Friday, May 04, 2007

அத்தியப்பா தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில் மே நாள் விழா


உழைக்கும் தொழிலாளர்களின் உரிமையைக் காக்கும் வகையில், மே-1 அன்று புதுச்சேரி, மேட்டுப்பாளையம் அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில் மே நாள் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு, அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிலாளர் நலச் சங்கத்தின் செயலாளர் ம.சந்திரகுமார் தலைமை தாங்கினார். சங்கத்தின் கொடியை மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் மு.முத்துக்கண்ணு ஏற்றினார்.

செம்படுகை நன்னீரகம் அமைப்புத் தலைவர் கு.இராம்மூர்த்தி, செயலாளர் பார்த்திபன், தந்தை பெரியார் தி.க. செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ, அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிலாளர் நலச் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கோ.சுகுமாரன், தலைவர் சு.சின்னப்பா, துணைத் தலைவர் மு.பொன்னுசாமி, துணைச் செயலாளர் சு.முருகன், இணைச் செயலாளர் லோ.ராஜேந்திரன், பொருளாளர் கி.கண்ணன், துணைப் பொருளாளர் கி.பாலாஜி உட்பட 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துக் கொண்டனர்.

தொழிலாளர் உரிமைகள் குறித்து அனைவரும் பேசினர். அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிலாளர் நலச் சங்கம், மக்கள் உரிமைக் கூட்டமைப்புடன் இணைந்தது.

No comments: