Showing posts with label சங்கரதாஸ் சுவாமிகள். Show all posts
Showing posts with label சங்கரதாஸ் சுவாமிகள். Show all posts

Saturday, September 07, 2024

தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் 157ஆவது பிறந்த நாள்: தமிழ் அமைப்பினர் நினைவிடத்தில் மலரஞ்சலி!


நாடகத் தந்தை எனப் போற்றப்படும் தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் 157ஆவது பிறந்த நாளையொட்டி, கருவடிக்குப்பம் சுடுகாட்டில் அமைந்துள்ள நினைவிடத்தில் இராதே அறக்கட்டளை சார்பில் இன்று (07.09.2025) காலை 10.30 மணிக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு இராதே அறக்கட்டளை தலைவர் பொறிஞர் இரா.தேவதாசு தலைமைத் தாங்கினார்.

அரியாங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. பாசுகரன் (எ) தட்சணாமூர்த்தி அவர்கள் கலந்துகொண்டு சங்கரதாசர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினார்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், வலைப்பதிவர் சிறகம் தலைவர் இரா.சுகுமாரன், வெற்றித் தமிழர் பேரவைத் தலைவர் தி.கோவிந்தராசு, தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பி.பிரகாஷ், செயலாளர் இராஜா, புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், திராவிடர் கழகம் மண்டலத் தலைவர் வே.அன்பரசன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், புதுச்சேரி மாணவர் கூட்டமைப்புத் தலைவர் சீ.சு.சாமிநாதன், சுற்றுச்சூழல் கலாச்சார புரட்சி இயக்கத் தலைவர் பிராங்கிளின் பிரான்சுவா, தமிழ்தேசிய பேரியக்கத் தலைவர் இரா.வேல்சாமி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஜே.சம்சுதீன், செயலாளர் பலுலுல்லா, சான்றோர் பேரவை குமரவேல், பொறிஞர் கண்ணன், பாவலர் இளமுருகன், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் வேணு. ஞானமூர்த்தி, தமிழறிஞர் கோ.தாமரைக்கோ, நாடகக் கலைஞர் நந்தகோபால், ஓவியர் இராஜராஜன், நட்புக்குயில் அமைப்புத் தலைவர் சீனு.தமிழ்மணி, புதுச்சேரி நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் குமரன், பொருளாளர் இரா.ராஜ்குமார், கலை இலக்கியப் பேரவைப் பொறுப்பாளர் எலிசபத் ராணி, ஐயப்பன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர் வணக்கம் செலுத்தினர்.

பாவலர் பாட்டாளி பைரவி தலைமையில் சங்கரதாசருக்கு பாமாலை சூட்டும் பாவரங்கம் நடைபெற்றது. இதில் 15 பாவலர்கள் கலந்துகொண்டு பாமாலை சூட்டினர். முடிவில் செல்வி இரா.சுகன்யா நன்றி கூறினார்.

தமிழ் அமைப்புகள் சார்பில் சங்கரதாசர் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது.