Showing posts with label விபத்து. Show all posts
Showing posts with label விபத்து. Show all posts

Thursday, August 14, 2008

புதுச்சேரியில் தீ விபத்து - 40 குடிசைகள் எரிந்து சாம்பலாயின - வீடியோ காட்சிகள் - உதவிட வேண்டுகோள்!



புதுச்சேரியின் நகரத்திற்கு அருகேயுள்ள மீனவர் கிராமமான வைத்திக்குப்பத்தில் இன்று (14-08-08) இரவு 9.00 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 40 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. தற்போதைய நிலவரப்படி உயிரிழப்பு ஏற்பட்டதற்கான தகவல் ஏதுமில்லை. உடைமைகள் முற்றிலும் எரிந்து மக்கள் கட்டிய துணியுடன் நின்றது துயரமான காட்சி.

அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. லட்சுமிநாராயணன், அப்பகுதி கவுன்சிலர் திருமதி பிரேமலதா, தேங்காய்த்திட்டு கவுன்சிலர் திரு.எஸ்.பாஸ்கரன் உள்ளிட்ட பலர் தீ விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டனர்.

புதுச்சேரி அரசின் வருவாய்த் துறை அதிகாரிகள் அப்பகுதியில் முகாமிட்டு மக்களுக்கான உதவிகளைச் செய்து வருகின்றனர்.

மீனவர்கள், பழங்குடியினர் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். பலகாலமாக மின்சாரம் இல்லாத அப்பகுதிக்கு தற்போதுதான் அரசிடம் போராடி மின் இணைப்பு வாங்கித் தந்ததாக புதுவை மாநில பழங்குடியின மக்கள் கூட்டமைப்புத் தலைவர் திரு. இராம்குமார் கூறினார்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், பெரியார் தி.க. செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ, கிருத்துவ மக்கள் கூட்டமைப்புத் தலைவர் சாமி ஆரோக்கியசாமி ஆகியோர் தீ விபத்து நடந்த உடனேயே அப்பகுதிக்குச் சென்று தீயை அணைக்க உதவினர்.

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எழுப்பிய அவலக் குரல் அனைவரையும் கலங்கச் செய்தன.

நிர்கதியாக நிற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுட முன்வர அனைவரையும் வேண்டுகிறோம்.

உதிவி செய்திட முன்வருவோர் தொடர்புக் கொள்ள:

திருமதி பிரேமலதா,
நகராட்சி கவுன்சிலர், குருசுக்குப்பம்.

கைபேசி எண்: 9789545437.