Sunday, April 22, 2007

பிரான்சில் ஈழத்தமிழர்கள் 17 பேர் கைது: புதுச்சேரியில் கண்டனப் பேரணி

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் 17 பேரை பயங்கரவாதிகள் என்ற பெயரில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 22-04-2007 ஞாயிறு, காலை 10.30 மணிக்கு, புதுச்சேரி மீட்பரின் அன்னை இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

தந்தை பெரியார் தி.க. ஒருங்கிணைத்திருந்த இக்கூட்டத்திற்கு அதன் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார்.

பாட்டாளி மக்கள் கட்சி சா.து.அரிமாவளவன், ஆசிரியர் வேணுகோபால், விடுதலைச் சிறுத்தைகள் சு.பாவாணன், ப.அமுதவன், ம.தி.மு.க சந்திரசேகரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோ.சுகுமாரன், மீனவர் விடுதலை வேங்கைகள் இரா.மங்கையர்செல்வன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை சி.மூர்த்தி, பகுஜன் சமாஜ் கட்சி தங்க.கலைமாறன், மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கம் - வீராம்பட்டினம் கவுன்சிலர் பா.சக்திவேல், தமிழர் தேசிய இயக்கம் இரா.அழகிரி, தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக் கழகம் அபுபக்கர், நெய்தல் அரசு ஊழியர் சங்கம் மு.கங்காதரன், தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பா, செந்தமிழர் இயக்கம் ந.மு.தமிழ்மணி, தனித் தமிழ்க் கழகம சீனு.அரிமாப்பாண்டியன், இலக்கியப் பொழில் பராங்குசம், புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை பொ.தாமோதரன், சமூக நீதிப் போராட்டக் குழு அ.மஞ்சினி, ஜோதிப் பிரகாசம், பூவுலகின் நண்பர்கள் சீனு.தமிழ்மணி, தனித் தமிழ் இயக்கம் தமிழமல்லன், விடுதலை வீரர் சீனுவாசனார் இயக்கம் புதுவை தமிழ்நெஞ்சன், புதுவைச் சிவம் இலக்கியப் பேரவை சிவ.இளங்கோ, இளங்கோ மன்றம் பொன்னுசாமி, நண்பர்கள் தோட்டம் யுகபாரதி, வெள்ளையணுக்கள் இயக்கம் பாவல், தந்தை பெரியார் தி.க. விசயசங்கர், தந்தைப்பிரியன், மா.இளங்கோ, வீரமோகன், வீரசுப்பு, பரமகுரு உட்பட 100 பேர் கலந்துக் கொண்டனர்.

தீர்மானங்கள்:

1. பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் 17 பேரை பயங்கரவாதிகள் என்ற பெயரில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் மே மாதம் தொடக்கத்தில் புதுச்சேரி, சிங்காரவேலர் சிலை அருகில் இருந்து மாபெரும் பேரணியாகப் புறப்பட்டு பிரெஞ்சுத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது. இதற்குப் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைத் திரட்டுவது.

2. பேரணி முடிவில் பிரெஞ்சுத் தூதரகத் துணைத் தூதரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது.

3. பேரணியை ஒழுங்கமைப்பதற்காக ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது. இதில் அனைத்துக் கட்சி, அமைப்புகளின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

No comments: