Sunday, December 02, 2007

புதுச்சேரி "தமிழ்க் கணினி" வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - நிதி தாரீர்!

புதுச்சேரியில் வரும் திசம்பர் 9 அன்று, ஒரு நாள் முழுவதும், "தமிழ்க் கணினி" வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது.

காலை முதல் மாலை வரை கணினி துறையில் நன்கு பட்டறிவு உடைய இளம் அறிஞர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

மாலை நிறைவு விழாவில் புதுச்சேரி முதல்வர் ந.ரங்கசாமி, பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொன்னவைக்கோ ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர்.

கணினியில் தமிழ் மொழி கோலோச்சிட இதுபோன்ற பயிற்சிப் பட்டறை அவசியம் என்பதை அறிவீர்கள்.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் ஒழுங்கமைக்கும் இப்பயிற்சிப் பட்டறைக்கு தாங்கள் தங்களால் முடிந்தளவு நிதி அளித்து உதவ வேண்டுகிறேன்.

செலவு பட்டியல் உட்பட தகவல்களுக்கும், நிதி அளிக்கவும்:

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

No comments: