மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 03-04-2007 அன்று வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரியில் அமைக்கப்பட இருந்த துணை நகர திட்டத்தைக் கைவிட்டு சட்டப் பேரவையில் அறிவித்துள்ள முதல்வர் ரங்கசாமி அவர்களை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் மனதார பாராட்டுகிறேன்.
விளைநிலங்களை வீட்டுமனைகளாக்கி துணைநகரம் அமைக்கப்பட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்த்துப் போராடியதற்கு வெற்றி கிடைத்துள்ளது.
இதேபோல், மக்கள் நலனுக்கு எதிரான துறைமுக விரிவாக்கத் திட்டம், சிறப்பு பொருளாதார மண்டலம், விமான நிலைய விரிவாக்கம் போன்றவைகளையும் கைவிட முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து தேங்காய்திட்டு மக்களும், பல்வேறு அமைப்புகளும் தீவிரமாகப் போராடி வருகின்றனர். துணைநகர திட்டத்தைக் கைவிட்ட அரசு துறைமுக விரிவாக்கத் திட்டம் பற்றி சட்டப் பேரவையில் எந்த அறிவிப்பும் செய்யாதது போராடும் மக்களிடையே கொந்தளிப்பான சூழ்நிலையை உண்டாக்கியுள்ளது.
02-04-2007 அன்று சட்டப்பேரவையில் துறைமுக விரிவாக்கத் திட்டம் குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல் அமைச்சர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் பதில் அளிப்பதாக இருந்தது. சட்டப்பேரவை அலுவல் பட்டியலில் இருந்தும் திடீரென எவ்வித காரணமுமின்றி துறைமுக விரிவாக்கத் திட்டம் பற்றிய கேள்விகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போடப்பட்டுள்ளன. இது பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களுக்கு வழி வகுத்துள்ளது.
துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கொண்டுவரும் தனியார் நிறுவனம் துறைமுக துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வல்சராஜ் உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டுள்ளதாக பல்வேறு அரசியல் கட்சிகள் புகார் கூறிவருகின்றன. இதுகுறித்து புதுவை அரசு உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்.
இதை வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உள்ளிட்டோருக்கு விரிவான புகார் மனு ஒன்றை அனுப்ப உள்ளோம்.
Sunday, April 08, 2007
துறைமுகத் திட்டம் : சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்
அத்தியூர் விஜயா வழக்கு நிதி தர வேண்டுகோள்!
செஞ்சி வட்டம், அனந்தபுரம் அருகேயுள்ள அத்தியூரைச் சேர்ந்த பழங்குடி இருளர் பெண் விஜயாவை, ஒரு திருட்டு வழக்கில் அவரது பெரியப்பா மகன் வெள்ளையனைத் தேடிச் சென்ற புதுச்சேரி போலீசார் ஆறுபேர் கடந்த 29-7-1993 அன்று கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தனர்.
பல்வேறு போராட்டங்கள், சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து தமிழக அரசு இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது. வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 2-7-1997 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் புதுச்சேரி போலீசார்களான நல்லாம் கிருஷ்ணராய பாபு (உதவி ஆய்வாளர்), வி.ராஜாராம் (தலைமைக் காவலர்), ஜி.பத்மநாபன் (காவலர்), கே.முனுசாமி (காவலர்), ஜி.சுப்புராயன் (காவலர்), கே.சசிகுமார் நாயர் (தலைமைக் காவலர்) ஆகியோர் விஜயாவை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் இவ்வழக்கில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் சேர்க்கப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்ட விஜயாவின் வேண்டுகோளை ஏற்று விழுப்புரம் முன்னாள் - அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம். ரகுமான் ஷெரிப் அவர்கள் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கு விசாரணையின்போது காவல்துறையினர் எவ்வித ஒத்துழைப்பும் அளிக்கவில்லை.
அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.ரகுமான் ஷெரிப், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பொ.இரத்தினம், புதுச்சேரி கோ.சுகுமாரன், பேராசிரியர் பா.கல்யாணி ஆகியோரின் ஒத்துழைப்பாலும், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஆதரவோடும் 42 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் கடந்த 11-8-2006 அன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி திரு. என். ரத்னராஜ் அவர்கள் தீர்ப்பு வழங்கினார். புதுச்சேரி போலீசார் ஆறுபேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூபாய் 31,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர் விஜயாவுக்கு 13 ஆண்டுகள் கழித்து நீதிகிடைத்தது அனைவருக்கும் ஆறுதல் அளித்தது.
இந்நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட புதுச்சேரி போலீசார் ஆறு பேருக்கும் கடந்த 6-11-2006 மற்றும் 8-11-2006 ஆகிய நாளிட்ட உத்தரவின்பேரில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.சி.ஆறுமுகம் ஆகியோர் பிணை வழங்கியுள்ளனர். தண்டனை வழங்கி மூன்று மாதத்திற்குள் பிணை வழங்கப்பட்டது என்பது விஜயாவுக்கு காலங்கடந்து கிடைத்த நீதியைக் கேள்விக் குறியாக்கி உள்ளது.
மேலும், பாலியல் வன்கொடுமை செய்த புதுச்சேரி போலீசார் புதுச்சேரி அரசில் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை அளிக்கப்பட்ட நாள் வரை அதாவது 13 ஆண்டுகள் பணியில் இருந்து வந்தனர். மேலும், பலருக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டது. மனித உரிமை ஆர்வலர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து கடந்த 5-1-2007 அன்றுதான் ஆறு போலீசாரையும் பணி நீக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில், வழக்கு விசாரணையை வேகப்படுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்புப் பெற குற்றவாளிப் போலீசார் முயற்சி செய் வருவதாக அறிகிறோம். வரும் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி அவர்களின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.
இச்சூழலில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள பிணையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பெண் வழக்கறிஞர்கள் சார்பில் ஒரு பொதுநல வழக்கு தொடர வேண்டியதற்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள் மேற்கொண்டு வருகிறார். தில்லியில் உள்ள மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணி இவ்வழக்கில் ஆஜராகி வழக்கை நடத்த உள்ளார். இதற்கான நடைமுறை செலவுத் தொகை குறைந்தபட்சம் ரூ.10,000/- தேவைப்படுகிறது. மேலும், 13 ஆண்டு காலமாக விஜயா வழக்கைப் பார்த்ததினால் பேராசிரியர் கல்யாணி அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பணம் செலவாகியுள்ளதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.
அத்தியூர் விஜயாவிற்கு கிடைத்துள்ள நீதியை நிலைநாட்டவும், தொடர் சட்ட நடவடிக்கைகளுக்கும் தங்களிடம் பொருளுதவி எதிர்நோக்குகிறோம். அருள் கூர்ந்து தாங்கள் தங்களால் முடிந்தளவு நிதி அனுப்பி வைத்து விஜயாவுக்கு நீதி கிடைத்திட உதவ வேண்டுகிறோம்.
பேராசிரியர் பா.கல்யாணி
கோ.சுகுமாரன்
முகவரி: 15, முதல் மாடி, 9-ஆவது குறுக்கு வடக்கு விரிவு, ரெயின்போ நகர், புதுச்சேரி - 605 011. பேச: 98940 54640
பல்வேறு போராட்டங்கள், சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து தமிழக அரசு இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது. வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 2-7-1997 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் புதுச்சேரி போலீசார்களான நல்லாம் கிருஷ்ணராய பாபு (உதவி ஆய்வாளர்), வி.ராஜாராம் (தலைமைக் காவலர்), ஜி.பத்மநாபன் (காவலர்), கே.முனுசாமி (காவலர்), ஜி.சுப்புராயன் (காவலர்), கே.சசிகுமார் நாயர் (தலைமைக் காவலர்) ஆகியோர் விஜயாவை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் இவ்வழக்கில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் சேர்க்கப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்ட விஜயாவின் வேண்டுகோளை ஏற்று விழுப்புரம் முன்னாள் - அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம். ரகுமான் ஷெரிப் அவர்கள் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கு விசாரணையின்போது காவல்துறையினர் எவ்வித ஒத்துழைப்பும் அளிக்கவில்லை.
அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.ரகுமான் ஷெரிப், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பொ.இரத்தினம், புதுச்சேரி கோ.சுகுமாரன், பேராசிரியர் பா.கல்யாணி ஆகியோரின் ஒத்துழைப்பாலும், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஆதரவோடும் 42 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் கடந்த 11-8-2006 அன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி திரு. என். ரத்னராஜ் அவர்கள் தீர்ப்பு வழங்கினார். புதுச்சேரி போலீசார் ஆறுபேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூபாய் 31,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர் விஜயாவுக்கு 13 ஆண்டுகள் கழித்து நீதிகிடைத்தது அனைவருக்கும் ஆறுதல் அளித்தது.
இந்நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட புதுச்சேரி போலீசார் ஆறு பேருக்கும் கடந்த 6-11-2006 மற்றும் 8-11-2006 ஆகிய நாளிட்ட உத்தரவின்பேரில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.சி.ஆறுமுகம் ஆகியோர் பிணை வழங்கியுள்ளனர். தண்டனை வழங்கி மூன்று மாதத்திற்குள் பிணை வழங்கப்பட்டது என்பது விஜயாவுக்கு காலங்கடந்து கிடைத்த நீதியைக் கேள்விக் குறியாக்கி உள்ளது.
மேலும், பாலியல் வன்கொடுமை செய்த புதுச்சேரி போலீசார் புதுச்சேரி அரசில் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை அளிக்கப்பட்ட நாள் வரை அதாவது 13 ஆண்டுகள் பணியில் இருந்து வந்தனர். மேலும், பலருக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டது. மனித உரிமை ஆர்வலர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து கடந்த 5-1-2007 அன்றுதான் ஆறு போலீசாரையும் பணி நீக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில், வழக்கு விசாரணையை வேகப்படுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்புப் பெற குற்றவாளிப் போலீசார் முயற்சி செய் வருவதாக அறிகிறோம். வரும் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி அவர்களின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.
இச்சூழலில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள பிணையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பெண் வழக்கறிஞர்கள் சார்பில் ஒரு பொதுநல வழக்கு தொடர வேண்டியதற்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள் மேற்கொண்டு வருகிறார். தில்லியில் உள்ள மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணி இவ்வழக்கில் ஆஜராகி வழக்கை நடத்த உள்ளார். இதற்கான நடைமுறை செலவுத் தொகை குறைந்தபட்சம் ரூ.10,000/- தேவைப்படுகிறது. மேலும், 13 ஆண்டு காலமாக விஜயா வழக்கைப் பார்த்ததினால் பேராசிரியர் கல்யாணி அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பணம் செலவாகியுள்ளதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.
அத்தியூர் விஜயாவிற்கு கிடைத்துள்ள நீதியை நிலைநாட்டவும், தொடர் சட்ட நடவடிக்கைகளுக்கும் தங்களிடம் பொருளுதவி எதிர்நோக்குகிறோம். அருள் கூர்ந்து தாங்கள் தங்களால் முடிந்தளவு நிதி அனுப்பி வைத்து விஜயாவுக்கு நீதி கிடைத்திட உதவ வேண்டுகிறோம்.
பேராசிரியர் பா.கல்யாணி
கோ.சுகுமாரன்
முகவரி: 15, முதல் மாடி, 9-ஆவது குறுக்கு வடக்கு விரிவு, ரெயின்போ நகர், புதுச்சேரி - 605 011. பேச: 98940 54640
Thursday, March 29, 2007
துறைமுகத்தை எதிர்த்து மாநிலம் தழுவிய போராட்டம்


இது குறித்து குழுவின் அமைப்பாளர் எஸ்.காளியப்பன், கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன் ஆகியோர் 27-03-2007 அன்று கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரியில் ஆழ்கடல் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடக் கோரி சட்டப்பேரவை முற்றுகை போராட்டம், ரேசன் அட்டை நகல் எரிப்புப் போராட்டம் ஆகியவை வெற்றிகரமாக நடைபெற்றது. இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களோடு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இனியும் காலம் தாழத்தாமல் புதுச்சேரி அரசு இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட்டு அறிவிப்பு வெளியிட வேண்டும்.
சில அரசியல் கட்சித் தலைவர்கள், முதலமைச்சர் இந்த திட்டத்தைக் கைவிட்டு விடுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். அதனை ஏற்று பாதிக்கப்பட்ட மக்களை மட்டுமே போராட்டத்துக்கு அணி திரட்டினோம். இனியும் துறைமுக விரிவாக்கத் திட்டம் கைவிடப்படாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்று திரட்டி பிரமாண்ட போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றனர்.
Wednesday, March 28, 2007
துறைமுகத் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் : 3000 பேர் கைது

புதுச்சேரியில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து 27-03-2007 செவ்வாய்க்கிழமை சட்டசபை முற்றுகைப் போராட்டம் மற்றும் ரேசன் அட்டை நகல்கள் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக 3,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதனால் புதுச்சேரியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், தேங்காய்த்திட்டு பகுதி மக்களை வெளியேற்றும் சூழல் ஏற்படும் என்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இத் திட்டத்தை எதிர்த்துப் போராட தேங்காய்த்திட்டு பகுதி மக்கள் நில ஆர்ஜித எதிர்ப்புக் குழு என்ற அமைப்பை உருவாக்கி போராடி வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு தரப்பு மக்களை ஒன்றிணைத்து குழு ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளனர்.
இக் குழு சார்பில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி சட்டப்பேரவை கூடும் நாளன்று ரேசன் அட்டை நகல்களை ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
சட்டப்பேரவை இணைக்கும் அனைத்து சாலைகளிலும் தடுப்பு வேலிகள் கட்டப்பட்டன. ஊழியர்கள்கூட தீவிர சோதனைக்குப் பிறகே சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த மொத்த போலீசாரும் சட்டப்பேரவை அருகேயும், மக்கள் ஊர்வலம் செல்லும் பகுதிகளிலும் குவிக்கப்பட்டனர்.
நகல் எரிப்புப் போராட்டம் நடத்த இருந்த பொதுமக்கள், பழைய பேருந்து நிலையம் அருகே கூடி, ஊர்வலமாக சட்டப்பேரவையை நோக்கி வந்தனர்.
இந்த ஊர்வலத்தில் தேங்காய்த்திட்டு நில ஆர்ஜித எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த எஸ்.காளியப்பன், கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன், புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் க.லட்சுமிநாராயணன், புஸ்சி ஆனந்து, வி.கே.கணபதி, பாஜக தலைவர் விஸ்வேஸ்வரன், அரசு ஊழியர் சம்மேளனப் பொதுச்செயலாளர் பாலமோகனன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் தங்க.கலைமாறன், விடுதலைச் சிறுத்தைகள் அரசு.வணங்காமுடி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பாலாஜி, மா.இளங்கோ, வீராம்பட்டினம் கவுன்சிலர் பா.சக்திவேல், தலைவர் காங்கேயன், முன்னாள் தலைவர் விசுவநாதன், இராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் சஞ்சீவி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, முதலியார்பேட்டை வியாபாரிகள் சங்க வி.இராஜசேகரன் உள்ளிட்ட 3000 பேர் பங்கேற்றனர்.
ரேசன் அட்டை நகல் எரிப்பு

முதலியார்பேட்டையில் கடையடைப்பு
முதலியார்பேட்டை வியாபாரிகள் சங்கத்தினர் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அப்பகுதியிலுள்ள கடைகள் அனைத்தையும் மூடியிருந்தனர்.

போராட்டத்தை முன்னிட்டு, புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் சாயா சர்மா தலைமையில் தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் கந்தநாதன், ஆயுதப்படை காவல் கண்காணிப்பாளர் சிவதாசன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Friday, March 09, 2007
துறைமுகத் திட்டத்தைக் கைவிட வேண்டும்: பழ.நெடுமாறன்
துறைமுக விரிவாக்கத் திட்டத்தை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இத் திட்டம் நிறைவேற்றப்படும் பகுதிகளைப் பார்வையிட்ட பிறகு அவர் 08-03-2007 அன்று சென்னையில் வெளியிட்ட அறிக்கை:
ரூ.2700 கோடி மதிப்பிலான புதுச்சேரி துறைமுக விரிவாக்கத் திட்டம் காரணமாக புதுச்சேரி யூனியன் பிரதேசம் வளர்ச்சி பெறுவதைக் காட்டிலும் பேரழிவைச் சந்திக்கும் நிலை உள்ளது.
மேலும் இத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தின் ஆதாயத்துக்காக புதுச்சேரி மக்களின் நலன்கள் பாதிக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இத் திட்டத்தின் காரணமாக தேங்காய்த்திட்டு என்ற கிராமம் முற்றிலும் அழியும். அங்கு பரம்பரையாக வாழ்ந்து வரும் சுமார் 3 ஆயிரம் குடும்பங்களின் வாழ்க்கை பாதிக்கும்.
துறைமுக விரிவாக்கத் திட்டத்தின் விளைவாக மாதம் 30 முதல் 50 சரக்குக் கப்பல்கள் வரும் என்றும் ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறுவது வெற்று வாக்குறுதிகளே.
இதனால் மீனவர்கள் மீன்பிடித் தொழிலைத் தொடர முடியாத நிலைக்கு ஆளாவார்கள். துறைமுகப் பகுதிக்குள் அவர்கள் நுழைவது முற்றிலுமாகத் தடுக்கப்படும். தேங்காய்த்திட்டு பகுதியில் வாழும் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டு புதியதாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கொடுப்போம் என்று கூறுவது மோசடியாகும்.
இத் துறைமுக திட்டம் பொருளாதார ரீதியில் சாத்தியமற்றது என்று நிபுணர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இத் திட்டத்தை நிறைவேற்ற முயலுவது மக்கள் விரோதப் போக்காகும். எனவே இதை உடனடியாகக் கைவிட வேண்டும். மேலும் சிறிய நிலப்பகுதியான புதுச்சேரியில் துணை நகரம், சிறப்பு பொருளாதார மண்டலம் சுமார் 1000 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. புதுச்சேரியைச் சுற்றியுள்ள எல்லா நிலத்தையும் இப்படி தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டால் புதுச்சேரி மக்கள் எங்கு போவார்கள்? தனியார் நலன்களுக்காக பொதுமக்களின் நலன்களைப் பாதிக்கும் இத் திட்டத்துக்கு எதிராக மக்கள் திரண்டு போராட வேண்டும் என்று கூறியுள்ளார் பழ.நெடுமாறன்.
ரூ.2700 கோடி மதிப்பிலான புதுச்சேரி துறைமுக விரிவாக்கத் திட்டம் காரணமாக புதுச்சேரி யூனியன் பிரதேசம் வளர்ச்சி பெறுவதைக் காட்டிலும் பேரழிவைச் சந்திக்கும் நிலை உள்ளது.
மேலும் இத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தின் ஆதாயத்துக்காக புதுச்சேரி மக்களின் நலன்கள் பாதிக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இத் திட்டத்தின் காரணமாக தேங்காய்த்திட்டு என்ற கிராமம் முற்றிலும் அழியும். அங்கு பரம்பரையாக வாழ்ந்து வரும் சுமார் 3 ஆயிரம் குடும்பங்களின் வாழ்க்கை பாதிக்கும்.
துறைமுக விரிவாக்கத் திட்டத்தின் விளைவாக மாதம் 30 முதல் 50 சரக்குக் கப்பல்கள் வரும் என்றும் ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறுவது வெற்று வாக்குறுதிகளே.
இதனால் மீனவர்கள் மீன்பிடித் தொழிலைத் தொடர முடியாத நிலைக்கு ஆளாவார்கள். துறைமுகப் பகுதிக்குள் அவர்கள் நுழைவது முற்றிலுமாகத் தடுக்கப்படும். தேங்காய்த்திட்டு பகுதியில் வாழும் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டு புதியதாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கொடுப்போம் என்று கூறுவது மோசடியாகும்.
இத் துறைமுக திட்டம் பொருளாதார ரீதியில் சாத்தியமற்றது என்று நிபுணர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இத் திட்டத்தை நிறைவேற்ற முயலுவது மக்கள் விரோதப் போக்காகும். எனவே இதை உடனடியாகக் கைவிட வேண்டும். மேலும் சிறிய நிலப்பகுதியான புதுச்சேரியில் துணை நகரம், சிறப்பு பொருளாதார மண்டலம் சுமார் 1000 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. புதுச்சேரியைச் சுற்றியுள்ள எல்லா நிலத்தையும் இப்படி தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டால் புதுச்சேரி மக்கள் எங்கு போவார்கள்? தனியார் நலன்களுக்காக பொதுமக்களின் நலன்களைப் பாதிக்கும் இத் திட்டத்துக்கு எதிராக மக்கள் திரண்டு போராட வேண்டும் என்று கூறியுள்ளார் பழ.நெடுமாறன்.
சிறைவாசி மரணம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் கோ.சுகுமாரன் 06-03-2007 அன்று வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி மத்திய சிறையில் சிறைவாசி ஒருவர் இறந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்துகிறோம்.
அரியாங்குப்பம், மணவெளியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் கடந்த 4-ஆம் தேதி மத்திய சிறையில் மாடியிலிருந்து கீழே குதித்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவர் சாவில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும், அவர் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கூறியுள்ளனர்.
காவல் நிலையங்கள் போலவே சிறைச்சாலைகளும் பாதுகாப்பற்ற இடங்களாக மாறி வருவது கண்டனத்துக்குரியது. நீதிமன்ற காவலில் நிகழ்ந்த இந்த மரணம் குறித்து புதுச்சேரி அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சிறையில் இறந்தவர் கொடிய குற்றவாளி அல்ல. குடும்ப வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவர் சிறையில் இருக்க நேரிட்டதையும் அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.
கடந்த ஓராண்டில் மட்டும் புதுச்சேரி மத்திய சிறையில் 5 பேர் இறந்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் விஷச்சாராயம் குடித்து சிறைவாசிகள் இறந்தது பற்றி விசாரித்த நீதிபதி பி.வேணுகோபால் கமிஷன் அரசுக்கு தாக்கல் செய்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. 2005-இல் தாக்கல் செய்த அறிக்கையைப் படித்துப் பார்த்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்படுவதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன.
சிறை சீர்திருத்தம் குறித்து உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகள் வழங்கியுள்ளது. இதுபற்றி அரசு அதிகாரிகள் கவலைப்படமால் இருப்பது சட்டத்துக்குப் புறம்பானது. சிறைச்சாலைகளை பார்வையிட்டு அரசுக்கு உரிய பரிந்துரைகளை அவ்வப்போது தெரிவிக்க மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளடக்கிய கண்காணிப்புக் குழு ஒன்றை அரசு ஏற்படுத்த வேண்டும்.
புதுச்சேரி மத்திய சிறையில் சிறைவாசி ஒருவர் இறந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்துகிறோம்.
அரியாங்குப்பம், மணவெளியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் கடந்த 4-ஆம் தேதி மத்திய சிறையில் மாடியிலிருந்து கீழே குதித்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவர் சாவில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும், அவர் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கூறியுள்ளனர்.
காவல் நிலையங்கள் போலவே சிறைச்சாலைகளும் பாதுகாப்பற்ற இடங்களாக மாறி வருவது கண்டனத்துக்குரியது. நீதிமன்ற காவலில் நிகழ்ந்த இந்த மரணம் குறித்து புதுச்சேரி அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சிறையில் இறந்தவர் கொடிய குற்றவாளி அல்ல. குடும்ப வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவர் சிறையில் இருக்க நேரிட்டதையும் அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.
கடந்த ஓராண்டில் மட்டும் புதுச்சேரி மத்திய சிறையில் 5 பேர் இறந்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் விஷச்சாராயம் குடித்து சிறைவாசிகள் இறந்தது பற்றி விசாரித்த நீதிபதி பி.வேணுகோபால் கமிஷன் அரசுக்கு தாக்கல் செய்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. 2005-இல் தாக்கல் செய்த அறிக்கையைப் படித்துப் பார்த்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்படுவதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன.
சிறை சீர்திருத்தம் குறித்து உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகள் வழங்கியுள்ளது. இதுபற்றி அரசு அதிகாரிகள் கவலைப்படமால் இருப்பது சட்டத்துக்குப் புறம்பானது. சிறைச்சாலைகளை பார்வையிட்டு அரசுக்கு உரிய பரிந்துரைகளை அவ்வப்போது தெரிவிக்க மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளடக்கிய கண்காணிப்புக் குழு ஒன்றை அரசு ஏற்படுத்த வேண்டும்.
10 மரக்கன்றுகள் நட வேண்டும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 01-03-2007 அன்று வெளியிட்ட அறிக்கை:
ஒரு மரம் வெட்டப்பட்டால் அதற்கு ஈடாக அந்த இடத்தில் 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கிறோம்.
