செயல் என்பதை இக்கூட்டம் அரசுக்கு சுட்டிக்காட்டுகிறது.
எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டுமென இக்கூட்டம் வற்புறுத்துகிறது. நடைபெறும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இதற்கான அறிவிப்பை முதல்வர் அவர்கள் வெளியிட வேண்டுமென்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
2. துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளிக்காதபோதே கடந்த பிப்ரவரி 2-ந் தேதியன்று துறைமுகத்தையும், அதையொட்டிய 153 ஏக்கர் நிலத்தையும் புதுச்சேரி அரசு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. தற்போது வல்லுநர் குழு கருத்தறியும் வரை துறைமுக விரிவாக்கப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். துறைமுகத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல. எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ள துறைமுகத்தையும் 153 ஏக்கர் நிலத்தையும் திரும்பப்பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
3. துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கொண்டுவரும் தனியார் நிறுவனம் துறைமுக துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வல்சராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடரில் இதுகுறித்து உறுப்பினர்களும் புகார் கூறியுள்ளனர். புதுச்சேரி அரசு இது குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென இக்கூட்டம் வற்புறுத்துகிறது.
கூட்டத்தில் விஸ்வேஸ்வரன், பாரதிய ஜனதா கட்சி, மா.இளங்கோ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அபிசேகம், சலீம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சு.பாவாணன், விடுதலைச் சிறுத்தைகள், குமாரவேல், தேமுதிக., கணேசன், மதசார்பற்ற ஜனதாதளம், சடகோபன், மறுமலர்ச்சி தி.மு.க., சி.எச். பாலமோகனன், அமைப்பாளர், மக்கள் பாதுகாப்புக் குழு, கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, லோகு.அய்யப்பன், பெரியார் திராவிடர் கழகம்,ஆனந்தராஜ், அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம், இரா. அழகிரி, தமிழர் தேசிய இயக்கம், பா.சக்திவேல், கவுன்சிலர், வீராம்பட்டினம், விஸ்வநாதன், மீனவர் விடுதலை வேங்கைகள்,இருதயராசு, பகுஜன் சமாஜ் கட்சி, ஜெகநாதன், கிராம பஞ்சாயத்து ஒருங்கிணைப்பு ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :
1. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசியபோது, `துறைமுகம் வேண்டுமா? வேண்டாமா? என்பது பற்றி வல்லுநர் குழு அமைத்து, மக்கள் பாதிக்கப்படுவதாக இருந்தால் நல்ல முடிவு எடுக்கப்படும்' எனக் கூறியுள்ளார். இதனை இக்கூட்டம் நிராகரிக்கிறது.
கடந்த 23-03-2007 அன்று வணிக வரித்துறை வளாகத்தில் முதல்வர் அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் வல்லுநர் குழு அமைத்து முடிவு எடுக்கப்படும் என முதல்வர் கூறியபோதே அதை போராட்டக் குழுவினர் ஒப்புக்கொள்ளவில்லை. மீண்டும் அதையே சட்டமன்றத்தில் கூறியுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.
ஏற்கனவே, துறைமுக விரிவாக்கம் குறித்து டில்லியுள்ள தேசிய துறைமுக மேலாண்மைக் கழகம் (சூயவiடியேட ஐளேவவைரவந டிக ஞடிசவ ஆயயேபநஅநவே (சூஐஞஆ)) அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில் புதுச்சேரிக்கு இந்த துறைமுக விரிவாக்கம் தேவையற்றது, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது.
துறைமுக விரிவாக்கத் திட்டத்தை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் அரசுக்கு தாக்கல் செய்துள்ள சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தினால் கடுமையான பாதிப்புகள் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளது.
உண்மைநிலை இப்படியிருக்க, மீண்டும் வல்லுநர் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்வது போராட்டத்தை திசை திருப்பி மழுங்கடிக்கும் செயல் என்பதை இக்கூட்டம் அரசுக்கு சுட்டிக்காட்டுகிறது.
எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டுமென இக்கூட்டம் வற்புறுத்துகிறது. நடைபெறும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இதற்கான அறிவிப்பை முதல்வர் அவர்கள் வெளியிட வேண்டுமென்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
2. துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளிக்காதபோதே கடந்த பிப்ரவரி 2-ந் தேதியன்று துறைமுகத்தையும், அதையொட்டிய 153 ஏக்கர் நிலத்தையும் புதுச்சேரி அரசு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. தற்போது வல்லுநர் குழு கருத்தறியும் வரை துறைமுக விரிவாக்கப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். துறைமுகத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல. எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ள துறைமுகத்தையும் 153 ஏக்கர் நிலத்தையும் திரும்பப்பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
3. துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கொண்டுவரும் தனியார் நிறுவனம் துறைமுக துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வல்சராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடரில் இதுகுறித்து உறுப்பினர்களும் புகார் கூறியுள்ளனர். புதுச்சேரி அரசு இது குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென இக்கூட்டம் வற்புறுத்துகிறது.
பிற்பட்டோர் இடஒதுக்கீடு : உச்சநீதிமன்றத்திற்கு கண்டனம்
உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது கோடான கோடி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். `சமூக நீதிக்கான கட்சிகள், இயக்கங்கள்' சார்பில் இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த அநீதியை எதிர்த்து தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் கூடிய அரசியல் கட்சியினர் தமிழகத்தில் நாளை பந்த் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இதனை வரவேற்கிறோம். தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி புதுச்சேரியிலும் நாளைக்கு பந்த் போராட்டம் நடத்த வேண்டும்.
மண்டல்குழு பரிந்துரை குறித்து இந்திரா சகானி வழக்கில் ஒன்பது நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக தற்போது உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது அரசியல் சட்டத்தையே கேள்விக்குள்ளாக்கும் செயல் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சாதி ரீதியான சமூகத்தில் இடஒதுக்கீடு அவசியம் என தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்ற மகத்தான தலைவர்கள் கூறியுள்ளனர். சாதிய ஏற்றத்தாழ்வுகள் மறைய இடஒதுக்கீடு வழிவகுக்கும். இதுபோன்ற சமூக காரணிகள் பல இருந்தும் வெறும் சட்டரீதியாக சமூகப் பிரச்சினையை உச்சநீதிமன்றம் அணுகுவது தவறானது.
உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்யவேண்டும். இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள் கூறியுள்ளதுபோல் மத்திய அரசு இடஒதுக்கீடு குறித்து அகில இந்திய அளவில் வாக்கெடுப்பு ஒன்றை உடனடியாக நடத்த வேண்டும்.
உச்சநீதிமன்றம் விதித்த தடையால் வரும் கல்வியாண்டில் ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் பறிபோகும் ஆபத்துள்ளது. இதனை எதிர்த்துப் போராடி சமூக நீதியை நிலைநாட்ட அனைத்துக் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்.
புதுச்சேரி அரசு உடனடியாக அனைத்துக் கட்சி, இயக்கங்கள் கூட்டத்தைக் கூட்டி உச்சநீதிமன்றம் விதித்த தடையை எதிர்க்க வேண்டும். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் ஒரு சிலர்தவிர அனைவருமே உயர்சாதி வகுப்பைச் சேர்ந்தவர்கள். உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போதியளவில் நீதிபதிகளாக இல்லாதததுதான் இதுபோன்ற தீர்ப்புகள் வருவதற்குக் காரணம்.
எனவே, நீதித்துறையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
உச்சநீதிமன்றம் தடை விதித்து வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து 30-03-2007 அன்று மாலை 4-00 மணியளவில், பிள்ளைத்தோட்டம், பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.இளங்கோ தலைமை தாங்கினார்.
மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் தங்க.கலைமாறன், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புச் செயலாளர் அரசு.வணங்காமுடி, மீனவ மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவரும் வீராம்பட்டினம் கவுன்சிலருமான பா.சக்திவேல், தலைவர் காங்கேயன், முன்னாள் தலைவர் விசுவநாதன், மக்கள் சிவில் உரிமைக் கழகம் முத்துக்கண்ணு, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, செந்தமிழர் இயக்கத் தலைவர் ந.மு.தமிழ்மணி, மண்ணின் மைந்தர் நல உரிமைச் சங்க ஒருங்கிணைப்பாளர் இர.அபிமன்னன், செம்படுகை நன்னீரகம் தலைவர் கு.இராம்மூர்த்தி, தேங்காய்த்திட்டு கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன், சமூக நீதிப் போராட்டக் குழு அ.மஞ்சினி, அ.ஜோதிபிரகாசம், தமிழர் திராவிடர் கழகம் மு.அ.குப்புசாமி
உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த அநீதியை எதிர்த்து தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் கூடிய அரசியல் கட்சியினர் தமிழகத்தில் நாளை பந்த் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இதனை வரவேற்கிறோம். தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி புதுச்சேரியிலும் நாளைக்கு பந்த் போராட்டம் நடத்த வேண்டும்.
மண்டல்குழு பரிந்துரை குறித்து இந்திரா சகானி வழக்கில் ஒன்பது நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக தற்போது உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது அரசியல் சட்டத்தையே கேள்விக்குள்ளாக்கும் செயல் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சாதி ரீதியான சமூகத்தில் இடஒதுக்கீடு அவசியம் என தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்ற மகத்தான தலைவர்கள் கூறியுள்ளனர். சாதிய ஏற்றத்தாழ்வுகள் மறைய இடஒதுக்கீடு வழிவகுக்கும். இதுபோன்ற சமூக காரணிகள் பல இருந்தும் வெறும் சட்டரீதியாக சமூகப் பிரச்சினையை உச்சநீதிமன்றம் அணுகுவது தவறானது.
உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்யவேண்டும். இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள் கூறியுள்ளதுபோல் மத்திய அரசு இடஒதுக்கீடு குறித்து அகில இந்திய அளவில் வாக்கெடுப்பு ஒன்றை உடனடியாக நடத்த வேண்டும்.
உச்சநீதிமன்றம் விதித்த தடையால் வரும் கல்வியாண்டில் ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் பறிபோகும் ஆபத்துள்ளது. இதனை எதிர்த்துப் போராடி சமூக நீதியை நிலைநாட்ட அனைத்துக் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்.
புதுச்சேரி அரசு உடனடியாக அனைத்துக் கட்சி, இயக்கங்கள் கூட்டத்தைக் கூட்டி உச்சநீதிமன்றம் விதித்த தடையை எதிர்க்க வேண்டும். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் ஒரு சிலர்தவிர அனைவருமே உயர்சாதி வகுப்பைச் சேர்ந்தவர்கள். உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போதியளவில் நீதிபதிகளாக இல்லாதததுதான் இதுபோன்ற தீர்ப்புகள் வருவதற்குக் காரணம்.
எனவே, நீதித்துறையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
உச்சநீதிமன்றம் தடை விதித்து வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து 30-03-2007 அன்று மாலை 4-00 மணியளவில், பிள்ளைத்தோட்டம், பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.இளங்கோ தலைமை தாங்கினார்.
மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் தங்க.கலைமாறன், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புச் செயலாளர் அரசு.வணங்காமுடி, மீனவ மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவரும் வீராம்பட்டினம் கவுன்சிலருமான பா.சக்திவேல், தலைவர் காங்கேயன், முன்னாள் தலைவர் விசுவநாதன், மக்கள் சிவில் உரிமைக் கழகம் முத்துக்கண்ணு, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, செந்தமிழர் இயக்கத் தலைவர் ந.மு.தமிழ்மணி, மண்ணின் மைந்தர் நல உரிமைச் சங்க ஒருங்கிணைப்பாளர் இர.அபிமன்னன், செம்படுகை நன்னீரகம் தலைவர் கு.இராம்மூர்த்தி, தேங்காய்த்திட்டு கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன், சமூக நீதிப் போராட்டக் குழு அ.மஞ்சினி, அ.ஜோதிபிரகாசம், தமிழர் திராவிடர் கழகம் மு.அ.குப்புசாமி
உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துக் கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)