Saturday, November 17, 2007

தேங்காய்த்திட்டு சம்பவம்: தவறிழைத்த போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத ஐ.ஜி.யைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகரி, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, புதுச்சேரி யூனியன் பிரதேச உள்ளாட்சி அமைப்புகள் தலைவர் கோ.அ.ஜெகநாதன் ஆகியோர் 16-11-2007 அன்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை :

புதுச்சேரி, தேங்காய்த்திட்டு இளைஞர் கொலை வழக்கை மூடிமறைத்த முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய போலீஸ் ஐ.ஜி.யை வன்மையாக கண்டிக்கிறோம்.

தேங்காய்த்திட்டை சேர்ந்த இளைஞர் பாலா (எ) தெய்வசிகாமணி கொலை செய்யப்பட்டு, கடந்த 30-09-2007 அன்று உப்பனாற்றில் அவரது உடல் கண்டெடுக்கப் பட்டது. உடல் முழுவதும் காயங்களுடன் கிடந்த அவரது உடலை முதலியார்பேட்டை போலீசார் கைப்பற்றி முறையாக விசாரணை மேற்கொள்ளாமல் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், அனாதை பிணம் என அவரது உடலை சந்நியாசித் தோப்புச் சுடுகாட்டில் புதைத்துவிட்டனர்.

இதனிடையே, தேங்காய்த்திட்டைச் சேர்ந்த கொலையாளிகள் மூன்று பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அதன்பின்னர், போலீசார் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ளனர். கொலையாளிகள் நீதிமன்றத்தில் சரணடையாவிட்டால் பாலா கொலை செய்யப்பட்டது வெளியே தெரியாமல் போயிருக்கும்.

இச்சம்பவம் பற்றி தலைமைச் செயலர், ஆட்சியர், போலீஸ் ஐ.ஜி. உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்குப் புகார் அனுப்பப்பட்டது. அதில், இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், கொலையை மூடிமறைத்த முதலியார்பேட்டை காவல்நிலைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி அரசு துணை ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் உள்ளிட்டவர்களிடம் துணை ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

இதனிடையே, கொலை செய்யப்பட்டது பாலா தானா என்பதை அடையாளம் காண அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அவரது மண்டை ஓடு தடய அறிவியல் சோதனைக்காக ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டது.

புதுச்சேரி, தேங்காய்த்திட்டு இளைஞர் கொலை வழக்கை மூடிமறைத்த முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய போலீஸ் ஐ.ஜி.யை வன்மையாக கண்டிக்கிறோம்.

தேங்காய்த்திட்டை சேர்ந்த இளைஞர் பாலா (எ) தெய்வசிகாமணி கொலை செய்யப்பட்டு, கடந்த 30-09-2007 அன்று உப்பனாற்றில் அவரது உடல் கண்டெடுக்கப் பட்டது. உடல் முழுவதும் காயங்களுடன் கிடந்த அவரது உடலை முதலியார்பேட்டை போலீசார் கைப்பற்றி முறையாக விசாரணை மேற்கொள்ளாமல் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், அனாதை பிணம் என அவரது உடலை சந்நியாசித் தோப்புச் சுடுகாட்டில் புதைத்துவிட்டனர்.

இதனிடையே, தேங்காய்த்திட்டைச் சேர்ந்த கொலையாளிகள் மூன்று பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அதன்பின்னர், போலீசார் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ளனர். கொலையாளிகள் நீதிமன்றத்தில் சரணடையாவிட்டால் பாலா கொலை செய்யப்பட்டது வெளியே தெரியாமல் போயிருக்கும்.

இச்சம்பவம் பற்றி தலைமைச் செயலர், ஆட்சியர், போலீஸ் ஐ.ஜி. உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்குப் புகார் அனுப்பப்பட்டது. அதில், இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், கொலையை மூடிமறைத்த முதலியார்பேட்டை காவல்நிலைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி அரசு துணை ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் உள்ளிட்டவர்களிடம் துணை ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

இதனிடையே, கொலை செய்யப்பட்டது பாலா தானா என்பதை அடையாளம் காண அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அவரது மண்டை ஓடு தடய அறிவியல் சோதனைக்காக ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டது.

இதன்பின்னரும், கொலையை மூடிமறைத்த முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் கந்தநாதன் தவறு செய்த முதலியார்பேட்டை போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் தனது அரசியல் செல்வாக்கு மூலம் காப்பாற்றி வருகிறார்.

இதுபோன்று சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் போலீஸ் அதிகாரிகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் ஐ.ஜி. செயலற்று இருப்பது சட்டம்-ஒழுங்கு சீர்குலைவதற்கு வழிவகுக்கிறது.

எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக முதலியார்பேட்டை போலீஸ் அதிகாரிகள் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறிழைத்த போலீஸ் அதிகாரிகளுக்குத் துணைப் போகும் போலீஸ் ஐ.ஜி.க்கு எதிராக எதிர்வரும் 22-11-2007 வியாழனன்று, காலை 10 மணிக்கு, சுதேசி பஞ்சாலை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய இயக்கத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கலந்துக் கொள்கின்றனர்.

No comments: