Showing posts with label மரண தண்டனை ஒழிப்பு. Show all posts
Showing posts with label மரண தண்டனை ஒழிப்பு. Show all posts

Friday, October 25, 2013

ஒரு சிறைக் காவலரும், மரண தண்டனை ஒழிப்பும்!

1988-ல் நானும், நண்பர்களும் கொடைக்கானல் தொலைக்காட்சி நிலைய வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை அரசரடியில் உள்ள நடுவண் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். அப்போது சிறைவாசிகளுக்கு 15 நட்களுக்கு ஒருமுறை திரைப்படம் காண்பிப்பார்கள். சிறைவாசிகளின் இறுக்கம் நிறைந்த வாழ்வு சற்று இலகும் தருணம் அவை. எங்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டிருந்தது.

மிசா காலத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த சிட்டி பாபு போன்றவர்களை கொன்றும், எண்ணற்றவர்களைத் அடித்து உதைத்துத் துன்புறுத்தியும் புகழ்ப் பெற்ற சிறை அதிகாரி வித்யாசாகர். அவர் அப்போது சிறைத்துறை ஐ.ஜி.யாக இருந்தார். அவர் தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பு. அவர் மதுரை சிறையைப் பார்வையிட வருவதாகவும், சிறைவாசிகளின் குறைகளைக் கேட்டறிவதாகவும் எங்களுக்கு தகவல் வந்தது.

நாங்கள் எப்போதுமே சிறை அதிகாரிகளின் நேரடிக் பார்வையிலுள்ள ஆறாம் பிளாக் செல்லில் அடைக்கப்படிருந்தோம். அதோடு மட்டுமல்லாமல், தீவிரவாதிகள் அல்லவா? ஆகையால், சிறை அதிகாரிகள் எங்களுக்கு முடிந்தவரை எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். இருந்தாலும், திரைப்படம் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை எங்களுக்குள் எழுந்து, நீண்ட விவாதம் நடந்தது. திரைப்படம் பார்க்க சிறை அதிகாரிகளிடம், அதுவும் கொடூரமான மனித உரிமை மீறலை நிகழ்த்திய அதிகாரியிடம் கேட்பதா என்ற மாபெரும் விவாதம். இதற்குப் புரட்சிகர பிம்பம் இக்கோரிக்கையை எழுப்ப பெரும் தடையாக இருந்தது. நானும், சில தோழர்களும் இக்கோரிக்கையை எழுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். பின்னர் ஒரு வழியாக கோரிக்கையை எழுப்புவது என்று முடிவுக்கு வந்தோம். இதில் ஆர்வமாக இருந்த என்னிடமே அந்தப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது.

அந்த நாளும் வந்தது. சிறை அதிகாரிகள் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டனர். சிறைவாசிகள் ஏதாவது குறை சொல்லிவிடக் கூடாது என்ற அச்சம்தான் அதற்குக் காரணம். சிறைவாசிகள் வரிசையாக தங்கள் பிளாக் மற்றும் செல்லின் முன் வந்து நிற்க வேண்டும். அதிகாரிகள் வரும் போது வலது கையை உயர்த்தி நீட்ட வேண்டும். அப்போது அதிகாரி நிற்பார். அச்சமயத்தில் அவரிடம் குறைகளைக் கூற வேண்டும். இதுதான் சிறை நடைமுறை. கையை நீட்டி குறை சொன்ன சிறைவாசிகளுக்கு அந்த அதிகாரி சென்றவுடன் கடும் தண்டனை விதிக்கப்படும். சிறை காவலர்கள் அடித்து துவைத்து விடுவார்கள். அவர்களுக்கு சிறை விதிகளை தளர்த்தி அளிக்கப்டும் பீடி, சிகரெட், இன்ன பிற நிறுத்தப்படும். அவரைப் பொருத்தவரையில் மட்டும் சிறை விதிகள் கடுமையாக பின்பற்றப்படும். இதனால், பெரும்பாலும் யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆயுள் தண்டனைச் சிறைவாசிகள் மட்டும் தங்களின் ‘ரெமிஷன்’ முன்விடுதலைக் குறித்து ஏதாவது கேட்பார்கள். மற்றபடி அந்த உயரதிகாரிகளின் வருகை ஒரு சடங்காகவே நடந்து முடியும். ஒழுங்காக ‘மாமூல்’ அளிக்காத சிறைகளுக்கே இதுபோன்ற உயரதிகாரிகள் வருகை இருக்கும் என்ற செய்தியும் உண்டு.

நாங்களும் எங்கள் செல்லின் முன்பு வரிசையாக நின்றிருந்தோம். சிறை அதிகாரிகளுக்கு எங்கள் மீது மரியாதை இருந்தாலும், ஒருபுறம் சந்தேகமும் எப்போதும் உண்டு. ஏதாவது சிக்கல் ஏற்படுத்திவிடுவார்கள் என்ற அச்சம்தான்.

அதிகாரிகள் புடைசூழ வித்யாசாகர் தூரத்தில் வருவதைப் பார்த்தோம். மிகக் கொடூரமான அதிகாரியை சந்திக்க நாங்களும் ஆவலுடன் இருந்தோம். எங்களுக்குப் பாதுகாப்புக்காக நிற்கும் சிறைக் காவலர்கள் கஞ்சிப் போட்டு தேய்த்த உடையின் மிடுக்குடன், மிகுந்த விரைப்புடன் நின்றிருந்தனர். மிக அருகில் வித்யாசாகர் வந்து எங்களிடம் நின்றார். வரிசையில் என்னருகில் நின்றிருந்த பொழிலனிடம் நலம் விசாரித்தார். ‘அப்பா (பாவலரேறு பெருஞ்சித்திரனார்) நலமாக இருக்கிறார்களா’ என்று கேட்டார். அவரும் பதில் அளித்தார். மிசாவில் சென்னை நடுவண் சிறையில் இருந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார், எம்.ஆர்.இராதா ஆகிய இருவர் மட்டுமே வித்யாசாகரின் தடிக்குத் தப்பியவர்கள் என்பது கூடுதல் தகவல். அந்த கொடூர வரண்ட உள்ளத்திற்குள் இவர்கள் இருவர் மீதும் ஏதோ ஒரு வகையில் மரியாதையும், ஈரமும் இருந்துள்ளது. எங்கள் அருகில் நின்ற அவரின் தோற்றமும், பேச்சும் எந்த வகையிலும் அவரின் கொடூர முகத்தைப் பிரதிபலிக்கவில்லை.

அடுத்து என்னருகில் வந்தவுடன் நானும், ஈகையரசன் அண்ணனும் திடீரென எங்களது கையை உயர்த்தினோம். அன்றாடம் எங்களை நலம் விசாரித்து கவனித்துக் கொள்ளும் சிறை அதிகாரிகள் முகத்தில் அதிர்ச்சி ரேகை ஓடியது. நான் ‘சார்! எங்களுக்கும் திரைப்படம் காண்பிக்க வேண்டும்’ என்றேன். ஈகை அண்ணனும் ஏதோ சொல்ல வந்தார். அதற்குள் வித்யாசாகர் ‘அலோ தெம்’ என்றார். அதாவது, இவர்களை அனுமதிக்கவும் என்று கூறினார். சிறை அதிகாரிகளுக்கு சற்று நிம்மதி அடைந்ததைக் காண முடிந்தது. தூய தமிழில் பேசுவதையே வழக்கமாக கொண்ட எங்களுக்குக் காவல்துறை, சிறைத்துறை அதிகாரிகளை ‘அய்யா’ என்ற அழைக்க மனம் வராது. அதில் ஏதோ அடிமைத்தனம் இருப்பதாக உணர்வோம். கீழ்நிலையில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரிகளை மூச்சுக்கு மூச்சு ‘அய்யா.. அய்யா’ என்று விளிப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

எங்களுக்கான திரைப்படம் பார்க்கும் நாளும் வந்தது. சிறைக்குள் பெரிய திரையரங்கம் ஒன்றைக் கட்டி வைத்துள்ளார்கள். சிறை நுழைவு வாயிலில் நுழைந்தவுடன் வலதுபுறம் சிறைவாசிகளுக்கான பிரத்தியோக திரையரங்கு உள்ளது. மாலை 6 மணிக்கு அடைப்புக் கணக்கு முடிந்து அனைவரும் பிளாக், செல்லில் அடைக்கப்பட்டவுடன், ஒவ்வொரு பிளாக், செல்லாக திறந்து அனைவரையும் எண்ணி வரிசையாக அனுப்புவார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சிறைவாசிகள் தப்பித்துச் செல்லும் சம்பவங்கள் நிறைய நடந்துள்ளதால் கடும் பாதுகாப்பு இருக்கும். எங்களின் வரிசைக்கு அருகிலேயே சிறைக் காவலர்களும் வரிசையாக நிற்பார்கள். வரிசை நத்தைப் போல் ஊர்ந்து பொறுமையாக நகர்ந்து, நகர்ந்து திரையரங்கை அடைய ஒரு மணிநேரம்கூட ஆகும்.

திரையரங்கை நெருங்கிக் கொண்டிருந்தோம். அப்போது அருகில் ஒரு நீண்ட நெடிய மதில் சுவறு கொண்ட மேற்கூரை இல்லாத அறைக்குள் ஒரு சிறிய கோயில் ஒன்று தென்பட்டது. அந்த அறை பெரிய இரும்புக் கதவுப் போட்டு பூட்டப்பட்டிருந்தது. அந்தக் கதவு வழியாக அந்த திறந்த வெளி அறைக்கு செல்ல நிறைய படிகள் அமைக்கப்பட்டிருந்தன. நீண்ட நேரம் நின்றுக் கொண்டே இருந்ததினால் எனக்கு சற்று கால் வலி ஏற்பட்டது. நான் அந்தப் படிக்கட்டுகளின் ஒன்றில் சற்று அமர்ந்தேன். இதை தூரத்தில் இருந்துக் கவனித்துக் கொண்டிருந்த எனக்கு நன்கு அறிமுகமான சிறைக்காவலர் ஒருவர் என்னை நோக்கி வேகமாக ஓடிவந்தார். என்னை மிகவும் கோபமாகவும், சொல்ல முடியாத வார்த்தைகளாலும் திட்டித் தீர்த்தார். ஒரு சமயத்தில் என்னை அடிக்கவும் முற்பட்டார். ஆனால், அடிக்கவில்லை.

சிறைவாசிகள் யாருக்கும் அந்த சிறைக் காவலரைப் பிடிக்காது. கடுமைக்குப் பெயர் பெற்றவர். சின்ன தவறுக்குக்கூட சிறைவாசிகளை அடிக்க தயங்கமாட்டார். எனக்கு சிறிய வயது என்பதாலும், எந்தத் தவறும் செய்யாத போதும் அவர் என்னிடம் நடத்துக் கொண்ட விதம் மிகவும் அவமானமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. சக தோழர்களுக்கும், பிற சிறைவாசிகளுக்குமே ஒன்றும் புரியவில்லை. என் கண்ணில் எவ்வளவு அடக்கியும் நீர் வழிந்து ஓடியது. என் அழுகையை நான் மறைக்க முயன்று தோல்வியுற்றேன்.

இந்த மன அழுத்தத்துடனே நான் திரையரங்கிற்குச் சென்றேன். அன்றைக்கு ‘அந்தமான் காதலி’ படம் திரையிட்டார்கள். சிவாஜி, சுஜாதா ஆகியோர் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்த படமது. எனக்குப் படம் பார்க்க மனம் ஒப்பவில்லை. எல்லோரும் ரசித்துப் படம் பார்த்துக் கொண்டிருக்கும் அவ்வேளையில் நான் மட்டும் அகமும், புறமும் அழுதுக் கொண்டே இருந்தேன். அந்தக் காவலர் நடந்துக் கொண்ட விதம் என்னை திரும்பத் திரும்ப நினைவில் வந்து அழுத்தியது. எப்போது படம் முடிந்து செல்லிற்கு செல்வோம் என்ற எண்ணத்திலேயே அமர்ந்திருந்தேன்.

மற்ற சிறைவாசிகள் எல்லாம் தரையில் அமர்ந்திருந்தனர். எங்களைத் தனிமையாக வைத்துப் பாதுக்காக்க வேண்டும் என்பதால், நாங்கள் மட்டும் பள்ளிக்கூட மர பெஞ்சு போன்ற பெஞ்சில் அமர்ந்துப் படம் பார்க்க வைக்கப்பட்டோம். டூரிங் தியேட்டரில் தரை டிக்கெட், பெஞ்ச் டிக்கெட் போல. திடீரெனெ படத்தை நிறுத்திவிட்டு விளக்கைப் போட்டுப் பார்ப்பார்கள். எங்களின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்று சரி பார்ப்பார்கள். ஒருவழியாக படம் முடிந்தது. நாங்கள் எங்களது செல்லிற்குத் திரும்பினோம். இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. சிறைக் கம்பியின் ஊடாக வெளியே மெல்லிய ‘குண்டு பல்ப்’ வெளிச்சத்தில் தெரியும் சிறைப் பகுதிகளின் நிழல் படிமங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டே கிடந்தேன். அழுகையும், அரைகுறை தூக்கமும் கலந்த அந்த இரவு என் வாழ்வில் மறக்க முடியாத சூது கவ்விய இரவு எனலாம்.

வழக்கம் போல் பொழுது விடிந்தது. தினம்தோறும் காலை 6 மணிக்கு கீழ்நிலை சிறை அதிகாரிகள் வந்து எங்களை எழுப்பி, கணக்கெடுத்துச் செல்வார்கள். அதாவது, நாங்கள் அனைவரும் உயிரோடு இருக்கிறோமா? என்று பார்த்துச் செல்வார்கள். வழக்கமாக வரும் அந்த அதிகாரியும், சிறைக் காவலர்களும் வந்து கணக்கெடுத்தார்கள். பின்னர், கதவுகளைத் திறந்து எங்களை காலைக்கடன் முடிக்கவும், குளிக்கவும் வெளியே அனுப்பினார்கள். அந்தக் குழுவில் நேற்று என்னிடம் மிக மோசமாக நடந்துக் கொண்ட சிறைக் காவலரும் இருந்தார். நான் அவசரம் அவசரமாக வெளியே வந்து நேற்று நடந்த சம்பவம் பற்றி அவரிடம் விளக்கம் கேட்டேன். அவர் அளித்த விளக்கம் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நான் என் கவலைகளை எல்லாம் மறந்து மகிழ்ச்சி அடைந்தேன். இவ்வளவு கடுமையாக நடந்துக் கொள்ளும் அந்த சிறைக் காவலருக்குள் இப்படி ஒரு மனிதாபிமானமா? நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எண்ணி எண்ணிப் பெருமைப்படும் அளவுக்கு அவர் மீது எனக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் மரியாதை கூடியது. அவர் எங்களுக்குள் மிகவும் உயர்ந்து நின்றார். எளிய மனிதர்களுக்குள் நல்ல குணங்கள் குடிக் கொண்டிருக்கும் என்பதற்கு அவரும் ஒரு நிதர்சமான சாட்சி.

அவர் சொன்ன விளக்கத்தை அப்படியே இங்குத் தருகிறேன். “தம்பி, நேத்து நான் நடந்துக் கொண்ட விதத்துக்கு நீங்க வருத்தப்பட்டிப்ருப்பீக. ஏன் எல்லாருமே வருத்தப்பட்டிருப்பீக. கொஞ்சம் வயசு தம்பி உங்களுக்கு. நீங்கள் எல்லாம் இன்னும் நிறைய வருசம் வாழனும். அந்த இடத்தில் உங்க கால் படக் கூடாது. அதான் கொஞ்ச கோவமா நடந்துகிட்டேன். போய்க் கால வேலைய முடிச்சி, குளிச்சி சாப்பிடுங்க தம்பி..” என்று கூறிவிட்டு சென்றார். அவரை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன். மெல்ல மெல்ல அந்த உருவம் என்னை விட்டு அகன்று மறைந்துச் சென்றது.

அவர் என் கால் படக் கூடாது என்று சொன்ன இடம், மரண தண்டனையை நிறைவேற்றும் “தூக்கு மேடை” இருக்கும் இடம் என்று தெரிந்த போது மனது கனத்தது. ஒப்புக்குகூட அந்த இடத்தில் எங்களைப் போன்றவர்களின் கால்கள் படக் கூடாது என்று நினைத்த, அந்த கடுமையான தோற்றம் கொண்ட மனதிற்குள் எத்தனை அழகானதொரு மனிதநேயம். சிறிய தப்புக்குக்கூட கடும் தண்டனை தரும் அந்த மனதிற்குள் மரண தண்டனைக்கு எதிரான உயரிய சிந்தனை. என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத சம்பவம் இது. அவர் மறக்க முடியாத உயிரும் கூட.  

அக்டோபர் 10: இன்று உலக மரண தண்டனை ஒழிப்பு நாள்…

Saturday, October 12, 2013

ஒரு சிறைக் காவலரும், மரண தண்டனை ஒழிப்பும்!

1988-ல் நானும், நண்பர்களும் கொடைக்கானல் தொலைக்காட்சி நிலைய வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை அரசரடியில் உள்ள நடுவண் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். அப்போது சிறைவாசிகளுக்கு 15 நட்களுக்கு ஒருமுறை திரைப்படம் காண்பிப்பார்கள். சிறைவாசிகளின் இறுக்கம் நிறைந்த வாழ்வு சற்று இலகும் தருணம் அவை. எங்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டிருந்தது.

மிசா காலத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த சிட்டி பாபு போன்றவர்களை கொன்றும், எண்ணற்றவர்களைத் அடித்து உதைத்துத் துன்புறுத்தியும் புகழ்ப் பெற்ற சிறை அதிகாரி வித்யாசாகர். அவர் அப்போது சிறைத்துறை ஐ.ஜி.யாக இருந்தார். அவர் தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பு. அவர் மதுரை சிறையைப் பார்வையிட வருவதாகவும், சிறைவாசிகளின் குறைகளைக் கேட்டறிவதாகவும் எங்களுக்கு தகவல் வந்தது.

நாங்கள் எப்போதுமே சிறை அதிகாரிகளின் நேரடிக் பார்வையிலுள்ள ஆறாம் பிளாக் செல்லில் அடைக்கப்படிருந்தோம். அதோடு மட்டுமல்லாமல், தீவிரவாதிகள் அல்லவா? ஆகையால், சிறை அதிகாரிகள் எங்களுக்கு முடிந்தவரை எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். இருந்தாலும், திரைப்படம் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை எங்களுக்குள் எழுந்து, நீண்ட விவாதம் நடந்தது. திரைப்படம் பார்க்க சிறை அதிகாரிகளிடம், அதுவும் கொடூரமான மனித உரிமை மீறலை நிகழ்த்திய அதிகாரியிடம் கேட்பதா என்ற மாபெரும் விவாதம். இதற்குப் புரட்சிகர பிம்பம் இக்கோரிக்கையை எழுப்ப பெரும் தடையாக இருந்தது. நானும், சில தோழர்களும் இக்கோரிக்கையை எழுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். பின்னர் ஒரு வழியாக கோரிக்கையை எழுப்புவது என்று முடிவுக்கு வந்தோம். இதில் ஆர்வமாக இருந்த என்னிடமே அந்தப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது.

அந்த நாளும் வந்தது. சிறை அதிகாரிகள் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டனர். சிறைவாசிகள் ஏதாவது குறை சொல்லிவிடக் கூடாது என்ற அச்சம்தான் அதற்குக் காரணம். சிறைவாசிகள் வரிசையாக தங்கள் பிளாக் மற்றும் செல்லின் முன் வந்து நிற்க வேண்டும். அதிகாரிகள் வரும் போது வலது கையை உயர்த்தி நீட்ட வேண்டும். அப்போது அதிகாரி நிற்பார். அச்சமயத்தில் அவரிடம் குறைகளைக் கூற வேண்டும். இதுதான் சிறை நடைமுறை. கையை நீட்டி குறை சொன்ன சிறைவாசிகளுக்கு அந்த அதிகாரி சென்றவுடன் கடும் தண்டனை விதிக்கப்படும். சிறை காவலர்கள் அடித்து துவைத்து விடுவார்கள். அவர்களுக்கு சிறை விதிகளை தளர்த்தி அளிக்கப்டும் பீடி, சிகரெட், இன்ன பிற நிறுத்தப்படும். அவரைப் பொருத்தவரையில் மட்டும் சிறை விதிகள் கடுமையாக பின்பற்றப்படும். இதனால், பெரும்பாலும் யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆயுள் தண்டனைச் சிறைவாசிகள் மட்டும் தங்களின் ‘ரெமிஷன்’ முன்விடுதலைக் குறித்து ஏதாவது கேட்பார்கள். மற்றபடி அந்த உயரதிகாரிகளின் வருகை ஒரு சடங்காகவே நடந்து முடியும். ஒழுங்காக ‘மாமூல்’ அளிக்காத சிறைகளுக்கே இதுபோன்ற உயரதிகாரிகள் வருகை இருக்கும் என்ற செய்தியும் உண்டு.

நாங்களும் எங்கள் செல்லின் முன்பு வரிசையாக நின்றிருந்தோம். சிறை அதிகாரிகளுக்கு எங்கள் மீது மரியாதை இருந்தாலும், ஒருபுறம் சந்தேகமும் எப்போதும் உண்டு. ஏதாவது சிக்கல் ஏற்படுத்திவிடுவார்கள் என்ற அச்சம்தான்.

அதிகாரிகள் புடைசூழ வித்யாசாகர் தூரத்தில் வருவதைப் பார்த்தோம். மிகக் கொடூரமான அதிகாரியை சந்திக்க நாங்களும் ஆவலுடன் இருந்தோம். எங்களுக்குப் பாதுகாப்புக்காக நிற்கும் சிறைக் காவலர்கள் கஞ்சிப் போட்டு தேய்த்த உடையின் மிடுக்குடன், மிகுந்த விரைப்புடன் நின்றிருந்தனர். மிக அருகில் வித்யாசாகர் வந்து எங்களிடம் நின்றார். வரிசையில் என்னருகில் நின்றிருந்த பொழிலனிடம் நலம் விசாரித்தார். ‘அப்பா (பாவலரேறு பெருஞ்சித்திரனார்) நலமாக இருக்கிறார்களா’ என்று கேட்டார். அவரும் பதில் அளித்தார். மிசாவில் சென்னை நடுவண் சிறையில் இருந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார், எம்.ஆர்.இராதா ஆகிய இருவர் மட்டுமே வித்யாசாகரின் தடிக்குத் தப்பியவர்கள் என்பது கூடுதல் தகவல். அந்த கொடூர வரண்ட உள்ளத்திற்குள் இவர்கள் இருவர் மீதும் ஏதோ ஒரு வகையில் மரியாதையும், ஈரமும் இருந்துள்ளது. எங்கள் அருகில் நின்ற அவரின் தோற்றமும், பேச்சும் எந்த வகையிலும் அவரின் கொடூர முகத்தைப் பிரதிபலிக்கவில்லை.

அடுத்து என்னருகில் வந்தவுடன் நானும், ஈகையரசன் அண்ணனும் திடீரென எங்களது கையை உயர்த்தினோம். அன்றாடம் எங்களை நலம் விசாரித்து கவனித்துக் கொள்ளும் சிறை அதிகாரிகள் முகத்தில் அதிர்ச்சி ரேகை ஓடியது. நான் ‘சார்! எங்களுக்கும் திரைப்படம் காண்பிக்க வேண்டும்’ என்றேன். ஈகை அண்ணனும் ஏதோ சொல்ல வந்தார். அதற்குள் வித்யாசாகர் ‘அலோ தெம்’ என்றார். அதாவது, இவர்களை அனுமதிக்கவும் என்று கூறினார். சிறை அதிகாரிகளுக்கு சற்று நிம்மதி அடைந்ததைக் காண முடிந்தது. தூய தமிழில் பேசுவதையே வழக்கமாக கொண்ட எங்களுக்குக் காவல்துறை, சிறைத்துறை அதிகாரிகளை ‘அய்யா’ என்ற அழைக்க மனம் வராது. அதில் ஏதோ அடிமைத்தனம் இருப்பதாக உணர்வோம். கீழ்நிலையில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரிகளை மூச்சுக்கு மூச்சு ‘அய்யா.. அய்யா’ என்று விளிப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

எங்களுக்கான திரைப்படம் பார்க்கும் நாளும் வந்தது. சிறைக்குள் பெரிய திரையரங்கம் ஒன்றைக் கட்டி வைத்துள்ளார்கள். சிறை நுழைவு வாயிலில் நுழைந்தவுடன் வலதுபுறம் சிறைவாசிகளுக்கான பிரத்தியோக திரையரங்கு உள்ளது. மாலை 6 மணிக்கு அடைப்புக் கணக்கு முடிந்து அனைவரும் பிளாக், செல்லில் அடைக்கப்பட்டவுடன், ஒவ்வொரு பிளாக், செல்லாக திறந்து அனைவரையும் எண்ணி வரிசையாக அனுப்புவார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சிறைவாசிகள் தப்பித்துச் செல்லும் சம்பவங்கள் நிறைய நடந்துள்ளதால் கடும் பாதுகாப்பு இருக்கும். எங்களின் வரிசைக்கு அருகிலேயே சிறைக் காவலர்களும் வரிசையாக நிற்பார்கள். வரிசை நத்தைப் போல் ஊர்ந்து பொறுமையாக நகர்ந்து, நகர்ந்து திரையரங்கை அடைய ஒரு மணிநேரம்கூட ஆகும்.

திரையரங்கை நெருங்கிக் கொண்டிருந்தோம். அப்போது அருகில் ஒரு நீண்ட நெடிய மதில் சுவறு கொண்ட மேற்கூரை இல்லாத அறைக்குள் ஒரு சிறிய கோயில் ஒன்று தென்பட்டது. அந்த அறை பெரிய இரும்புக் கதவுப் போட்டு பூட்டப்பட்டிருந்தது. அந்தக் கதவு வழியாக அந்த திறந்த வெளி அறைக்கு செல்ல நிறைய படிகள் அமைக்கப்பட்டிருந்தன. நீண்ட நேரம் நின்றுக் கொண்டே இருந்ததினால் எனக்கு சற்று கால் வலி ஏற்பட்டது. நான் அந்தப் படிக்கட்டுகளின் ஒன்றில் சற்று அமர்ந்தேன். இதை தூரத்தில் இருந்துக் கவனித்துக் கொண்டிருந்த எனக்கு நன்கு அறிமுகமான சிறைக்காவலர் ஒருவர் என்னை நோக்கி வேகமாக ஓடிவந்தார். என்னை மிகவும் கோபமாகவும், சொல்ல முடியாத வார்த்தைகளாலும் திட்டித் தீர்த்தார். ஒரு சமயத்தில் என்னை அடிக்கவும் முற்பட்டார். ஆனால், அடிக்கவில்லை.

சிறைவாசிகள் யாருக்கும் அந்த சிறைக் காவலரைப் பிடிக்காது. கடுமைக்குப் பெயர் பெற்றவர். சின்ன தவறுக்குக்கூட சிறைவாசிகளை அடிக்க தயங்கமாட்டார். எனக்கு சிறிய வயது என்பதாலும், எந்தத் தவறும் செய்யாத போதும் அவர் என்னிடம் நடத்துக் கொண்ட விதம் மிகவும் அவமானமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. சக தோழர்களுக்கும், பிற சிறைவாசிகளுக்குமே ஒன்றும் புரியவில்லை. என் கண்ணில் எவ்வளவு அடக்கியும் நீர் வழிந்து ஓடியது. என் அழுகையை நான் மறைக்க முயன்று தோல்வியுற்றேன்.

இந்த மன அழுத்தத்துடனே நான் திரையரங்கிற்குச் சென்றேன். அன்றைக்கு ‘அந்தமான் காதலி’ படம் திரையிட்டார்கள். சிவாஜி, சுஜாதா ஆகியோர் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்த படமது. எனக்குப் படம் பார்க்க மனம் ஒப்பவில்லை. எல்லோரும் ரசித்துப் படம் பார்த்துக் கொண்டிருக்கும் அவ்வேளையில் நான் மட்டும் அகமும், புறமும் அழுதுக் கொண்டே இருந்தேன். அந்தக் காவலர் நடந்துக் கொண்ட விதம் என்னை திரும்பத் திரும்ப நினைவில் வந்து அழுத்தியது. எப்போது படம் முடிந்து செல்லிற்கு செல்வோம் என்ற எண்ணத்திலேயே அமர்ந்திருந்தேன்.

மற்ற சிறைவாசிகள் எல்லாம் தரையில் அமர்ந்திருந்தனர். எங்களைத் தனிமையாக வைத்துப் பாதுக்காக்க வேண்டும் என்பதால், நாங்கள் மட்டும் பள்ளிக்கூட மர பெஞ்சு போன்ற பெஞ்சில் அமர்ந்துப் படம் பார்க்க வைக்கப்பட்டோம். டூரிங் தியேட்டரில் தரை டிக்கெட், பெஞ்ச் டிக்கெட் போல. திடீரெனெ படத்தை நிறுத்திவிட்டு விளக்கைப் போட்டுப் பார்ப்பார்கள். எங்களின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்று சரி பார்ப்பார்கள். ஒருவழியாக படம் முடிந்தது. நாங்கள் எங்களது செல்லிற்குத் திரும்பினோம். இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. சிறைக் கம்பியின் ஊடாக வெளியே மெல்லிய ‘குண்டு பல்ப்’ வெளிச்சத்தில் தெரியும் சிறைப் பகுதிகளின் நிழல் படிமங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டே கிடந்தேன். அழுகையும், அரைகுறை தூக்கமும் கலந்த அந்த இரவு என் வாழ்வில் மறக்க முடியாத சூது கவ்விய இரவு எனலாம்.

வழக்கம் போல் பொழுது விடிந்தது. தினம்தோறும் காலை 6 மணிக்கு கீழ்நிலை சிறை அதிகாரிகள் வந்து எங்களை எழுப்பி, கணக்கெடுத்துச் செல்வார்கள். அதாவது, நாங்கள் அனைவரும் உயிரோடு இருக்கிறோமா? என்று பார்த்துச் செல்வார்கள். வழக்கமாக வரும் அந்த அதிகாரியும், சிறைக் காவலர்களும் வந்து கணக்கெடுத்தார்கள். பின்னர், கதவுகளைத் திறந்து எங்களை காலைக்கடன் முடிக்கவும், குளிக்கவும் வெளியே அனுப்பினார்கள். அந்தக் குழுவில் நேற்று என்னிடம் மிக மோசமாக நடந்துக் கொண்ட சிறைக் காவலரும் இருந்தார். நான் அவசரம் அவசரமாக வெளியே வந்து நேற்று நடந்த சம்பவம் பற்றி அவரிடம் விளக்கம் கேட்டேன். அவர் அளித்த விளக்கம் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நான் என் கவலைகளை எல்லாம் மறந்து மகிழ்ச்சி அடைந்தேன். இவ்வளவு கடுமையாக நடந்துக் கொள்ளும் அந்த சிறைக் காவலருக்குள் இப்படி ஒரு மனிதாபிமானமா? நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எண்ணி எண்ணிப் பெருமைப்படும் அளவுக்கு அவர் மீது எனக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் மரியாதை கூடியது. அவர் எங்களுக்குள் மிகவும் உயர்ந்து நின்றார். எளிய மனிதர்களுக்குள் நல்ல குணங்கள் குடிக் கொண்டிருக்கும் என்பதற்கு அவரும் ஒரு நிதர்சமான சாட்சி.

அவர் சொன்ன விளக்கத்தை அப்படியே இங்குத் தருகிறேன். “தம்பி, நேத்து நான் நடந்துக் கொண்ட விதத்துக்கு நீங்க வருத்தப்பட்டிப்ருப்பீக. ஏன் எல்லாருமே வருத்தப்பட்டிருப்பீக. கொஞ்சம் வயசு தம்பி உங்களுக்கு. நீங்கள் எல்லாம் இன்னும் நிறைய வருசம் வாழனும். அந்த இடத்தில் உங்க கால் படக் கூடாது. அதான் கொஞ்ச கோவமா நடந்துகிட்டேன். போய்க் கால வேலைய முடிச்சி, குளிச்சி சாப்பிடுங்க தம்பி..” என்று கூறிவிட்டு சென்றார். அவரை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன். மெல்ல மெல்ல அந்த உருவம் என்னை விட்டு அகன்று மறைந்துச் சென்றது.

அவர் என் கால் படக் கூடாது என்று சொன்ன இடம், மரண தண்டனையை நிறைவேற்றும் “தூக்கு மேடை” இருக்கும் இடம் என்று தெரிந்த போது மனது கனத்தது. ஒப்புக்குகூட அந்த இடத்தில் எங்களைப் போன்றவர்களின் கால்கள் படக் கூடாது என்று நினைத்த, அந்த கடுமையான தோற்றம் கொண்ட மனதிற்குள் எத்தனை அழகானதொரு மனிதநேயம். சிறிய தப்புக்குக்கூட கடும் தண்டனை தரும் அந்த மனதிற்குள் மரண தண்டனைக்கு எதிரான உயரிய சிந்தனை. என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத சம்பவம் இது. அவர் மறக்க முடியாத உயிரும் கூட.                                                                  

இன்று உலக மரண தண்டனை ஒழிப்பு நாள்…  

Monday, August 22, 2011

ராஜீவ் கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைக்க வலியுறுத்தல்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 21.08.2011 அன்று காலை 10 மணியளவில் புதுச்சேரி ரெவே சொசியால் சங்கத்தில் கட்சி மற்றும் சமூக அமைப்புகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, ம. சிங்காரவேலர் முன்னேற்ற கழகத் தலைவர் கோ.செ.சந்திரன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் உ.முத்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் எம்.ஏ.அஷ்ரப் (எ) ரகமத்துல்லா, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முகம்மது சலீம், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, மக்கள் சிவில் உரிமைக் கழக இணைச் செயலாளர் ஜா.பாஸ்கரன், செம்படுகை நன்னீரகம் தலைவர் கு.இராம்மூர்த்தி, இலக்கிய பொழில் இலக்கிய மன்ற தலைவர் பெ.பராங்குசம், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் அபுபக்கர், பூவுலகின் நண்பர்கள் தலைவர் சீனு. தமிழ்மணி, மக்கள் ஜன்சக்தி இயக்கத் தலைவர் புரட்சிவேந்தன், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவை தமிழ்நெஞ்சன், அத்தியப்பா கெமிக்கல்ஸ் தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் சூ.சின்னப்பா, கிராமப்புற கல்வி, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் மேபாட்டுக் கழகத் தலைவர் மு.மஞ்சினி, தமிழர் களம் பொறுப்பாளர் கோ.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்துவிட்ட நிலையில் தூக்குத் தண்டனயை எதிர்நொக்கி உள்ள ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் மற்றும் பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தண்டனைப் பெற்று சிறையிலுள்ள அப்சல் குரு உள்ளிட்ட அனைவரின் மரண தண்டனையையும் ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணை இன்னமும் முற்றுப் பெறாத நிலையில் அவ்வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கிலிடுவது இயற்கை நீதிக்கு எதிரானது என்பதோடு, ஒருவேளை இவ்விசாரணையில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் தூக்கிலிடப்பட்டவர்களின் உயிர்கள் திரும்பவும் வராது என்பதாலும் மரண தண்டனையை ரத்து செய்வது அவசியம் என்பதை இக்கூட்டம் சுட்டிக்காட்டுகிறது.

குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்து விட்ட பின்னரும் கூட 1957-ல் கேரளத்தில் கம்யூனிஸ்ட் தலைவர் சி.ஏ. பாலன், தமிழகத்தில் 1974-ல் நக்சலைட் தலைவர் புலவர் கலியபெருமாள் ஆகியோரது மரண தண்டனை கேரள மற்றும் தமிழக அரசுகளின் முயற்சியால் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, இவற்றை முன்னுதாரணமாக கொண்டு பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

மரண தண்டனை விதிக்கப்பட்டு இரண்டு ஆண்டு காலத்திற்கும் மேலாக அது நிறைவேற்றப்படாததால் ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் அந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல் ஜியான்சிங் எதிர் பஞ்சாப், டி.வி. வேதீஸ்வரன் எதிர் தமிழ்நாடு, தாயாசிங் எதிர் இந்திய அரசு போன்ற வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பல ஆண்டுகள் கழிந்தும் அது நிறைவேற்றப்படாததால் அத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையிலும், பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்டோர் 20 ஆண்டு காலம் சிறையில் உள்ளதாலும் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதில் சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை என்பதை இக்கூட்டம் சுட்டிக்கட்டுகிறது.

சர்வ தேச மனித உரிமை அமைப்பான “ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்” கணக்குப்படி உலக அளவில் 139 நாடுகள் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழித்துள்ளன. இந்தியா உள்ளிட்ட 58 நாடுகள் மரண தண்டனையை நடைமுறையில் வைத்துள்ளன. எனவே, இந்திய அரசு மனித உரிமைக்கு எதிரான மரண தண்டனையை சட்ட புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27.08.2011 சனிக்கிழமை காலை 10 மணியளவில் புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

Saturday, November 18, 2006

மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை

மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்பதை மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி மரண தண்டனை ஒழிப்பை வலியுறுத்தி வருகின்றனர். இதற்குச் சான்றாக “மக்கள் கண்காணிப்பகம்“ சார்பில் வெளிவரும் “மனித உரிமைக் கங்காணி“ இதழ் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

கனடாவில் 1975-ஆம் ஆண்டு வரை மரண தண்டனை முறை இருந்தது. ஆனால், அப்போது 1 லட்சம் பேர்களுக்கு 3.09 நபர்கள் வீதம் கொலை மரணங்கள் இருந்தன. அதற்கு அடுத்த ஆண்டு அந்நாட்டில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது. அதன் பின்னர், 2003-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கொலை மரணங்கள் 1.73 ஆகக் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது.

2000-ஆவது ஆண்டு “நியூயார்க் டைம்ஸ்“ நடத்திய கணிப்பின்படி மரண தண்டனை ஒழிக்கப்பட்ட பகுதிகளைவிட மரண தண்டனை செயலிலிருக்கும் பகுதிகளில் 48 முதல் 101 விழுக்காடுவரை கொலை மரணங்கள் அதிகமாக உள்ளன.

அமெரிக்காவில் நடக்கும் கொலை மரணங்களின் எண்ணிக்கை மரண தண்டனை ஒழிக்கப்பட்ட ஐரோப்பாவைவிட நான்கு மடங்கு அதிகமாக உள்ளன.

1988 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் ஐ.நா. அவையால் நடத்தப்பட்ட அறிவியல் பூர்வமான ஆய்வுகளும் மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்பதையே காட்டுகின்றன.

இந்தியாவில் இதுவரையில்...

சுதந்திரத்துக்குப் பின் தூக்கிலிடப்பட்டவர்கள் : 55 பேர்.

முதன்முதலில் தூக்கிலிடப்பட்டவர் : நாதுராம் கோட்சே (காந்தியாரைச் சுட்டுக் கொன்றவர்).

கடைசியாக தூக்கிலிடப்பட்டவர் : தனஞ்சய் சாட்டர்ஜி (மேற்கு வங்கம்).

மரண தண்டனையைக் குறைக்கக் கேட்டு குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்துக் காத்திருப்பவர்கள் : 21 பேர்.

2003-ஆம் ஆண்டு சிறைத்துறைப் புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் மொத்தம் 333 கைதிகள் மரண தண்டனையை எதிர்நோக்கி சிறையில் வாடுகின்றனர்.

நவம்பர் 2006 கணக்குப்படி கடந்த 9 மாதங்களில் 32 வழக்குகளில் மரண தண்டனை பெற்றவர்கள் : 56 பேர்.

Thursday, November 16, 2006

புதுச்சேரியில் மரண தண்டனை ஒழிப்பு ஆர்ப்பாட்டம்


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 15-11-2006 அன்று காலை 10 மணியளவில், புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில், மரண தண்டனை ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் தலைமை தாங்கினார். மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் இர.அபிமன்னன் தொடக்கவுரை ஆற்றினார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, இராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தி.சஞ்சீவி, செம்படுகை நன்னீரகம் அமைப்பின் தலைவர் கு.இராம்மூர்த்தி, அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிலாளர் நலச் சங்கச் செயலாளர் ம.சந்திரகுமார், சமூக நீதிப் போராட்டக் குழு சார்பில் அ.ஜோதிபிரகாசம், அ.மஞ்சினி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

மரண தண்டனை ஒழிப்பை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான துண்டறிக்கைகள் அச்சிட்டு விநியோகிக்கப்பட்டன. நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பத்திரிகைகளும் ஊடகங்களும் உரிய முக்கியத்துவம் கொடுத்து ஆர்ப்பாட்ட செய்தியை வெளிப்படுத்தியுள்ளன.


• பாராளுமன்ற தாக்குதல் வழக்கில், முறையற்ற விசாரணையின் முடிவில், காஷ்மீரைச் சேர்ந்த முகமது அப்சல் குருவிற்கு வழங்கப்பட்ள்ள மரண தண்டனையைக் குறைக்க, குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• அமெரிக்க வல்லரசின் “பொம்மை நீதிமன்றம்“ ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு வழங்கியுள்ள மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.
• இந்திய சிறைகளில் மரண தண்டனையை எதிர்நோக்கி வாடும் 300-க்கும் மேற்பட்டவர்களின் மரண தண்டனையை ரத்து செய்ய இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• உலக அளவில் இதுவரையில் 128 நாடுகள் மரண தண்டனையை ஒழித்துள்ளன. இதனைப் பின்பற்றி இந்திய அரசும் மரண தண்டனையை முற்றிலுமாக நீக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

முகமது அப்சல் குருவைத் தூக்கிலிட வேண்டுமெனப் போராட்டம் நடத்தி வரும் இந்துத்துவ அமைப்புகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரியில் நடைபெற்று வரும் மரண தண்டனை ஒழிப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்த ஆர்ப்பாட்டம் விளங்கியது. காந்தியாரைக் கொன்ற நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளான நவம்பர் 15-இல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தற்செயலான ஒன்று.

Tuesday, November 14, 2006

மரண தண்டனையைக் கண்டித்துப் போராட்டம்

இந்திய பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் முகமது அப்சல் குரு, பாக்தாத் நீதிமன்றத்தால் ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையைக் குறைக்கக் கோரி புதுச்சேரியில் போராட்டம் நடத்தப்படும் என மனித உரிமை மக்கள் இயக்க அமைப்பாளர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

8-11-2006 அன்று புதுச்சேரியில் செய்தியாளர் மன்றத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:

மரண தண்டனை ஜனநாயகத்திற்கு எதிரானது. காட்டுமிராண்டித்தனமானது. மரண தண்டனையை ஒழிக்க இந்தியா முழுவதும் குரல் எழும்பி வருகிறது. தொடர்ச்சியானப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்ட போது தமிழகத்தில் மிகப் பெரிய போராட்டம் நடத்தினோம். உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சில வழக்குகளில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2001-இல் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முகமது அப்சலுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என்றும், இந்த தண்டனை அநீதி என்றும் மிகப் பெரிய இயக்கம் நடைபெற்று வருகிறது.

இதேபோல், ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கும் முறையாக விசாரிக்கப்படவில்லை என உலக நாடுகள் கூறியுள்ளன. இறையாண்மை உள்ள நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, ஆக்கிரமித்துக் கொண்டு, பொம்மை நீதிமன்றத்தை வைத்து, சதாம் உசேனுக்காக வாதாடிய வழக்கறிஞர்களைக் கொலை செய்து, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 7-ஆம் நாளன்று அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலையொட்டி புஷ்சுக்கு ஆதரவாக அவசர அவசரமாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி கொலை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையைக் குறைக்க வேண்டுமெனப் போராடிய போது, அதற்கு எதிராக யாரும் போராடவில்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென சோனியாகாந்தி கேட்டுக் கொண்டதன்பேரில் நளினியின் மரண தண்டனைக் குறைக்கப்பட்டது.

இன்று பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும், வகுப்புவாதத்தை உருவாக்கி வாக்குகள் சேகரிக்கும் கட்சியினர், அப்சல் முசுலீம் என்பதால் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்கிறார்கள். இதன்மூலம் முசுலீம் சமுதாயத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுபோன்ற செயல் சமூகத்தைப் பிளவுபடுத்தும்.

நாடாளுமன்றத்தைத் தாக்கியது கடும் குற்றச்சாட்டு. அதை முறையாக விசாரிக்க வேண்டும். இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பேர் கொல்லப்பட்டனர். போலீஸ் கூற்றுபடி சதித் திட்டம் தீட்டிய மூன்று பேர் பாகிஸ்தானில் மகிழ்ச்சியாக உள்ளனர். யாரையாவது பிடித்து தூக்கிலிட வேண்டும் என்பதற்காக நான்கு பேரைச் சிக்க வைத்தனர். இவர்களுக்கு கீழ்நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. உச்சநீதிமன்றம் அப்சலுக்கு மட்டும் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. மற்றவர்களுக்கு தண்டனையைக் குறைத்தது. உச்சநீதிமன்றமே இந்த வழக்கில் நேரடி சாட்சி இல்லை என்றும், இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மக்கள் மத்தியில் உணர்ச்சியைத் தூண்டியுள்ளது எனக் கூறி தூக்குத் தண்டனை வழங்கலாம் என கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.

நாடாளுமன்ற தாக்குதல் மத்திய அரசும், உளவுத் துறையும் சேர்ந்து நடத்திய நாடகமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அப்சல் பழைய தீவிரவாதி. அதிலிருந்து விலகி போலீசிடம் சரணடைந்தவர். போலீசார் அவரைக் கையாளாகப் பயன்படுத்திக் கொண்டனர். அப்சல் போலீசின் கட்டளைப்படி, இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட முக்கிய குற்றவாளி ஒருவரை காஷ்மீரில் இருந்து டில்லிக்கு அழைத்துச் சென்று, அவருக்கு வீடுபிடித்துக் கொடுத்துள்ளார். மேலும், போலீசின் வற்புறுத்தலின் பேரில் அந்த குற்றவாளிக்கு ஒரு கார் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த கார்தான் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் அப்சலின் வழக்கைப் பார்க்க வேண்டும்.

எனவே, அப்சல் குரு, சதாம் உசேன் ஆகியோரின் மரண தண்டனையைக் குறைக்க வேண்டும். இந்திய சிறைகளில் உள்ள அனைவரின் மரண தண்டனையைக் குறைக்க வேண்டும். உலக அளவில் 128 நாடுகளில் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசும் மரண தண்டனையைக் கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியிலும் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

பேட்டியின் போது, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, இராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தி.சஞ்சீவி, மக்கள் சிவில் உரிமைக் கழகத் துணைத் தலைவர் இர.அபிமன்னன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Monday, November 13, 2006

மரண தண்டனை ஒழிப்புக்கு வலுசேர்க்கும் நூல்

அப்சலின் மரண தண்டனையைக் குறைக்கப் போராடிக் கொண்டிருக்கும் தில்லியைச் சேர்ந்த “Society for Protection of Detenues and Prisoners Rights (SPDPR)“ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள “முகமது அப்சல் குரு தூக்கிலிடப்படத்தான் வேண்டுமா?“ என்ற புத்தகத்தைத் தமிழில் பேராசிரியர் அ.மார்க்ஸ் மொழிபெயர்த்துள்ளார். தமிழில் முக்கிய பல நூல்களை வெளியிட்டுள்ள “கருப்புப் பிரதிகள்“ பதிப்பகம் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

8-11-2006 அன்று புதுச்சேரி செய்தியாளர்கள் மன்றத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, இப்புத்தகத்தை செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி வெளியிட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி பெற்றுக் கொண்டார். பேராசிரியர் அ.மார்க்ஸ் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, இராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தி.சஞ்சீவி, மக்கள் சிவில் உரிமைக் கழகத் துணைத் தலைவர் இர.அபிமன்னன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் போலீஸ் திட்டமிட்டுப் புனைந்த குற்றச்சாட்டுகள், விசாரணையில் நடைபெற்ற குளறுபடிகள், வழக்கறிஞர்கள் செய்த துரோகம், ஊடகங்கள் ஏற்படுத்திய பரபரப்பானப் பொய்க் கதைகள், குற்றஞ்சாட்டப்பட்டவரின் நியாயத்தைக் காது கொடுத்துக் கேட்காத நீதிமன்றங்கள்...என இழைக்கப்பட்ட “தொடர் அநீதி“யின் விளைவுதான் அப்சலுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை என்பதை ஆதாரத்துடன் முன் வைக்கிறது இந்நூல்.

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் மரண தண்டனை ஒழிப்புப் போராட்டத்திற்கு இந்நூல் மேலும் வலுசேர்க்கும் என்பதில் அய்யமில்லை.

“முகமது அப்சல் குரு தூக்கிலிடப்படத்தான் வேண்டுமா?“

முன்னுரையும் மொழிபெயர்ப்பும் : அ.மார்க்ஸ்
முதற் பதிப்பு : நவம்பர் 2006.
பக்கம் : 64. விலை : ரூ.25.00.
முகவரி : 45-அ, இஸ்மாயில் மைதானம்,
லாயிட்ஸ் சாலை, சென்னை – 600 005.
செல் : 94442 72500.
மின்னஞ்சல் : karuppu2004@rediff.com.

Tuesday, October 17, 2006

அப்சலின் மரண தண்டனையை குறைக்க வேண்டும்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் கோ.சுகுமாரன்,13.10.2006 அன்று புதுச்சேரியில் வெளியிட்ட அறிக்கை.

பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் காஷ்மீரைச் சேர்ந்த முகமது அப்சல் குருவிற்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையைக் குறைக்க குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

உலக அளவில் இதுவரையில் 127 நாடுகள் மரண தண்டனையை ஒழித்துள்ளன. அண்மையில்கூட பிலிப்பைன்ஸ் மரண தண்டனையைக் கைவிட்டுள்ளது. இந்தியா மரண தண்டனையை முற்றிலுமாக நீக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் பலகாலமாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில், பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சலுக்கு மரண தண்டனையை உறுதி செய்திருப்பதன் மூலம் உச்சநீதிமன்றம் மனித உரிமைகளைக் காப்பதில் போதிய அக்கறை செலுத்தவில்லை என்பதையே காட்டுகிறது.

அப்சல் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி கீழ்நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை முறையாக விசாரிக்கவில்லை என அவரது குடும்பத்தினரும் அவருக்காக வாதாடிய வழக்கறிஞர்களும் குடியரசுத் தலைவருக்கு அளித்துள்ள கருணை மனுவில் குறிப்பிட்டுள்ளனர். “ஒட்டுமொத்த வழக்கும் தவறான சாட்சியங்கள், திரிக்கப்பட்ட கதைகள் நிறைந்தது” என பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மரண தண்டனை வழங்குவதனால் குற்றங்கள் குறைகிறது என்பது நிரூபிக்கப்படவில்லை. மேலும், குற்றவாளிகள் திருந்துவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. உயிரைப் பறிக்கும் அதிகாரம் அரசுக்கும் நீதித்துறைக்கும் கூடாது. மரண தண்டனை மனித உரிமைகளுக்கு எதிரானது.

இந்திய சிறைகளில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் 50-க்கும் மேற்பட்டவர்களின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் நிலுவையில் உள்ளதாக அறிகிறோம். நிலுவையில் உள்ள அனைவரின் கருணை மனுக்களையும் ஏற்று, மரண தண்டனையைக் குறைக்க, குடியரசுத் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

இது குறித்து, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 7.10.2006 அன்று தில்லியில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அகிம்சையை வலியுறுத்திய காந்தி பிறந்த மண்ணில், மரண தண்டனையை முற்றிலுமாக நீக்க வேண்டுமென இந்திய அரசை வலியுறுத்துகிறோம்.

Friday, May 12, 2006

மரண தண்டனை - நீதியை நிலைநிறுத்தும் கொலை

மரணம் மதிப்புடையதாக இருக்க வேண்டும். தீர்மானிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் மரணமே கொலை. நீதியை நிலைநாட்ட, அரசும் நீதி அமைப்புகளும் செய்யும் கொலையை, ‘மரண தண்டனை' என்கிறது இந்திய அரசியல் சாசனம். எந்த உயிரையும் பறிக்கும் அதிகாரம், அரசுக்கும் நீதி அமைப்புகளுக்கும் கூடாது என்பதே மனித உரிமையின் அடிப்படை. காட்டுமிராண்டிக் காலத்தில் நிலவிய ‘பழிக்குப் பழி' தற்பொழுதும் பின்பற்றப்படுவது மனித நேயத்தைக் குழிதோண்டிப் புதைக்கிறது.சமூகச் சூழ்நிலையில் நிகழ்த்தப்பட்ட ஒரு குற்றத்திற்காக, சிறைக் கொட்டடியில் சட்டப்பூர்வமாக இன்னொரு குற்றம் நிகழ்வதை ஏற்க முடியாது. மரணத்தை எதிர்கொண்டே வாழும் சமூகத்திற்கு, மரணத்தை தண்டனையாக வழங்குவது ஒழிக்கப்பட வேண்டும்.


"மரண தண்டனைக் கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதைவிட, அவர்களுக்கு மிகுந்த அன்பான ஈடுபாட்டுடன் ஆன்மீக வழிகாட்டுதலின்படி நல்வழிப்படுத்தலாம். மரண தண்டனைக் கைதிகளில் ஒருவருக்கு 75 வயதாகிறது. இனி அவர் விடுதலையானால், எவ்விதக் குற்றச் செயல்களிலும் அவர் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே, இதுபோன்ற கைதிகளை சுமையாகக் கருதாமல், மனிதச் சொத்தாகக் கருதி நல்வழிப்படுத்த அரசு முயல வேண்டும்.இதுபோன்ற கைதிகள், இனி இந்த உலகில் வாழும் எஞ்சிய நாட்களைத் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும். முடிந்தவரை, பெரும்பாலானோர் விஷயத்தில் இதைக் கடைப்பிடித்து சீர்திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும்".குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் இவ்வாறு கூறியிருப்பது, நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் மரண தண்டனை ஒழிப்புப் போராட்டத்திற்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. உலக அளவில் மரண தண்டனை ஒழிப்புக்கு ஆதரவு பெருகிவரும் இவ்வேளையில், ‘அகிம்சை'யை இடையறாது வலியுறுத்தும் இந்தியா போன்ற நாடுகள் இத்தண்டனையை நீக்காமல் வைத்திருப்பது நேர்முரணானது.

அண்மையில்கூட, தென்ஆப்பிரிக்க அரசியல் சாசன நீதிமன்றம் மரண தண்டனையை சட்ட விரோதம் என அறிவித்துள்ளது. பதினோரு நீதிபதிகள் ஒருமித்து வழங்கிய இத்தீர்ப்பினால், இருபது ஆண்டு காலமாகச் சிறையில் வாடும் 453 பேர் உயிர் தப்பியுள்ளனர். மரண தண்டனை வழங்குவது, மனித நாகரீகத்திற்கு எதிரானது; இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமைக்கு முரணானது. மரண தண்டனை வழங்குவதன் மூலம் குற்றங்கள் குறையும் என்பதும், இது குற்றம் செய்பவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதும் நிரூபிக்கப்படவில்லை. உலக அளவில் நடைபெற்ற பல்வேறு ஆய்வுகள் இதனை உறுதி செய்துள்ளன. "எங்களைப் பொறுத்தவரையில், மரண தண்டனை வழங்குவதன் மூலம் குற்றங்கள் குறைவதில்லை. இதுபற்றி விரிவாக, ஆழமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என இந்திய சட்ட ஆணையத்தின் 35 ஆவது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மரண தண்டனைக்கு எதிரான உணர்வு, கற்றுத் தேர்ந்த நீதிபதிகளிடம் இருந்தது என்பதற்கு 1950இல் நடந்த இந்நிகழ்வே சான்று. மும்பையில் மாவட்ட நீதிபதியாக இருந்த காரேகாட்டுக்கு உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அப்போதெல்லாம் உயர் நீதிமன்ற நீதிபதிகள்தான் மரண தண்டனை வழங்க முடியும்.

உயர் நீதிமன்ற நீதிபதி பதவியை ஏற்றுக் கொண்டால், தான் மரண தண்டனை வழங்க நேரிடும் என அப்பதவியை உதறித் தள்ளினார் காரேகாட். ஆனால், இன்றைய நீதிபதிகளின் நிலையோ வெட்கக் கேடானது."எப்போதும் ஏழைதான், ஏமாளிதான், நீக்ரோதான், கறுப்பு மனிதன்தான் தூக்கிலிடப்படுகிறான். பணம் படைத்தவன், வெள்ளைக்காரன் தப்பித்துக் கொள்கிறான். இந்தப் பாகுபாட்டை நம்மால் சகித்துக் கொள்ள முடியாது'' என அமெரிக்க கருப்பின நீதிபதி மார்ஷல் கூறியுள்ளது, மரண தண்டனை வழங்கப்படுவதன் சமூக பொருளாதாரப் பின்னணியை விளக்குகிறது.1981இல் ஒரே வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், தனித்தனியே மேல்முறையீடு செய்ததில் அளிக்கப்பட்ட தண்டனைகள், மரண தண்டனை வழங்குவதை கேள்விக்குள்ளாக்குகின்றன. ஒரு குடும்பத்தினரை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்ற ஜீட்டா சிங், கஷ்மீரா சிங், அர்பன் சிங் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியே மேல்முறையீடு செய்துள்ளனர். ஜீட்டா சிங்கின் வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தனர். அவர் தூக்கிலிடப்பட்டார். கஷ்மீரா சிங்கின் வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை வழங்கினர். அர்பன் சிங்கின் வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேற்சொன்ன தீர்ப்புகளை அறிந்த பின்னர் அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை குறைக்கப்பட வேண்டுமென்பதற்காக, குடியரசுத் தலைவருக்கு அவரது கருணை மனுவை அனுப்பி வைத்தனர்.

"மரண தண்டனை வழங்கப்படுவதற்கான சிறப்புக் காரணங்கள் என்பது ஒவ்வொரு நீதிபதியைப் பொறுத்தும், அவர் கொண்டிருக்கும் மதிப்பீடுகளைப் பொறுத்தும், சமூக நீதி குறித்து அவர் வைத்திருக்கும் கருத்தைப் பொறுத்தும் மாறுபட்டே தீரும்'' என பச்சன் சிங் வழக்கில், மரண தண்டனை குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மாறுபட்டு கருத்துரைத்த நீதிபதிகள் கூறியுள்ளது, இங்கு மிகவும் பொறுத்தப்பாடுடையது. இதுபோன்ற தீர்ப்புகள் வழங்கப்படுவது, "சமூக அரசியல் அதிகாரம் அற்றவர்கள் மட்டுந்தான் மரண தண்டனை பெறுகின்றனர்'' என மனித உரிமை ஆர்வலர் டாக்டர் பாலகோபால் போன்றவர்கள் கூறுவதற்கு அணி சேர்க்கிறது.அக்டோபர் 10: உலக மரண தண்டனை எதிர்ப்பு நாளையொட்டி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள், இந்தியாவில் பல்வேறு சிறைகளில் தூக்குக் கயிறை எதிர்நோக்கி நாள்தோறும் செத்துக் கொண்டிருக்கும் 50 பேருக்கு மரண தண்டனையை ரத்து செய்து, மன்னிப்பு வழங்கலாம் என அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய அரசியல் சாசனப் பிரிவு 72 இன்படி, மரண தண்டனை அளிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களைப் பரிசீலனை செய்து முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் அமைச்சரவை விவாதித்து எடுக்கும் முடிவின் பரிந்துரையின் பேரிலேயே குடியரசுத் தலைவர் முடிவெடுக்க முடியும். இந்தியா முழுவதும் இருந்து மரண தண்டனை பெற்றவர்கள் 50 பேரின் கருணை மனுக்களைப் பரிசீலித்து, அவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கலாம் என குடியரசுத் தலைவர் முடிவெடுத்து, உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார். ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத உள்துறை அமைச்சகம், இந்த 50 பேரில் 20 பேர் கொடிய குற்றம் புரிந்தவர்கள் என்று கூறி, அவர்கள் தண்டனையைக் குறைக்கக் கூடாது எனக் கூறியுள்ளது. "இந்தியா மரண தண்டனையை ஒழிக்க வேண்டுமென' உலக நாடுகள் வலியுறுத்தி வரும் இச்சூழலில், மத்திய அரசு இப்படியொரு முடிவை எடுத்திருப்பது, மனித உரிமைக்கு எதிராக இந்திய அரசு செயல்படுவதையே வெளிப்படுத்துகிறது. இந்திய அரசின் இப்போக்கு, கடும் கண்டனத்திற்குரியது.இதில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன்; வீரப்பன் தொடர்புடைய வழக்கில் சைமன், பிலவேந்திரன், ஞானபிரகாஷ், மாதய்யன்; இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த பிட்டாவைக் கொல்ல முயன்ற வழக்கில் தவீந்தர் சிங் புல்லர் உட்பட 20 பேர் அடங்குவதாக உள்துறை அமைச்சகம் கூறுகிறது. பச்சின் சிங் வழக்கில் "அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்க வேண்டும்'' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த மூன்று வழக்குகளுமே ‘அரிதிலும் அரிதான வழக்குகள்' எனக் கருத முடியாது என சட்ட வல்லுநர்கள் கூறியிருப்பது நினைவுகூரத்தக்கது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் காலாவதியான ‘தடா' சட்டத்தின்படி, காவல் துறை அதிகாரிகளால் கட்டாயமாகப் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் அப்படியே சாட்சியமாக எடுத்துக் கொள்ளப்பட்டதன் அடிப்படையிலேயே பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை வழங்கி ‘சாதனை' புரிந்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் 19 பேரை விடுதலை செய்ததோடு, நான்கு பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

தமிழகத்தில் மரண தண்டனைக்கு எதிராகத் தொடர் பிரச்சாரங்கள், போராட்டங்கள் நடைபெற்றன. ராஜிவ் காந்தி வழக்கில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென பல தரப்பினரும் கோரியதன் விளைவாக, சோனியா காந்தி நளினிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையைக் குறைக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து அப்போதைய தி.மு.க. அமைச்சரவை, நளினிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. அப்போது சோனியா காந்தி, ‘என் கணவர் மரணத்திற்காக எந்த ஒரு உயிரும் பலியாவதை நானோ, என் குடும்பத்தினரோ விரும்பவில்லை' எனக் குறிப்பிட்டார்.தற்போது குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமெனக் கூறியிருப்பதைத் தொடர்ந்து, “ராஜிவ் காந்தி வழக்கில் உடனடியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்'' என அவ்வழக்கின் விசாரணை அதிகாரியான கார்த்திகேயன் கூறியுள்ளார். ராஜிவ் காந்தி வழக்கில் வழங்கப்பட்ட மரண தண்டனை குறித்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளபோது, ஓய்வுபெற்ற அதிகாரியான கார்த்திகேயன், இதுபோன்று கூறுவது கண்டனத்திற்குரியது.1999 முதல் கடந்த ஆறு ஆண்டுகளாக முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மரண தண்டனையைச் சுமந்து கொண்டு சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றனர். "ஒருவர் மரண தண்டனையை எதிர்நோக்கி மூன்று ஆண்டுகளுக்கு மேல், அந்த அச்சத்திலேயே இருக்க நேரிட்டால் அவரைத் தூக்கிலிட முடியாது; தண்டனையைக் குறைத்தாக வேண்டும்'' என உச்ச நீதிமன்ற நீதிபதி சின்னப்ப (ரெட்டி) கூறியிருப்பது, இங்கு கடைப்பிடிக்கப் படவில்லை.வீரப்பன் தொடர்புடைய வழக்கில், மைசூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையைக் குறைக்க வேண்டுமென மேல்முறையீடு செய்தபோது, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து சைமன், பிலவேந்திரன், ஞானபிரகாஷ், மாதையன் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேல்முறையீடு மனுவின் மீது மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பது, சட்டப்படி தவறானது என்பதை உச்ச நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானபிரகாஷ் வீரப்பனை நேரில் பார்த்ததுகூட கிடையாது என்பதும், அவர் தான் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு வீரப்பனை ஒரு முறையாவது பார்க்க வேண்டுமெனக் கூறியுள்ளதும், மரண தண்டனை வழங்குவதன் நியாயத்தை உடைத்தெறிகிறது.

நாகர்கோயில் நீதிமன்றத்திற்குள் அய்யாவு என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் ஷேக் மீரான், செல்வம், ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்ததால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றமும் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இவ்வழக்கு விசாரணைக்காக நீதிபதிகள் செலவழித்த நேரம் எவ்வளவு தெரியுமா? மூன்று பேரின் உயிரைப் பறிக்கும் இந்தத் தீர்ப்பை வழங்க, நீதிபதிகள் செலவிட்டது சில நிமிடங்கள் மட்டுமே."ஒருவருக்கு மரண தண்டனை வழங்கும்போது, அவர் தொடர்பான வழக்கின் அனைத்து அம்சங்களும் மிகவும் ஆழமாக ஆராயப்படுகிறது. அதன்பிறகே, மரண தண்டனை வழங்கப்படுகிறது' என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.சி. லகோத்தி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற நாளன்று (31.10.2005) பேசியுள்ளார். மரண தண்டனையை நீக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். லகோத்தியின் கருத்து மிகவும் அபத்தமானது என்பதற்கு, மேற்சொன்ன வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தனித்தனியே வழங்கிய தீர்ப்புகளே சான்று.எந்த நீதிமன்றம் தாமாகவே உண்மைகளைக் கண்டறிந்து அதன் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்க முடியாது.

குற்றத்தைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, காவல் துறை நீதிமன்றத்தின் முன் வைக்கும் ஆவணங்கள், சாட்சியங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே நீதிபதிகள் தீர்ப்பளிக்க முடியும். காவல் துறை பதிவு செய்யும் வழக்குகளில் 75 சதவிகிதம் பொய்யானவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீதிபதிகள் தீர விசாரித்து தண்டனை வழங்கினால்கூட, தவறு நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்பதற்கு பாண்டியம்மாள் வழக்கே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.மதுரை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள் கொல்லப்பட்ட வழக்கில், அவரது கணவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது காவல் துறை. அவர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையும் நடைபெற்றது. விசாரணை முடிந்து, தீர்ப்புச் சொல்லப்பட இருந்த நேரத்தில், கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்ட பாண்டியம்மாள் திடீரென நீதிபதி முன்பு ஆஜரானார். ஒட்டுமொத்த நீதித் துறையே வெட்கித் தலைகுனிந்தது. ஒருவேளை பாண்டியம்மாள் கணவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு அதுவும் நிறைவேற்றப்பட்டிருந்தால், இக்குற்றத்திற்கு யார் பொறுப்பேற்பது?

"நீதிபதிகள் பொதுவாகப் பிற்போக்கு எண்ணம் உடையவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்'' என உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் கூறியுள்ளது உண்மைதான் என்பதை, இத்தீர்ப்பு வழங்கிய முறை தெளிவாக்குகிறது. இந்நிலையில் அப்துல் கலாம், எட்டு ஆண்டுக் காலமாக குடியரசுத் தலைவர் மாளிகையில் உறங்கிக் கிடந்த கருணை மனுக்களைத் தூசி தட்டி எடுத்து பரிசீலனை செய்து முடிவெடுத்திருப்பது, மனித உரிமைகளுக்குக் கிடைத்த வெற்றியே. ‘மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமெனக் கூறப்பட்ட 50 பேரில் 20 பேர் கொடிய குற்றம் புரிந்தவர்கள் எனக் கூறி அவர்களுக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது' என உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதன் பிறகும் உள்துறை அமைச்சகத்திற்கு அனைவருடைய மரண தண்டனையையும் குறைக்க வேண்டுமென குறிப்பு எழுதியுள்ளது, அப்துல் கலாமின் மனித நேயத்தையே காட்டுகிறது.மரண தண்டனை கூடாது என்பதே மனிதநேயமுள்ளவர்களின் கோரிக்கை. இதன் பொருள் தண்டனையே கூடாது என்பதல்ல. ஏற்றத்தாழ்வு நிறைந்த, சாதியப் பாகுபாடுகள் நிலவும் இச்சமூகத்தில், விளிம்பு நிலையில் வாழும் மக்கள் தங்களின் வாழ்க்கைக்காக கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது. போதிய அளவில் கல்வியறிவு அளிக்கப்படாமல், வேலைவாய்ப்பு எட்டாக்கனியாகி, வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் நிலை இருக்கிறது. குற்றவாளிகள் உருவாவதை இப்படியான சமூகப் பின்னணியிலிருந்து பார்க்க வேண்டும்.

குற்றம் புரிபவர்கள் திருத்தப்பட வேண்டுமென்பதே நோக்கம் என அரசாங்கம் ஒருபுறம் கூறிக்கொண்டே மறுபுறம் மரண தண்டனையை வலியுறுத்துவது மிகப் பெரிய முரண்பாடாகும்.இந்தியாவில் 1950 முதல் மரண தண்டனை வழங்கப்பட்ட 75 வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அமெரிக்காவில் 1973 முதல் 119 பேர் மீது விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. 1990 முதல் இன்று வரை 40 நாடுகள் மரண தண்டனையைக் கைவிட்டுள்ளன. ஆனால், இந்திய அரசு மரண தண்டனை குறித்து இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது. பாகிஸ்தானில் இந்தியாவைச் சேர்ந்த சரப்ஜித் சிங்கிற்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய, இந்திய அரசு கடும் முயற்சி எடுத்தது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங், மனித நேய அடிப்படையில் இப்பிரச்சினையை அணுகுவதாகக் கூறினார். அதே நேரத்தில், குடியரசுத் தலைவர் இந்தியாவிலுள்ள 50 பேருக்கு மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்று கூறியிருப்பதை மட்டும் இந்திய அரசு எதிர்ப்பது ஏன்?மரண தண்டனையை ரத்து செய்து மன்னிப்பு வழங்க வேண்டுமென அப்துல் கலாம் கூறியுள்ளதை பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஒரு சிலர் எதிர்த்துள்ளனர். நாடாளுமன்றத்தில் விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் கூறியுள்ளார். ‘மரண தண்டனையைக் குறைப்பது குறித்து நாடாளுமன்றம் கூடி விவாதித்து நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறேன்' என அப்துல் கலாம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ளார். தமிழகத்திலுள்ள தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., சி.பி.அய்., சி.பி.எம். போன்ற மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள், மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய சரியான தருணமிது.

மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள 50 பேரின் உயிரைக் காப்பதோடு, இந்திய அரசியல் சாசனப் புத்தகத்திலிருந்தே மரண தண்டனை நீக்கப்பட வேண்டும். மனித உரிமை அமைப்புகள், மனித நேயமுள்ளவர்கள், நீண்ட காலமாகக் கோரிவருவதை நிறைவேற்ற அனைவரும் பாடுபட வேண்டும். குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மரண தண்டனை ஒழிப்புக்கு ஆதரவுக் கரம் நீட்டியிருப்பதைப் பற்றிக் கொண்டு, மனித உரிமைக்கானப் போராட்டத்தைத் தொடர வேண்டும்.

மரண தண்டனையிலும் வர்ணாசிரமம்!மரண தண்டனை, எந்த விதத்திலும் குற்றத்தைத் தடுப்பதில்லை. இந்தியாவில் நிலவும் சமூக அமைப்பைக் கருத்தில் கொண்டு சட்ட ரீதியான மரண தண்டனை ழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். தீட்டு என்பதன் அடிப்படையில் இயங்கும் இந்திய சமூக அமைப்பின் உளவியல் ‘சதுர்வர்ணம்' என்ற கோட்பாட்டில், ஆழமாக வேரூன்றி இருக்கிறது. பசுவதையும், பார்ப்பன வதையும் செய்யக் கூடாது என்று இந்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்திய நீதிமன்றங்களில் செயல்பட்டுவரும் பெரும்பாலானவர்கள், இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். இதன் விளைவாக, காலனிய கால இந்தியாவிலும், சுதந்திர இந்தியாவிலும் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களே (பழங்குடியினர், தலித்துகள், இஸ்லாம், சீக்கிய மதச் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள்).மறுபுறத்தில், அதே குற்றத்தைச் செய்த ஆதிக்கச் சாதியினருக்கு குறிப்பாகப் பார்ப்பனர்களுக்கு மரண தண்டனை வழங்குவது என்பது, அரிதான ஒன்றாகவே இருந்திருக்கிறது.

அமெரிக்காவில் ஒரே விதமான குற்றத்திற்கு வெள்ளையர்களைவிட, கருப்பர்களுக்குதான் அதிகளவில் மரண தண்டனை தரப்படுகிறது. அதுபோல, இந்தியாவில் சாதிய சமூக அமைப்பின் கீழ் மிக அதிகமான அளவுக்கு மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களே!
- குந்தன் சி. மேனன், பொதுச் செயலாளர், மனித உரிமை அமைப்புகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு, கேரளா

மரண தண்டனை நிறை வேற்றப்படும் முறைகள்சவுதி அரேபியா, ஈராக் : தலையை வெட்டுதல்அமெரிக்கா: மின்சாரத்தின் மூலம், கொடூரமான ஊசி மூலம்ஆப்கானிஸ்தான், ஈரான்: கல்லால் அடித்துக் கொல்வதுஎகிப்து, ஜப்பான், ஜோர்டான், பாகிஸ்தான், இந்தியா, சிங்கப்பூர்: தூக்குத் தண்டனைசீனா, கவுதமலா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து: கொடூரமான ஊசிமூலம், துப்பாக்கியால் சுடுவதுபெலாரஸ், சோமாலியா, தாய்வான், உஸ்பெகிஸ்தான், வியட்நாம்: துப்பாக்கியால் சுடுவது

மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நாடுகள்‘அம்னஸ்டி இன்டர்நேஷனல்' தகவல்களின்படி, 1990 இல் இருந்து 40 நாடுகள் மரண தண்டனையை ஒழித்து விட்டன. மொத்தத்தில் 120 நாடுகளில் மரண தண்டனை சட்டத்திலிருந்தும், நடைமுறையிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. 85 நாடுகள் எல்லா வகை ‘கிரிமினல்' குற்றங்களுக்கும் மரண தண்டனையை ரத்து செய்திருக்கின்றன. 24 நாடுகள் நடைமுறையில் மரண தண்டனையை ரத்து செய்துள்ளன. சட்ட ரீதியாக இன்னும் ஒழிக்கவில்லை. இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளாக அவை மரண தண்டனையை யாருக்கும் அளிக்கவில்லை.11 நாடுகள் போர்க்கால குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை அளிக்கின்றன.

"மரண தண்டனை வேண்டாம்''உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால் "இன்று இந்திய குற்றவியல் சட்டம், அரிதிலும் அரிதான வழக்குகளில் மரண தண்டனை அளிக்கலாம் என்று கூறுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இது நிலைப் பெற்றிருக்கும்வரை, நமக்கு சொந்தக் கருத்துகள் இருப்பினும் அதை ஒதுக்கி வைத்துவிட வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். இந்தத் தன்மையின் கீழ் வழக்குகள் இருக்கும் தருணத்தில், மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனில் அது விதிக்கப்பட்டாக வேண்டும். மரண தண்டனை குறித்த எனது சொந்தக் கருத்துகளை முன்னிறுத்தி சட்டத்திற்குப் புறம்பாக, அது வேண்டாம் என்று சொல்ல மாட்டேன்.உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இல்லாமல், இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் என் கருத்தைக் கேட்டால், நான் மரண தண்டனை வேண்டாம் என்றுதான் வலியுறுத்துவேன். அதற்குப் பதில் வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை அளிக்கலாம். அய்ரோப்பா முழுவதும் மரண தண்டனை இல்லை. அமெரிக்காவின் பல மாநிலங்களில் மரண தண்டனை இல்லை. வேறு பல நாடுகளிலும் அது இல்லை. இது, ஒட்டுமொத்தமாக சமூக - அரசியல் கேள்வி சார்ந்ததாகும். இது தொடர வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து இந்திய நாடாளுமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும்.''‘தி இந்து' 21.10.2005



"மரண தண்டனை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்''
-டாக்டர் அம்பேத்கர்

"...நமது அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியாக ‘உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யும் உரிமை' நிர்ணயம் செய்யப்பட வேண்டுமா? அல்லது எத்தகைய கிரிமினல் மேல் முறையீடுகளை உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொள்ளலாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை, நாம் நமது நாடாளுமன்றத்திடமே அளித்து விடலாமா? இந்தக் கேள்விகளை, தவிர்க்க இயலாத ஒரு நியதியாக உருவாக்க நான் விரும்பவில்லை. மேலும், கேள்விகளுக்கான எனது தீர்மானமான பதில் என்று எதையும் இந்தச் சூழலில் நான் கூற விரும்பவில்லை.எனக்கென்று தனிப்பட்ட கருத்துகள் உள்ளன. பிரச்சனைகள் எழும்போது, எனது கருத்துகளை நான் அதன் மீது திணிப்பதில்லை. குறை நிறைகளை சீர்தூக்கி, திறந்த மனதுடன்தான் பிரச்சனைக்கான தீர்வினைத் தருகிறேன். கிரிமினல் மேல் முறையீடுகளை விசாரிக்கப் போதுமான அதிகாரத்தை, உச்ச நீதிமன்றத்திற்கு நமது நாடாளுமன்றமே வழங்கிவிடலாம். உச்ச நீதிமன்றத்திற்கானப் பணியின் அளவையும், உச்ச நீதி மன்றத்தால் எவ்வளவு வேலை செய்ய முடியும் என்பதையும், அங்கு பணியாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையையும், அதற்கானப் பொருளாதார செலவுகளையும், நமது நாடு சந்திக்க முடியுமா என்பதற்கானப் புள்ளிவிவரம் திரட்டப்பட்டு, அதை நமது நாடாளுமன்றம் ஆய்வு செய்ய வேண்டும்.மரண தண்டனை மேல் முறையீட்டு வழக்குகளை உச்ச நீதிமன்றமே விசாரிக்கலாம் என்பதற்கு மாறாக, மரண தண்டனையை முழுவதுமாக ஒழித்து விடுவதை நான் ஆதரிக்கிறேன் (கேளுங்கள், கேளுங்கள்). இந்த முடிவைப் பின்பற்றுவதே சரியானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதனால் பல முரண்பாடுகள் முடிவிற்குக் கொண்டு வரப்படும்.

நமது நாடு அகிம்சையில் நம்பிக்கை கொண்ட நாடு. அகிம்சை நமது நாட்டின் பண்டைய கலாச்சாரம். மக்கள் தற்போது தங்களின் வாழ்வியல் நெறியாக இதனைப் பின்பற்றாமல் இருந்தால்கூட, அகிம்சையை ஒரு நியாயத் தீர்ப்பாக மக்கள் முடிந்தவரை பின்பற்ற வேண்டும் என விரும்புகின்றனர். இந்த உண்மைக்கு மதிப்பளிக்கும் வகையில், நாம் இந்த மக்களுக்கு ஆற்ற வேண்டிய சரியான பணி மரண தண்டனையை ஒட்டுமொத்தமாக ஒழிப்பதுதான்.''‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 13, பக்கம் 639

நன்றி: தலித் முரசு
முழுமையான செய்தியை தலித் முரசில் பார்க்கவும் முழுமையான கட்டுரைக்கு இங்கே சொடுக்கவும்