கரூர்-கோயம்புத்தூர் இடையே நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் போது மரங்கள் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக கிராம விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் நடராஜன் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் நீதிபதிகள் ஏ.பி.ஷா, கே.சந்துரு ஆகியோர் ஒரு மரம் வெட்டப்பட்டால் அதற்கு ஈடாக அந்த இடத்தில் 10 மரக்கன்றுகள் நட வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளனர். வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழல் அழிக்கப்பட்டு வரும் இக்காலத்தில் இத்தீர்ப்பு வந்துள்ளது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது.
மரங்கள் வெட்டப்படுவதுதான் போதிய மழை இல்லாமல் போனதற்குக் காரணம். மேலும், நச்சு ரசாயன தொழிற்சாலைகளாலும், நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்படாததாலும் நிலத்தடி நீர் மாசுப்படுதல் அன்றாடம் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.

புதுச்சேரியில் 20 ஆண்டுகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரி அரசு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இத்தீர்ப்பு நகலைப் பெற்று அரசின் அனைத்து துறைகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். புதுச்சேரியில் மரங்கள் நிறைய வெட்டப்படுவதால் இத்தீர்ப்பை செயல்படுவத்துவது சுற்றுச்சூழலை ஓரளவாவது பாதுகாக்க உதவும்.
இந்த தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டக்கூடாது. தவிர்க்கவே முடியாத சூழலில்தான் மரங்கள் வெட்டப்பட வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வோடு அரசு செயல்பட வேண்டும்.
Wednesday, March 07, 2007
புதுச்சேரி தேங்காய்த்திட்டு மக்களுடன் பழ.நெடுமாறன்

4-3-2007 ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரிக்கு வந்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், தேங்காய்த்திட்டுப் பகுதி மக்களைச் சந்தித்து பேசினார்.
புதுச்சேரியில் துறைமுக விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு தேங்காய்த்திட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துப் போராடி வருகின்றனர்.
இந் நிலையில் புதுச்சேரி வந்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தேங்காய்த்திட்டு பகுதிக்குச் சென்றார். அவருக்கு மரப்பாலம் அருகே நில ஆர்ஜித எதிர்ப்புக் குழுவின் தலைவர் காளியப்பன் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் தேங்காய்த்திட்டு மக்களைச் சந்தித்து அவர் பேசினார். அப்போது "துறைமுக விரிவாக்கத்துக்காக தேங்காய்த்திட்டு பகுதிகளில் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட உள்ளதாகவும், இதனால் தங்கள் கிராமத்தை காலி செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது' என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அப்போது அவர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், "உலக மயமாக்கலின் தொடர்ச்சியாக தொழிற்பேட்டை மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க விளை நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்படுகிறது. விளை நிலங்களை இதுபோன்ற காரியங்களுக்கு பயன்படுத்தக் கூடாது.
இது உலக அளவில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஆதரவான செயலாகும். இதை மக்கள் போராட்டத்தின் மூலம் மட்டுமே முறியடிக்க முடியும்.
துறைமுக விரிவாக்கத் திட்டம் தொடர்பாக தேங்காய்த்திட்டு மக்களின் போராட்டத்துக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசு மக்களுக்கு எதிராக விளைநிலங்களை ஆர்ஜிதம் செய்து அளிக்கக் கூடாது. இதனை தடுக்க இயக்கம் நடத்தி, போராடவும் தயாராக வேண்டும்' என்றார்.
புதுவை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் கோ.சுகுமாரன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், செம்படுகை நன்னீரகம் கு.இராமமூர்த்தி, செந்தமிழர் இயக்கத் தலைவர் ந.மு.தமிழ்மணி, இராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தி.சஞ்சீவி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Tuesday, March 06, 2007
தமிழக மீனவர்கள் சுட்டுக் கொலை: பழ.நெடுமாறன் கண்டனம்

தமிழக மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக் கொல்லும் இலங்கை கடற்படையின் செயலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்தார்.
புதுச்சேரி மீனவர் விடுதலை வேங்கைகள் சார்பில் சிங்காரவேலர் பிறந்தநாள் விழா, இலங்கைத் தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் வழங்கும் விழா ஆகியவை புதுச்சேரியில் 4-3-2007 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிக்கு மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பேசியது:
ஆசிய கண்டத்தில் முதல் கம்யூனிஸ்டாகத் திகழ்ந்தவர் சிங்காரவேலர். இவர் உலகத் தொழிலாளர் தினத்தை இந்தியாவில் முதன் முதலில் கொண்டாடினார்.
அவரது பிறந்த நாள் விழாவை மீனவர் விடுதலை வேங்கைகள் இயக்கம் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இயக்கம் ஒரு சமுதாய இயக்கமாக மட்டுமல்லாமல், தமிழ்த் தேசிய உணர்வுப் படைத்த இயக்கமாகத் திகழ்வதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
ஈழத்தில் வாழும் மக்கள் இலங்கை இராணுவத்தின் இனவெறியால் பலியாகி வருகின்றனர். அவர்களுடன் சகோதர உணர்வு கொண்டவர்கள் என்பதால் தமிழக மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக் கொல்லும் கொடுமையும் நடந்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பழ.நெடுமாறன்.
இவ்விழாவில் அமைப்புச் செயலர் விசுவநாதன், தமிழக மீனவ மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கில்பர்ட் ரோட்ரிகோ, மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் கோ.சுகுமாரன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் சஞ்சீவி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, செந்தமிழர் இயக்கத் தலைவர் ந.மு.தமிழ்மணி, மக்கள் சிவில் உரிமைக் கழக மு.முத்துக்கண்ணு, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
Monday, March 05, 2007
இலங்கை மீது பொருளாதாரத் தடை: தமிழ் எம்.பி. வலியுறுத்தல்

இலங்கை அரசு மீது இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிப் பொதுச்செயலருமான மாவை.எஸ்.சேனாதிராசா வலியுறுத்தினார்.
புதுச்சேரி முதல்வர் ந.ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் 4-3-2007 ஞாயிறன்று சந்தித்த இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சேனாதிராசா பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
அண்மையில் பொறுப்பேற்ற ராஜபக்சே அரசு இலங்கையில் இராணுவ அடிப்படையில் தீர்வு காண நினைக்கிறது. தமிழ் மக்களுக்கு எதிராகவே அவர்களது நடவடிக்கைகள் உள்ளன.
அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் 3 லட்சம் தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இதில் ஒன்றரை லட்சம் பேர் உள்நாட்டிலேயே அகதிகளாக இருக்கின்றனர்.
2005-ஆம் ஆண்டுக்குப் பிறகு 4 ஆயிரம் தமிழர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்கேவுடன் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை ராஜபக்சே அரசு மீறிவிட்டது. இதனால், தமிழ் மக்கள் வாழும் பகுதியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
தங்கள் இடத்திலிருந்து வெளியேறிய தமிழ் மக்கள் தங்கள் பகுதிக்கு மீண்டும் திரும்புவது குறித்து இலங்கை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். இடம் பெயர்ந்த மக்கள் தங்கள் இடத்தில் குடியேறலாம். ஆனால், இராணுவத்தின் நிபந்தனைகளுக்கு உள்பட வேண்டும் என்பது போல் தீர்ப்பு வந்துள்ளது. இதனை நாங்கள் ஏற்க தயாராக இல்லை.

தென் இலங்கைப் பகுதிகளிலும் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்கள் கடத்தப்படுகின்றனர். அவர்களிடம் பணம் பறிக்கப்படுகிறது. பணம் கொடுக்காதவர்கள் கொல்லப் படுகின்றனர். இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்குப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ரவீந்திரநாத் காணாமல் போயுள்ளார். அவரது நிலை என்னவென்று தெரியவில்லை.
இந்திய இலங்கை ஒப்பந்தப்படி வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும். இங்கு ஒரு அரசு மற்றும் அமைச்சரவை நிறுவப்பட வேண்டும். ஆனால், ஒப்பந்தத்திற்கு மாறாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை இலங்கை அரசுப் பிரித்துள்ளது. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறியுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று பல்வேறு சர்வதேச நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஆனால், இராணுவ நடவடிக்கைகளை இலங்கை அரசு தீவிரப்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே, இந்தியாவும், சர்வதேச நாடுகளும் இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். தமிழ் மக்களின் உரிமையை இலங்கையில் நிலைநாட்ட இந்திய அரசு உதவ வேண்டும். இது தொடர்பாக புதுவை மற்றும் தமிழக அரசுகள் எங்கள் கருத்தை மத்திய அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றார் சேனாதிராசா.
Subscribe to:
Posts (Atom)