புதுச்சேரி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்குத் தேங்காய்திட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராடி வருகின்றனர். இதனிடையே தேங்காய்திட்டு உள்ளடக்கிய முதலியார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் துறைமுக விரிவாக்கத் திட்டத்தினால் எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக சந்தேகம் இருந்தால் என்னைச் சந்தித்து விளக்கம் கேட்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், 21-02-2007 அன்று, தேங்காய்திட்டு மக்கள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியனின் அலுவலகத்திற்குச் சென்று முற்றுகையிட்டனர். அப்போது அவர் விளக்கம் கொடுக்க முயன்ற போது காரசாரமான வாக்குவாதம் நடந்துள்ளது. உடன் அங்கு வந்த முதலியார்பேட்டை போலீசார் மக்களைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ. சுகுமாரன் 19-02-2007 அன்று விடுத்த அறிக்கை:
துறைமுக விரிவாக்கத் திட்டத்தினால் தேங்காய்திட்டு மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் கூறியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். அவரது மக்கள் விரோத செயல் குறித்து, திமுக தலைவர் திரு. மு. கருணாநிதி அவர்களுக்குப் புகார் அனுப்ப உள்ளோம்.
துறைமுக விரிவாக்கத் திட்டத்தினால் தேங்காய்திட்டு மட்டுமல்ல ஒட்டுமொத்த புதுச்சேரியே பாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக கப்பல் போக்குவரத்துக்காக 90 லட்சம் கியூபிக் மீட்டர் அளவுக்கு கடல் மண் எடுத்து, கடலை ஆழப்படுத்த உள்ளனர். இதனால், நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதோடு, புயல், வெள்ளம், சுனாமி போன்ற பேரிடரின் போது கடற்கரை மீனவ கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என சுற்றுச் சூழல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், துறைமுக கரையை செயற்கையாக அமைப்பதற்கு 10 மில்லியன் சதுர மீட்டர் அளவு கடல் மண் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே அரியாங்குப்பம் ஆற்றில் துறைமுகம் விரிவுபடுத்தப்பட்டதால் கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய திட்டத்தினால் வடக்கே மகாபலிபுரம் வரை தெற்கே சிதம்பரம் வரை கடற்கரை பாதிக்கப்பட உள்ளது. மீனவர்கள் கடல் பகுதியை விட்டு வெளியேறி சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ வேண்டிய ஆபத்துள்ளது.
துறைமுக விரிவாக்கத் திட்டத்தை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் இத்திட்டத்தை எதிர்ப்பில்லாமல் செயல்படுத்த ஆட்சியாளர்களுக்கும், கட்சியினருக்கும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் பாதிப்பு இல்லை எனக் கூறியுள்ளது பல்வேறு சந்தேங்களுக்கு வழிவகுக்கிறது.
துறைமுக விரிவாக்கத் திட்டத்தை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் அரசுக்குத் தாக்கல் செய்துள்ள சுற்றுச் சூழல் அறிக்கையில் முற்றிலுமாகப் பாதிப்பு இல்லை எனக் கூறவில்லை. துறைமுகம் கட்டும்போதும், கப்பல் போக்குவரத்தின் போதும் இரைச்சலும், அதிர்வுகளும் இருக்கும். 14 மீட்டர் அளவுக்கு கடல் தூர்வாரப்படுவதால் உப்புநீர் புகுந்து நிலத்தடி நீர் பாதிக்கும், கடலில் எண்ணை கசிவும், கட்டுமானப் பணியின் போது கடலில் கனமான உலோக பொருட்களும், நீரகமும், காரியகமும் கலக்கும் என தெரிவித்துள்ளது.
உண்மைநிலை இப்படியிருக்க சட்டமன்ற உறுப்பினர்
எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை ஆதரிப்பது ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த தேங்காய்திட்டு மக்களுக்கு செய்யும் துரோகமாகும். மேலும், போராடும் மக்களை சந்தித்து விளக்கம் அளிக்காமல் சந்தேகமிருந்தால் தன்னை சந்தித்துக் கேட்கலாம் எனக் கூறுவது மக்களை அலட்சியப் படுத்துவதாகும்.
புதுச்சேரியின் அனைத்துதரப்பு மக்களையும் பாதிக்கும் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை அனைவரும் எதிர்க்க வேண்டும். இதனை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களுக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு துணை நிற்கும்.
Thursday, February 22, 2007
சட்டமன்ற உறுப்பினர் முற்றுகை: மக்கள் ஆவேசம்
Tuesday, February 20, 2007
புதுவை அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் : ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியிலுள்ள தேங்காய்திட்டு துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தினால், சுற்றுச் சூழலுக்கு மிகப் பெரும் கேடு ஏற்படவுள்ளது. தேங்காய்திட்டு மக்களும், கடலோர மீனவ மக்களும் ஊரைவிட்டே அப்புறப்படுத்தப்பட உள்ளனர். கடல் நீர் உப்பு நீராகும், சுனாமி, புயல், வெள்ளம் போன்ற பேரிடர் நேரும் போது புதுச்சேரி மற்றும் தமிழக மீனவ கிராமங்கள் முற்றிலுமாக அழிந்துவிடும் ஆபத்துள்ளது. எனவே, துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
துணை நகரம் அமைக்க 700 ஏக்கர் விளைநிலத்தினைக் கையகப்படுத்தி, அரசே ரியல் எஸ்டேட் தொழில் செய்வதையும், பசுமையான விளைநிலங்கள் அழிக்கப்படுவதையும் நிறுத்த வேண்டும்.
சுண்ணாம்பாற்றுக் கரையிலுள்ள அலுத்தவேலியில் 5 நட்சத்திர விடுதி கட்டவும், பொழுதுபோக்குப் பூங்கா அமைக்கவும் 100 ஏக்கர் பசுமையான நிலம் அழிக்கப்பட்டு, அப்பகுதி பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். தென்னந் தோப்புகளாக உள்ள விளைநிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். சுற்றுலா என்ற பெயரில் விடுதிகள் கட்டுவதற்கு 40% மானியம் வழங்குவதை நிறுத்த வேண்டும்.
வீராம்பட்டினத்தில் கடலோரக் காவல் படையின் தலைமையகம் அமைக்கப்படவுள்ளது. இதற்குக் கடற்கரைப் பகுதியில் 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. வீராம்பட்டினம் மீனவ மக்களின் வாழ்விடத்தைப் பறிக்கும் கடலோரக் காவல் படையின் தலைமையகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
வளர்ச்சி என்ற பெயரில் இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமைக்கு எதிராக புதுச்சேரி அரசு செயல்படுவதைக் கண்டித்தும், மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் 19-02-2007 அன்று, பிள்ளைத்தோட்டம் பெரியார் சிலை அருகில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார். அமைப்பாளர் இர.தந்தைபிரியன், செயலாளர் சு.விசயசங்கர், பொருளாளர் வீரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் இரா.வீராசாமி வரவேற்றார்.
மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், வீராம்பட்டினம் கவுன்சிலர் பா.சக்திவேல், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, செந்தமிழர் இயக்கத் தலைவர் ந.மு.தமிழ்மணி, மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் இர.அபிமன்னன், செம்படுகை நன்னீரகம் அமைப்புத் தலைவர் கு.இராம்மூர்த்தி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், இராசுட்ரிய ஜனதா தளத் தலைவர் தி.சஞ்சீவி, தனித் தமிழ்க் கழகத் தலைவர் சீனு. அரிமாப்பாண்டியன், தமிழினத் தொண்டியக்கத் தலைவர் குணத்தொகையன், சமூக நீதிப் போராட்டக் குழு, பாகூர் பொறுப்பாளர் அ.மஞ்சினி, பூவுலகின் நண்பர்கள் சீனு.தமிழ்மணி, புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை தலைவர் பொ.தாமோதரன், விடுதலை வீரர் சீனுவாசனார் இயக்கப் பொறுப்பாளர் புதுவை தமிழ்நெஞ்சன் ஆகியோர் கலந்துக் கொண்டு கண்டனவுரை ஆற்றினர்.
தேங்காய்திட்டு நில ஆர்ஜித எதிர்ப்புக் குழுத் தலைவர் காளியப்பன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் கலந்துக் கொண்டு, தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர்.
சுற்றுச் சூழலைக் காக்கவும், வாழ்விடங்கள் பறிபோவதைத் தடுக்கவும் அனைவரும் முழக்கமிட்டு உறுதியை வெளிப்படுத்தினர்.
Sunday, February 18, 2007
திரு.சாகரன் அவர்களுக்கு இரங்கல்!

- கோ.சுகுமாரன்.
Monday, February 05, 2007
+2 மாணவர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ. சுகுமாரன் 02-02-2007 அன்று வெளியிட்ட அறிக்கை:
புதுவையிலுள்ள அரசுப் பள்ளி விரிவுரையாளர்களின் தொடர் போராட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களைக் காப்பாற்ற, புதுவை அரசு உடனடியாக மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளி விரிவுரையாளர்கள் பதவி உயர்வுக் கேட்டு கடந்த பல நாட்களாக போராடி வருகின்றனர். பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 5-ந் தேதி முதல் செய்முறை தேர்வும், மார்ச் 1 முதல் எழுத்துத் தேர்வும் நடைபெறும் என தமிழ்நாடு தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்த வேண்டிய விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பள்ளிகள் அனைத்தும் மாணவர்களைத் தயார்படுத்தி மாணவர்கள் தேர்வு எழுத ஆயத்தமாக உள்ளனர். அரசுப் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்கள்தான் பயில்கின்றனர். இப்போராட்டத்தினால் மாணவர்களின் எதிர்காலமே கேள்விக் குறியாகியுள்ளது.
புதுவை அரசின் “மேனா மிணுக்கி“கல்வி அமைச்சர், கல்வித் துறை அதிகாரிகள் ஆகியோர் மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்துக் கவலைப்படாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.
அரசுப் பள்ளி விரிவுரையாளர்களின் இப்போராட்டம் பொது மக்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது. புதுவை அரசு உடனடியாக, போராட்டம் நடத்தும் விரிவுரையாளர்களை அழைத்துப் பேசி தீர்வு காணவேண்டும் அல்லது மாணவர்களின் நலன் காக்க மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
புதுவையிலுள்ள அரசுப் பள்ளி விரிவுரையாளர்களின் தொடர் போராட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களைக் காப்பாற்ற, புதுவை அரசு உடனடியாக மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளி விரிவுரையாளர்கள் பதவி உயர்வுக் கேட்டு கடந்த பல நாட்களாக போராடி வருகின்றனர். பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 5-ந் தேதி முதல் செய்முறை தேர்வும், மார்ச் 1 முதல் எழுத்துத் தேர்வும் நடைபெறும் என தமிழ்நாடு தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்த வேண்டிய விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பள்ளிகள் அனைத்தும் மாணவர்களைத் தயார்படுத்தி மாணவர்கள் தேர்வு எழுத ஆயத்தமாக உள்ளனர். அரசுப் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்கள்தான் பயில்கின்றனர். இப்போராட்டத்தினால் மாணவர்களின் எதிர்காலமே கேள்விக் குறியாகியுள்ளது.
புதுவை அரசின் “மேனா மிணுக்கி“கல்வி அமைச்சர், கல்வித் துறை அதிகாரிகள் ஆகியோர் மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்துக் கவலைப்படாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.
அரசுப் பள்ளி விரிவுரையாளர்களின் இப்போராட்டம் பொது மக்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது. புதுவை அரசு உடனடியாக, போராட்டம் நடத்தும் விரிவுரையாளர்களை அழைத்துப் பேசி தீர்வு காணவேண்டும் அல்லது மாணவர்களின் நலன் காக்க மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
Sunday, February 04, 2007
போலி சாமியார் பிரேமானந்தா கட்டுப்பாட்டில் கடலூர் சிறை
கடலூர் நடுவண் சிறைச்சாலை, போலி சாமியார் பிரேமானந்தா கட்டுப்பாட்டில் உள்ளது குறித்து தமிழக முதல்வர், உள்துறைச் செயலர், காவல்துறைத் தலைவர் (டி.ஜி.பி.), சிறைத் துறை இயக்குநர் (ஐ.ஜி.), கடலூர் மாவட்ட ஆட்சியர், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் உள்ளிட்டவர்களுக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ. சுகுமாரன், 23-01-2007 அன்று அனுப்பியுள்ள மனு:
கடலூர் மத்திய சிறையில் சட்டத்திற்குப் புறம்பான பல்வேறு செயல்கள் நடைபெற்று வருவது குறித்து அங்கு அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைச் சிறைவாசிகள் வெங்கடேசன், சுதர்சனம் ஆகியோர் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டபோது, பத்திரிகையாளர்கள் மத்தியில் புகார் கூறியுள்ளனர்.
கடலூர் நடுவண் சிறை ஆயுள் தண்டனை சிறைவாசியான பிரேமானந்தா சாமியாரின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர் குளிக்க, தூங்க, பார்வையாளர்களைச் சந்தித்துப் பேச, பூஜை செய்ய என தனித்தனியே நான்கு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறைவாசிகளுக்கு விதிக்கப்பட்ட எந்தவித கட்டுப்பாடுகளையும் அவர் மதிக்காமல் சுதந்திரமாக இருந்து வருவதற்கு சிறை நிர்வாகம் அனுமதிக்கிறது.
சிறைச்சாலையில் ஏராளமான செல்போன்கள் புழக்கத்தில் உள்ளன. இதனால், சிறைவாசிகள் வெளியில் உள்ளவர்களோடு தொடர்புகொண்டு பல்வேறு குற்றங்களை நிகழ்த்துவதாக தெரிகிறது.
சிறைச்சாலையில் உள்ள அறைகளில் 4.50 அடி நீளம் கொண்ட அரிவாள்கள், பட்டாக் கத்திகள், கடப்பாறைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. சிறைவாசிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டால் ஏராளமான உயிர் இழப்புகள் ஏற்படும் ஆபத்துள்ளது. சிறைச்சாலை காவலர்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்றி வருகின்றனர். சிறைச்சாலைக்குள் முறையான சோதனைகள் நடத்தப்படுவதில்லை.
சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களில் பெரும்பகுதியை வெளியே விற்றுவிடுகின்றனர். இதனால், போதிய உணவு கிடைக்காமல் சிறைவாசிகள் பட்டினி கிடக்கும் சூழ்நிலையில் உள்ளனர்.
குற்றம்புரிந்தவர்கள் திருந்த வேண்டுமென்பதற்காகத்தான் சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். ஆனால், கடலூர் சிறையில் அடைக்கப்படும் சிறைவாசிகள் மேலும் கொடூரமானவர்களாக மாறுகின்ற நிலை உள்ளது.
ஆயுள்தண்டனை சிறைவாசிகள் இவ்வாறு கூறியுள்ள புகாரைப் பார்த்தால், கடலூர் நடுவண் சிறையில் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் மலிந்துள்ளதாக தெரியவருகிறது. மேலும், வெளி உலகுக்குத் தெரியாமல் பல்வேறு சட்டவிரோதச் செயல்கள் அங்கு நடைபெற்று வருகின்றன.
சிறை நிர்வாகம் பல்வேறு ஊழல், முறைகேடுகளில் ஈடுபடுவதால் இதுபோன்ற சட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்களைத் தடுக்க முடியவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எனவே, கடலூர் மத்திய சிறையில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், சட்டத்திற்குப் புறம்பான செயல்களைத் தடுத்திடவும், ஊழல் - முறைகேடுகளைக் களைந்திடவும், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து, விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
கடலூர் மத்திய சிறையில் சட்டத்திற்குப் புறம்பான பல்வேறு செயல்கள் நடைபெற்று வருவது குறித்து அங்கு அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைச் சிறைவாசிகள் வெங்கடேசன், சுதர்சனம் ஆகியோர் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டபோது, பத்திரிகையாளர்கள் மத்தியில் புகார் கூறியுள்ளனர்.
கடலூர் நடுவண் சிறை ஆயுள் தண்டனை சிறைவாசியான பிரேமானந்தா சாமியாரின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர் குளிக்க, தூங்க, பார்வையாளர்களைச் சந்தித்துப் பேச, பூஜை செய்ய என தனித்தனியே நான்கு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறைவாசிகளுக்கு விதிக்கப்பட்ட எந்தவித கட்டுப்பாடுகளையும் அவர் மதிக்காமல் சுதந்திரமாக இருந்து வருவதற்கு சிறை நிர்வாகம் அனுமதிக்கிறது.
சிறைச்சாலையில் ஏராளமான செல்போன்கள் புழக்கத்தில் உள்ளன. இதனால், சிறைவாசிகள் வெளியில் உள்ளவர்களோடு தொடர்புகொண்டு பல்வேறு குற்றங்களை நிகழ்த்துவதாக தெரிகிறது.
சிறைச்சாலையில் உள்ள அறைகளில் 4.50 அடி நீளம் கொண்ட அரிவாள்கள், பட்டாக் கத்திகள், கடப்பாறைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. சிறைவாசிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டால் ஏராளமான உயிர் இழப்புகள் ஏற்படும் ஆபத்துள்ளது. சிறைச்சாலை காவலர்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்றி வருகின்றனர். சிறைச்சாலைக்குள் முறையான சோதனைகள் நடத்தப்படுவதில்லை.
சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களில் பெரும்பகுதியை வெளியே விற்றுவிடுகின்றனர். இதனால், போதிய உணவு கிடைக்காமல் சிறைவாசிகள் பட்டினி கிடக்கும் சூழ்நிலையில் உள்ளனர்.
குற்றம்புரிந்தவர்கள் திருந்த வேண்டுமென்பதற்காகத்தான் சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். ஆனால், கடலூர் சிறையில் அடைக்கப்படும் சிறைவாசிகள் மேலும் கொடூரமானவர்களாக மாறுகின்ற நிலை உள்ளது.
ஆயுள்தண்டனை சிறைவாசிகள் இவ்வாறு கூறியுள்ள புகாரைப் பார்த்தால், கடலூர் நடுவண் சிறையில் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் மலிந்துள்ளதாக தெரியவருகிறது. மேலும், வெளி உலகுக்குத் தெரியாமல் பல்வேறு சட்டவிரோதச் செயல்கள் அங்கு நடைபெற்று வருகின்றன.
சிறை நிர்வாகம் பல்வேறு ஊழல், முறைகேடுகளில் ஈடுபடுவதால் இதுபோன்ற சட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்களைத் தடுக்க முடியவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எனவே, கடலூர் மத்திய சிறையில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், சட்டத்திற்குப் புறம்பான செயல்களைத் தடுத்திடவும், ஊழல் - முறைகேடுகளைக் களைந்திடவும், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து, விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
Saturday, February 03, 2007
புதுவையில் நில அபகரிப்பு : வழக்குப் பதி்வு
புதுவையில் நடந்த நில அபகரிப்பு குறித்து லாசுப்பேட்டை போலீ்சார் வழக்குப் பதிவு செய்தனர். நில அபகரிப்பில் ஈடுபட்ட செல்வராஜுலு செட்டி அறக்கட்டளையின் தலைவர் எச்.பி.என். ஷெட்டி, சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் எம்.எஸ். மருதுபாண்டியன், அரசம்மாள், அய்யப்பன் உள்ளிட்டோர் குற்றவாளிகளாக வழக்கில் குறிப்பிட்டுள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் 471 (போலியான ஆவணத்தை உண்மையெனக் கூறி ஏமாற்றுதல்), 511 (அதற்குண்டான தண்டனை) மற்றும் 34 (கூட்டுச் சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
வழக்குப் பதியப்பட்டதைத் தொடர்ந்து, 23-01-2007 அன்று, பாண்டிச்சேரி வழக்கறி்ஞர்கள் சங்கப் போதுக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், வழக்கறிஞர் மருதுபாண்டியன் மீது போடப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெற வேண்டும், சிவில் வழக்குகளில் போலீசு தலையிடக் கூடாது, வழக்குப் போட்ட போலீசு அதிகாரிகள் சங்கத்திற்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும், வழக்கறிஞர் மீது புகார் அளித்தவர் மேல் வழக்குப் போட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் போடப்பட்டன.
இக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பு செய்வது எனவும் முடிவு செய்தனர்.
வழக்குப் பதியப்பட்டதைத் தொடர்ந்து, 23-01-2007 அன்று, பாண்டிச்சேரி வழக்கறி்ஞர்கள் சங்கப் போதுக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், வழக்கறிஞர் மருதுபாண்டியன் மீது போடப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெற வேண்டும், சிவில் வழக்குகளில் போலீசு தலையிடக் கூடாது, வழக்குப் போட்ட போலீசு அதிகாரிகள் சங்கத்திற்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும், வழக்கறிஞர் மீது புகார் அளித்தவர் மேல் வழக்குப் போட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் போடப்பட்டன.
இக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பு செய்வது எனவும் முடிவு செய்தனர்.
Friday, February 02, 2007
புதுவையில் மீண்டும் நில அபகரிப்பு

புதுவை கிருஷ்ணா நகரில் உள்ள நிலத்தினை அபகரிக்க முயற்சித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரது நிலத்தினைப் போலிப் பத்திரம் தயாரித்து அபகரிக்க சிலர் முயற்சித்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 24-11-2006 அன்று ஆளுநர், முதல்வர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினருக்கும் புகார் அளித்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கடந்த காலங்களில் வீடு, நிலம் அபகரிக்கப்பட்டபோது புதுச்சேரி அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தடுத்தது போல், குற்றமிழைத்தவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
வீடு, நிலம் அபகரிப்பதைத் தடுக்கும் வகையில் பத்திரப் பதிவில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த பின்பும் வீடு, நிலம் அபகரிக்கப்பவர்களுக்கு உடந்தையாக போலி பத்திரங்களைப் பதிவு செய்யும் பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது நடந்துள்ள ஆக்கிரமிப்பு முயற்சிக்கு அதிகாரத்தில் உள்ள ஒருவர் துணைபுரிவதாக அறிகிறோம். இது கண்டனத்திற்குரியது. மீண்டும் தலைதூக்கும் வீடு, நிலம் அபகரிப்பைத் தடுக்க புதுச்சேரி அரசு குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
இது குறித்து ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலர், ஐ.ஜி. உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்ப உள்ளோம்.
விஜயா வழக்கு : போலீசார் பணி நீக்கம்

மக்கள் உரிமைக கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 03-01-2007 அன்று வெளியிட்ட அறிக்கை:
அத்தியூர் விஜயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்ற புதுச்சேரி போலீசாரின் ஜாமீனை ரத்து செய்ய தமிழக - புதுச்சேரி அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
செஞ்சி அருகேயுள்ள பழங்குடிப் பெண் அத்தியூர் விஜயாவை ஒரு திருட்டு வழக்கு விசாரணைக்காக சென்ற புதுச்சேரி போலீசார் 6 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் விழுப்புரம் அமர்வு நீதிமன்றம் கடந்த 11-8-2006 அன்று ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 6-11-2006 அன்று ஜாமீன் வழங்கியுள்ளது. குற்றமிழைத்த போலீசார் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளனர்.
தீர்ப்பு வழங்கப்பட்டு 3 மாதத்திற்குள் ஜாமீன் வழங்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது பாதிக்கப்பட்ட விஜயாவிற்கு கிடைத்துள்ள நீதியைக் கேள்விக்குள்ளாக்கும் என அச்சப்படுகிறோம்.
சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக - புதுச்சேரி அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தி கடந்த டிசம்பர் 30-ந் தேதியன்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு.பொ. இரத்தினம் அவர்கள் தலைமையில் சென்னையில் போராட்டம் நடத்தியுள்ளோம் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
தண்டனைப் பெற்ற போலீசார் இதுவரையில் பணிநீக்கம் செய்யப்படாதது கண்டனத்திற்குரியது. தண்டனைப் பெற்ற போலீசார் அனைவரையும் உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசை வற்புறுத்துகிறோம்.
பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர் பெண் அத்தியூர் விஜயாவிற்கு நீதிகிடைக்க அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள் போராட முன்வர வேண்டுகிறோம்.
தண்டனைப் பெற்ற போலீசார் பணி நீக்கம்: அரசு நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து 04-01-2007 அன்று பாலியல் வன்கொடுமை செய்த போலீசார் 1. நல்லாம் கிருஷ்ணராயபாபு (ஆய்வாளர்), ராஜாராமன் (உதவி துணை ஆய்வாளர்), சசிகுமார் நாயர் (தலைமைக் காவலர்), பத்மநாபன், முனுசாமி, சுப்புராயன் (காவலர்கள்) ஆகியோரை பணிநீக்கம் செய்து புதுவை அரசு உத்தரவிட்டது.
Wednesday, January 03, 2007
புதுச்சேரி கே.சி.பி. ஆலையில் விபத்து
புதுச்சேரி அருகே திருவாண்டார்கோயிலில் உள்ள கே.சி.பி. காகிதத் தொழிற்சாலையில் உள்ள சுத்திகரிப்புத் தொட்டியில் விஷவாயு தாக்கி அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் சிவானந்தம், அபுதாகிர், ஜான்கென்னடி, ஸ்டாலின் சங்கர், அம்ருதின் ஆகியோர் இறந்தனர். மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இது குறித்து, மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 31.12.2006 அன்று வெளியிட்ட அறிக்கை:
கே.சி.பி. காகிதத் தொழிற்சாலையில் ஐந்து தொழிலாளர்கள் இறந்தது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென புதுவை அரசை வற்புறுத்துகிறோம்.
தொழிலாளர்கள் இறந்ததற்கு காரணமான தொழிற்சாலை நிர்வாகத்தினர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும். வழக்கு விசாரணை முடியும் வரை தற்காலிகமாக தொழிற்சாலையை மூட அரசு உத்திரவிட வேண்டும்.
தொழிலாளர்களுக்குப் போதிய பாதுகாப்புக் கருவிகள்கூட வழங்காமல் இதுபோன்ற ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டதுதான் உயிரிழப்புக்குக் காரணம். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா 20 இலட்சம் ரூபாய் இழப்பிடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிற்சாலைக்குச் சென்று முறையாக ஆய்வு செய்ய தவறிய தொழிலாளர் துறை, சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவையில் 402 ஆபத்தான தொழிற்சாலைகள் இருப்பதாக சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது. இதுபோன்ற ஆபத்தான தொழிற்சாலைகளைக் கண்காணிக்க சுற்றுச்சூழல், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய சுயேட்சையான கண்காணிப்புக் குழு ஒன்றை உருவாக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதிகிடைக்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். மேலும், இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு விரிவான புகார் அனுப்ப உள்ளோம்.
பலியான தொழிலாளர் குடுபத்திற்கு
புதுவை அரசு நிதியுதவி
பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும், தெற்குப் பகுதி துணை ஆட்சியர் ஏ. வின்சென்ட் ராயர் தலைமையில் நீதிவிசாரணைக்கும் புதுவை அரசு உத்திரவிட்டுள்ளது.
தொழிசாலை நிர்வாகத்தினர் மீது வழக்கு
காவல்துறை நடவடிக்கை
இதனிடையே திருபுவனை காவல்துறையினர் கே.சி.பி. காகித தொழிற்சாலை மேலாளர், துணை மேலாளர், மேற்பார்வையாளர் இருவர் உட்பட 4 பேர் மீது இ.த.ச. 304 ஏ, 337 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை.
இது குறித்து, மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 31.12.2006 அன்று வெளியிட்ட அறிக்கை:
கே.சி.பி. காகிதத் தொழிற்சாலையில் ஐந்து தொழிலாளர்கள் இறந்தது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென புதுவை அரசை வற்புறுத்துகிறோம்.
தொழிலாளர்கள் இறந்ததற்கு காரணமான தொழிற்சாலை நிர்வாகத்தினர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும். வழக்கு விசாரணை முடியும் வரை தற்காலிகமாக தொழிற்சாலையை மூட அரசு உத்திரவிட வேண்டும்.
தொழிலாளர்களுக்குப் போதிய பாதுகாப்புக் கருவிகள்கூட வழங்காமல் இதுபோன்ற ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டதுதான் உயிரிழப்புக்குக் காரணம். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா 20 இலட்சம் ரூபாய் இழப்பிடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிற்சாலைக்குச் சென்று முறையாக ஆய்வு செய்ய தவறிய தொழிலாளர் துறை, சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவையில் 402 ஆபத்தான தொழிற்சாலைகள் இருப்பதாக சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது. இதுபோன்ற ஆபத்தான தொழிற்சாலைகளைக் கண்காணிக்க சுற்றுச்சூழல், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய சுயேட்சையான கண்காணிப்புக் குழு ஒன்றை உருவாக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதிகிடைக்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். மேலும், இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு விரிவான புகார் அனுப்ப உள்ளோம்.
பலியான தொழிலாளர் குடுபத்திற்கு
புதுவை அரசு நிதியுதவி
பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும், தெற்குப் பகுதி துணை ஆட்சியர் ஏ. வின்சென்ட் ராயர் தலைமையில் நீதிவிசாரணைக்கும் புதுவை அரசு உத்திரவிட்டுள்ளது.
தொழிசாலை நிர்வாகத்தினர் மீது வழக்கு
காவல்துறை நடவடிக்கை
இதனிடையே திருபுவனை காவல்துறையினர் கே.சி.பி. காகித தொழிற்சாலை மேலாளர், துணை மேலாளர், மேற்பார்வையாளர் இருவர் உட்பட 4 பேர் மீது இ.த.ச. 304 ஏ, 337 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை.
Sunday, December 17, 2006
பெரியார் சிலை சேதம் : கண்டனம்
மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 08-12-2006 அன்று புதுச்சேரியில் வெளியிட்ட அறிக்கை:
தமிழர்களின் சுயமரியாதையை மீட்டெடுக்கப் பாடுபட்ட தந்தை பெரியாரின் சிலையைத் திட்டமிட்டுச் சேதப்படுத்திய இந்துத்துவ சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்துகிறேன்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்த பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இச்செயலைச் செய்தவர்கள் காட்டுமிராண்டிகளாகவே கருத வேண்டியுள்ளது.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு மூலம் சமூக நீதி கிடைத்திட வழிவகுத்தவர் பெரியார். இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்ட போதெல்லாம் வடஇந்தியாவில் எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால், தமிழகத்தில் ஒருசிறு சலனம்கூட ஏற்படவில்லை. இது பெரியாரின் உழைப்புக்கு கிடைத்த பலன் என இந்தியாவே வியந்தது. தற்போது வடஇந்தியா முழுவதும் பெரியாரின் கருத்துக்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.
மதவெறியைத் தூண்டி அரசியல் லாபம் தேடும் இந்துத்துவ சக்திகள் தமிழகத்தில் காலூன்ற முடியாமல் போனதற்குக் காரணம் பெரியார். இந்துத்துவ சக்திகளின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒரே தலைவர் பெரியார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாத்திகரான பெரியார் ஆத்திகர்களை மதிக்கத் தவறியதில்லை. குன்றக்குடி அடிகளாரோடு அவர் கொண்டிருந்த நட்பே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த வரலாற்று உண்மைகளை அறியாமல் இந்துத்துவ சக்திகள் இக்கொடூர செயலைச் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இந்துத்துவ சத்திகளின் தாக்குதல் பெரியார் கொள்கையின்மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். பெரியாரின் கொள்கையைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வதே இதற்குப் பதிலடியாக அமையும். மானமும் அறிவும் மனிதற்கு அழகு என்று பெரியார் கூறியுள்ளதை இந்துத்துவ சக்திகளுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தமிழர்களின் சுயமரியாதையை மீட்டெடுக்கப் பாடுபட்ட தந்தை பெரியாரின் சிலையைத் திட்டமிட்டுச் சேதப்படுத்திய இந்துத்துவ சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்துகிறேன்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்த பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இச்செயலைச் செய்தவர்கள் காட்டுமிராண்டிகளாகவே கருத வேண்டியுள்ளது.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு மூலம் சமூக நீதி கிடைத்திட வழிவகுத்தவர் பெரியார். இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்ட போதெல்லாம் வடஇந்தியாவில் எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால், தமிழகத்தில் ஒருசிறு சலனம்கூட ஏற்படவில்லை. இது பெரியாரின் உழைப்புக்கு கிடைத்த பலன் என இந்தியாவே வியந்தது. தற்போது வடஇந்தியா முழுவதும் பெரியாரின் கருத்துக்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.
மதவெறியைத் தூண்டி அரசியல் லாபம் தேடும் இந்துத்துவ சக்திகள் தமிழகத்தில் காலூன்ற முடியாமல் போனதற்குக் காரணம் பெரியார். இந்துத்துவ சக்திகளின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒரே தலைவர் பெரியார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாத்திகரான பெரியார் ஆத்திகர்களை மதிக்கத் தவறியதில்லை. குன்றக்குடி அடிகளாரோடு அவர் கொண்டிருந்த நட்பே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த வரலாற்று உண்மைகளை அறியாமல் இந்துத்துவ சக்திகள் இக்கொடூர செயலைச் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இந்துத்துவ சத்திகளின் தாக்குதல் பெரியார் கொள்கையின்மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். பெரியாரின் கொள்கையைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வதே இதற்குப் பதிலடியாக அமையும். மானமும் அறிவும் மனிதற்கு அழகு என்று பெரியார் கூறியுள்ளதை இந்துத்துவ சக்திகளுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
Subscribe to:
Posts (Atom)