Saturday, September 17, 2011

மரண தண்டனையை ரத்து செய்ய கோரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஆக. 31: மரண தண்டனையை ரத்து செய்ய கோரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பினர் இன்று (ஆகஸ்ட் 31) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும், பாராளுமன்றம் தாக்குதல் வழக்கில் அப்சல் குரு உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள தூக்கு தண்டனை சிறைவாசிகளின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும், நாகரீக சமூகத்திற்கு ஏற்படையதல்லாத, மனித உரிமைகளுக்கு எதிரான மரண தண்டனையை சட்டப் புத்தகத்தில் இருந்து முற்றிலுமாக நீக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் சுதேசி பஞ்சாலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமை தாங்கினார். தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி தொடக்க உரையாற்றினார். மனித உரிமை கழக தலைவர் சக்திவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகன்நாதன், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் மூர்த்தி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச்செயலாளர் உ.முத்து, மதிமுக முன்னாள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வேணுகோபால், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது சலீம், கான்சிராம் பகுஜன் சமாஜ் கட்சியின் அமைப்பாளர் முனுசாமி, செம்படுகை நன்னீரகம் தலைவர் ராம்மூர்த்தி, மக்கள் ஜனசக்தி இயக்க தலைவர் புரட்சிவேந்தன், மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் அபிமன்னன், இலக்கிய பொழில் இலக்கிய மன்ற தலைவர் பெ.பராங்குசம், கலைமாமணி வேல்முருகன், புதுவை தமிழ் எழுத்தாளர் கழக செயலாளர் தமிழ்நெஞ்சன், ஹோப் நிறுவன் பொறுப்பாளர் விக்டர், ஆதிதிராவிடர் உரிமைக் கழகத் தலைவர் பாலசுந்தரம், கிராமப்புற கல்வி, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் மேம்பாட்டு இயக்கம், தமிழர் களம் பிரகாசு, அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் சின்னப்பா, புதுச்சேரி மக்கள் விழிப்புணர்ச்சி இயக்க செயலாளர் சரவணன், மரண தண்டனைக்கு எதிரான இளைஞர் மாணவர் இயக்க தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

No comments: