Showing posts with label வலைப்பதிவர் பட்டறை. Show all posts
Showing posts with label வலைப்பதிவர் பட்டறை. Show all posts

Tuesday, January 29, 2013

புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் மற்றும் புதுச்சேரி கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து  தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

நிகழ்ச்சி நாள்: 17-02-2013 ஞாயிறு,  காலை 9.30 மணி முதல்... (காலை 9.15 மணிக்கு பதிவு தொடங்கப்படும்).

இடம்: மக்கள் தலைவர் வ.சுப்பையா இல்லம், 66. கடலூர் சாலை, முதலியார் பேட்டை, புதுச்சேரி -605 004.

இந்த நிகழ்ச்சியில் தமிழா நிறுவனத்தின் குறுந்தகடு வெளியிடப்படும், இதனைத் தொடர்ந்து  தமிழ்க் கணினி தொடர்பாக கீழ்க்கண்டவைகள் பற்றிய  பரத்தீடு (Power point Presentation) விளக்கம் அளிக்கப்படும்.
  1. தமிழில் இயங்குதளம்: விண்டோசு மற்றும் லினக்சு (Ubuntu),
  2. தமிழில் எம்.எசு ஆபீசு, ஓப்பன் ஆபீசு,
  3. கட்டற்ற மென்பொருட்கள் (open source software)
  4. கைப்பேசியில் தமிழ் பயன்படுத்துவது. ஆன்ட்ராய்டு, பிற..
  5. தமிழில்  இணைய உலவிகள் ( Web Browsers)
  6. ஒருங்குகுறி பற்றிய விளக்கம்,
  7. தமிழில் தட்டச்சு மென் பொருட்கள்  நிறுவல் மற்றும் பயன்படுத்துதல்,
  8. தமிழில் மின்னஞ்சல், அரட்டை,
  9. வலைப்பதிவு செய்தல்: பிளாக், மற்றும் வேர்டு பிரசு,
  10. திரட்டிகளின் பயன்பாடு: தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி உள்ளிட்டவைகளில் இணைப்பு அதன் பயன்பாடு,
  11. சமுக வலைத்தளங்களில் பதிவு செய்தல்: முகநூல், டிவிட்டர், கூகுல் பிளசு
  12. தமிழில் கிடைக்கும் பல்வேறு மென் பொருட்கள்.
  13. தமிழ் தொடர்பான பிற செய்திகள்
இந்த நிகழ்ச்சியில் பதிவு செய்து பங்கேற்பவர்களுக்கு தமிழ் மென்பொருட்கள்  அடங்கிய குறுந்தகடு, மற்றும் குறிபேடு, எழுதுகோல், பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். காலை மற்றும் பிற்பகலில் தேநீர், மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. எத்தனைபேர் வருவார்கள் திட்டமிட வசதியாக  இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்ய விரும்புகிறவர்கள் இந்த  பதிவுப் படிவத்தினை கிளிக் செய்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவுக் கட்டணமாக மாணவர்களுக்கு ரூ 50/- பணி செய்பவர்களுக்கு ரூ 100/- செலுத்த வேண்டும். இந்த பயிலரங்கில் பங்கேற்க இந்த படிவத்தின் பதிவு நிபந்தனைக்கு உட்டது. 
பதிவு செய்தவர்கள் உரிய நேரத்தில் வருகை தரவேண்டும். 9.15 முதல் 9.30 வரை பதிவு நேரமாகும். பதிவு நேரத்திற்கு பின் வருபவர்களின் இடம் மற்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.
 

மேலும் விவரங்களுக்கு : இரா.சுகுமாரன் 9443105825, எல்லை.சிவக்குமார்.  9843177943 என்ற  தொலை பேசியில் தொடர்பு கொள்க.

Saturday, May 15, 2010

புதுச்சேரியில் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு

நாள்: 16-05-2010  ஞாயிறு,

நேரம்: காலை 10 முதல் மாலை 6 மணி வரை,

இடம்: வணிக அவை, (பாரதி பூங்கா எதிரில்), புதுச்சேரி.


தொடக்க நிகழ்வு

காலை 10.00 மணி முதல் 11.30 மணிவரை

தலைமை:

திரு.இரா.சுகுமாரன் அவர்கள்

ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்.

வரவேற்பு:

திரு.ஏ.வெங்கடேஷ் அவர்கள், திரட்டி.

மாநாட்டைத் தொடக்கி வைத்து உரை:

முதுமுனைவர் -செந்தமிழ் அந்தணர்- கழக இலக்கிய செம்மல்

திரு. இரா. இளங்குமரனார் அவர்கள்.

நூல் வெளியீடு:

தமிழ் வரிவடிவ சீர்திருத்தமா? சீரழிப்பா?.

தொகுப்பு: புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள்

வெளியிடுபவர் :

பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள்

முதல் படி பெறுபவர்:

திரு கோ.சுகுமாரன் அவர்கள்,

செயலர், மக்கள் உரிமைக்கூட்டமைப்பு - பொதுக்குழு உறுப்பினர், உத்தமம், INFITT).

 முற்பகல் 11.30 மணி முதல் 1.30 மணிவரை

 முதல் அமர்வு

தலைமை

பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள், புதுச்சேரி

முன்னிலை:

திரு ஓவியர் இரா.இராசராசன் அவர்கள்

திரு ம.இளங்கோ, அவர்கள்

திரு க. அருணபாரதி அவர்கள், மென்பொருள் வல்லுநர்.
கருத்துரை:

திரு.இராம.கி அவர்கள் பொறியாளர்

பொதுக்குழு உறுப்பினர், உத்தமம் (INFITT), சென்னை

 திரு மணி.மு.மணிவண்ணன் அவர்கள், பொறியாளர் சென்னை,

முனைவர் சொ.சங்கரபாண்டி அவர்கள்,

தமிழ்மணம்- வலைப்பதிவுகளின் திரட்டி, அமெரிக்கா,

திரு விருபா.குமரேசன் அவர்கள்,

விருபா.காம், சென்னை.

--------------------------------------------------------------------------------------

 உணவு இடைவேளை: பகல் 1.30 மணிமுதல் 2.30 மணிவரை

மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 -------------------------------------------------------------------------------------

பிற்பகல் அமர்வு

பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை

தலைமை:

 திரு.தமிழ நம்பி அவர்கள்

விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு

முன்னிலை:

திரு.வீரமோகன் அவர்கள்

திரு. சீத்தா .பிரபாகரன் அவர்கள்,

திரு.ஓவியர். பா.மார்கண்டன் அவர்கள்

கருத்துரை:

பேராசிரியர். செல்வக்குமார் அவர்கள்,

வாட்டலூ பல்கலைக்கழகம். கனடா,

திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா,

திரு. மா,பூங்குன்றன் அவர்கள்,

தென்மொழி, சென்னை.

திரு.சுப. நற்குணன் அவர்கள், மலேசியா,

திரு, சீனு. அரிமாப்பாண்டியன் அவர்கள்,

செயலர், தனித்தமிழ்க் கழகம, புதுச்சேரி,

திரு. க. தமிழமல்லன் அவர்கள்

தலைவர், தனித் தமிழ் இயக்கம் புதுச்சேரி,

திரு. ந.மு தமிழ்மணி அவர்கள்

அமைப்பாளர் , செந்தமிழர் இயக்கம்,புதுச்சேரி

திரு. கோ.தாமரைக்கோ அவர்கள்,

பாவலர் அரங்க. நடராசன் அவர்கள்

தமிழ்வளர்ச்சி நடவடிக்கைக் குழு, புதுச்சேரி

திரு. ப. திருநாவுக்கரசு அவர்கள்

தலைவர், நண்பர்கள் தோட்டம், புதுச்சேரி

திரு. எழில் . இளங்கோ அவர்கள்

தமிழியக்கம், விழுப்புரம்,

நிறைவு நிகழ்வு

மாநாட்டு நிறைவுரை:

பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள்

நன்றியுரை:

திரு. இரா. மோகனகிருஷ்ணன் அவர்கள்

புதுவை.காம்
----------------------------------------------------------------------------------------------------
வெளிநாடுகளில் இருந்து உரையாற்றும் அறிஞர்களின் உரை இணைய வழியாக நேரடியாக ஒளி/ஒலிபரப்பப்படும்.
----------------------------------------------------------------------------------------------------

நிகழ்ச்சி ஏற்பாடு:

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

20,4- வது தெரு விரிவாக்கம், அன்னைதெரசா நகர்

மூலக்குளம் புதுச்சேரி -605010.பேசி: +91 94431 05825

மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com,

இணையம் : www.pudhuvaitamilbloggers.org

வலைப்பூ : www.puduvaibloggers. blogspot.com

அனைவரும் வருக! ஆதரவுத் தருக!!

Saturday, January 23, 2010

புதுச்சேரியில் - தமிழக் கணினியும் இணையப் பயன்பாடும் - கருத்தரங்கம்!

Tamil Bloggers Meeting

கருத்தரங்கம் குறித்த செய்தியைப் படிக்க படத்தை "அழுத்தவும்"

Sunday, December 02, 2007

புதுச்சேரி "தமிழ்க் கணினி" வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - நிதி தாரீர்!

புதுச்சேரியில் வரும் திசம்பர் 9 அன்று, ஒரு நாள் முழுவதும், "தமிழ்க் கணினி" வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது.

காலை முதல் மாலை வரை கணினி துறையில் நன்கு பட்டறிவு உடைய இளம் அறிஞர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

மாலை நிறைவு விழாவில் புதுச்சேரி முதல்வர் ந.ரங்கசாமி, பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொன்னவைக்கோ ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர்.

கணினியில் தமிழ் மொழி கோலோச்சிட இதுபோன்ற பயிற்சிப் பட்டறை அவசியம் என்பதை அறிவீர்கள்.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் ஒழுங்கமைக்கும் இப்பயிற்சிப் பட்டறைக்கு தாங்கள் தங்களால் முடிந்தளவு நிதி அளித்து உதவ வேண்டுகிறேன்.

செலவு பட்டியல் உட்பட தகவல்களுக்கும், நிதி அளிக்கவும்:

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

Tuesday, November 13, 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - பத்திரிகை செய்திகள்

தினமணி


தினகரன்


தினமலர்


தி இந்து


டெக்கான் கிரானிக்கல்

Monday, November 12, 2007

திசம்பர் 9 : புதுச்சேரியில் "தமிழ்க் கணினி" வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை!

தமிழ் மொழி அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. அறிவியல் துறையில் தமிழ்ப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிற மொழியில் உள்ள கலைச் சொற்கள் தமிழில் ஆக்கம் செய்யப்பட்டு தொடக்க கல்வி முதல் உயர் கல்வி வரை தமிழ் வழிக் கல்வி சாத்தியம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அறிவியல் வளர்ச்சியின் உச்சம் இன்றைக்கு கணினியின் பயன்பாட்டை தீவிரப்படுத்தி உள்ளது. ஆனால், கணினியில் தமிழ்ப் பயன்பாடு போதிய அளவில் இல்லை என்றே சொல்ல வேண்டும். முறையாக கணினிப் பயின்றவர்கள்கூட கணினியில் தமிழைப் பயன்படுத்துவதில்லை. தமிழில் தட்டச்சு செய்ய மட்டுமே தெரிந்திருப்பதால் தமிழில் கணினி தொழில் நுட்பங்களை அறிந்திருக்கிறார்கள் என்றோ, பயன்படுத்துகிறார்கள் என்றோ கூறிவிட முடியாது.

தமிழ்க் கணினி என்பது முதலில் நம் கணினியைத் தமிழ்க் கணினியாக்குவது. அதாவது, கணினியின் இயங்குதளங்களைத் (Operating Systems) தமிழில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது, பரவலாக்குவது. அதைப் பயன்படுத்த ஊக்கப்படுத்துவது. இரண்டாவது, கணினியில் அனைத்து நிலைகளிலும் தமிழைப் பயன்படுத்துவது.

ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், டச்சு போன்ற பிற மொழிகளை உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் கணினியில் படிக்க முடியும். தமிழை அவ்வாறு படிக்க முடியாத நிலை இருந்தது. ‘ஒருங்குறி’ எழுத்து (Unicode Font) வந்த பின் இந்த நிலை மாறி உலகம் முழுவதும் தமிழில் படிக்க முடியும், எழுத முடியும் நிலை உருவானது.

தற்போது, தமிழ் ஒருங்குறி எழுத்து வடிவம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஒருங்குறி தமிழ் எழுத்தைப் பயன்படுத்திட போதிய தொழில் நுட்ப அறிமுகமோ, பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வோ தமிழர்களிடம் போதுமானதாக இல்லை. எத்தனைத் தொழில் நுட்பங்கள் வந்தாலும் அதைப் பயன்படுத்தாமல் விடுவோமனால் அனைத்து நிலைகளிலும் தமிழ் என்ற நோக்கம் நிறைவேறாது.

இணைய உலகில் வலைப்பதிவுகள் (Blogs) எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கணினியும் இணைய இணைப்பும் மட்டும் இருந்தால், வேறு செலவு ஏதுமின்றி, ஒருவர் தன்னுடைய கருத்துக்களை, எண்ணங்களை உலக மக்களுக்கு எடுத்துச் செல்ல முடியும். இன்று வலைப்பூக்கள் மாற்று ஊடகத்திற்கு வலு சேர்த்து வருகிறது. இதில் உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை அலசப்படுகிறது. கதை, கவிதை, குறும்படம், திரைப்பட விமர்சனம் என இலக்கியப் படைப்பும், விவாதங்களும் நிகழ்த்தப்படுகின்றன.

இதுபோன்று கணினியில் தமிழ்ப் பயன்பாட்டிற்குப் போதிய பயிற்சி இன்றியமையாதது. இந்நோக்கத்தை நிறைவேற்றவே “தமிழ்க் கணினி” வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை. இதில் காலை அமர்வுகள் தமிழ்க் கணினி குறித்ததாகும். அதாவது, நமது கணினியை முழுக்க முழுக்க தமிழில் இயங்கச் செய்வது.

மதியம் அமர்வுகள் கணினியில் தமிழ்ப் பயன்பாடு பற்றியதாகும். குறிப்பாக தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, இணைய தளங்களில், வலைப்பூக்களில் தமிழில் எழுதுவது போன்றவற்றை எளிமையாக செய்திட தேவையான மென்பொருட்களை அறிமுகம் செய்து பயிற்சி அளிப்பது.

மாலை நிறைவு விழாவோடு பயிற்சிப் பட்டறை நிறைவடைகிறது.

மாலை நிறைவு விழாவில் புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு ந.ரங்கசாமி அவர்கள் கலந்து கொள்ள ஒப்புதல் அளித்துள்ளார்.

இப்பயிற்சிப் பட்டறையை ஒருங்கிணைக்கும் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் தமிழ் ஆர்வலர்கள், செயல்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து கணினித் தமிழை முன்னேடுத்துச் செல்ல உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்குத் தேவையான தமிழ் மென்பொருட்கள், அதன் பயன்பாடு குறித்த பல்வேறு தகவல்கள் அடங்கிய மலர் இலவசமாக வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சிப் பட்டறையில் 100 மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் கணினிப் பயன்படுத்தும் புதியவர்களுக்கு முன்னுரிமைக் கொடுக்க தீர்மானித்துள்ளோம்.

எனவே, பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள விரும்புவோர்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - பதிவகம்

இணையப் பக்கத்திற்குச் சென்று முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டுகிறோம்.

பதிவுக் கட்டணம் ரூ.50. மாணவர்களுக்கு ரூ.25. பதிவுக் கட்டணம் அரங்கத்தில் செலுத்தினால் போதும்.

பயிற்சிப் பட்டறை குறித்த தகவல்கள் உடனுக்குடன் கீழ்க்காணும் தளத்தில் வெளியிடப்படும்:

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

அனைத்து தொடர்புகளுக்கும்:

இரா.சுகுமாரன், ஒருங்கிணைப்பாளர்,
புதுச்சேரி வலைபதிவர் சிறகம்.

உலாபேசி: + 91 94431 05825
மின்ன்ஞ்சல்: rajasugumaran@gmail.com